Monday, June 27, 2011

சாரு நிவேதிதா Vs மனுஷ்யபுத்திரன் ஹெவிவெயிட் சாம்ப்பியன்ஷிப்


அவிழ்ந்து தொங்கிய சாருவின் டவுசரை அவரே போதும் போதுமெனுமளவு தாங்கிப் பிடித்த அல்லக்கைகளின் ஆட்டம் நிறைவடையவில்லை இன்னமும். 
வழக்கமாக சாருவின் சத்துக்கு 4 நாட்கள் தான் அடிப்பார்கள் பிறகு மூத்திரச் சந்தில் தூக்கியெறிந்துவிடுவது வழக்கம். இம்முறை செருப்படி உற்சவம் சரவெடியாய்த் தொடர்கிறது. சாருவின் மன்மதலீலையை வினவும் அ முதல் ஃ வரை கவர் ஸ்டோரி எழுதி சந்திக்கு இழுத்துவிட்டனர்.


இதற்கிடையில் இணையத்தில் சாருவுக்கான சொம்பு முழக்கங்களும் பின்கண்டவாறு காமெடி பஜார் நிகழ்த்தின

*எழுத்தாளர்னா கொஞ்சம் முன்ன பின்ன இருக்கத்தான் செய்வார்கள்
*பாஸ்வேர்டை வாங்கிய பெண் தானாகவே ஏன் இட்டுக்கட்டியிருக்க மாட்டாள்
*இப்படியெல்லாம் செய்தால் சாரு பாலிடாயில் குடித்துவிடுவார்!
      
பாலிடாயில் குடிக்குமளவு மன உளைச்சலுக்குள்ளான திருவாளர் சாரு பிச்சாவரம் பிறந்தநாள் பார்ட்டிகளை சிறப்பித்து விட்டு ஐநாக்ஸில் அவன் இவன் பார்த்து அது பீயைப் போலிருக்கிறது என்று விமர்சனமும் செய்து விட்டார்!


மிக நார்மலாக இருப்பது போல தெரிய வேண்டுமல்லவா! அல்லக்கை வட்டத்தில் உலக இசையை அல்லக்கைகளுக்கு அறிமுகம் செய்து வைத்தார். வழக்கம் போலில்லாமல் கருகும் நாற்றமெடுத்த்தால் ஏன் லைக்குகள் இல்லை என்னமாதிரியான சண்முகம் இது என புலம்பியழுதார்.
இதைத் தொடர்ந்து அல்லக்கைகளை சமாதானப் படுத்தவும் புத்துணர்ச்சி பெறச் செய்யவும் உயர்மட்ட செயல் திட்டக்குழு கூட்டப்பட்டு உதயமானது தான் மனுஷ்ய புத்திரன் வெர்சஸ் சாரு ஹெவி வெயிட் சாம்ப்பியன்ஸிப் நாடகம்!
எழுத்தாளரும் பதிப்பக உரிமையாளரும் முச்சந்தி மூணு சீட்டு முறையில் கடிதப் பரிவர்த்தனை செய்யும் ஒரே வெளிப்படையான கம்பேனி இதுதான் போல!
பிராது இதுதான்! சாருவின் புத்தகம் மார்கெட்டில் கிடைக்கவில்லை! ரீலு அந்துடுச்சுங்கறீங்களா! மேல படிங்க...


இதுகாறும் மொத்தம் 80 பிரதிகள் விற்றுள்ளதாக சாரு சர்ட்டிஃபிகேட் கொடுத்த தேகம் நாவலுக்குத்தான் இத்தனை களேபரங்களும்!


அல்லக்கை விழா ஒன்றுக்கு அல்லக்கைகளால் அல்லக்கைகளுக்கு வழங்க 8 தேகம் புத்தகம் தேவைப்பட்டதாம்! அதை உயிர்மையில் கேட்டதற்கு இப்போ இல்ல போயிட்டு அப்பறம் வா என்று சொல்லிவிட்டார்களாம்! இது எப்பேர்ப்பட்ட விவகாரம்! இதற்கு உடனடித்தீர்வு எட்டப்படாவிட்டால் 2012 ருத்ரம் என்றொரு டப்பிங் படம் வெளியானதே அது உண்மையாகிவிடும் அல்லவா! இதை தனது தளத்தில் வெளியிடுகிறார் சாரு!


அதில் உள்ள கருத்துக்கள் சில!


தான் எந்த சக்தியும் இல்லாத தனிமனிதனாம்! பாவப்பட்ட சென்மமாம்! ஆனால் முதலமைச்சர் மகளை லவ்வி வந்தாராம்!
இவர் ஒரு தூசாம்! ஆனால் கமலஹாசனே இவரைப் பார்த்தால் மூத்திரம் பேய்ந்துவிடுவாராம்!


ஏன் இப்படி உளறுகிறாய் என்று கேட்டுப்பாருங்கள்! அது வேற வாய் இது நாறவாய் என்று விளக்கம் சொன்னாலும் சொல்வார்!
இந்த கேனத்தனமான பதிவுக்கு ம.பு அளித்த விளக்கமாக சாரு பதிவேற்றியுள்ளது!
அன்புள்ள சாருநிவேதிதா அவர்களுக்கு
மீண்டும் ஒரு முறை உங்கள் புகாரைப் படித்தேன். பைண்டிங் அல்லது கோடோனிலிருந்து பிரதிகள் வந்துகொண்டிருக்கிறது ஒரு மணி  நேரம் ஆகும் என்று சொன்னால் நீங்கள் அனுப்பிய ஆள் உங்களிடம் வந்து புகார் செய்கிறார்.  நீங்களும் அதை அப்படியே வழிமொழிகிறீர்கள். உங்களை அழிப்பதன் மூலம் எனக்கு என்னகிடைக்கப் போகிறது? அல்லது உயிர்மையைப் பற்றி இத்தகையை ஒரு பழியை தொடர்ந்து எழுதுவதன் மூலம் உங்களுக்குதான் அடைவதற்கு ஏதாவது இருக்கிறதா? என்னை பொய்யன் என்று நிறுவுவது அவ்வளவு சுலபம் அல்ல. நீங்கள் என்னதான் விரும்புகிறீர்கள்?  உங்களுடைய வெளிவந்திருக்கும் அத்தனை புத்தகங்களையும் ஒரு கணம் எடுத்துப் பாருங்கள். மொத்தச் சூழலும் உங்களுக்கு எதிராக இருந்த ஒரு நேரத்தில் உங்களை தூக்கிப் பிடித்த ஒரே அமைப்பு உயிர்மை மட்டுமே. அதற்கான பரிசைத்தான் இப்போது கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
மிக்க நல்லது. நீங்கள் எதற்ககாவோ என்னை உணர்ச்சிவசப்பட செய்ய விரும்புகிறீர்கள். அதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. உணர்ச்சி வசப்படுவதாக இல்லை. அது எனது பொழுதுபோக்கும் அல்ல
என்றும் அன்புடன்
மனுஷ்ய புத்திரன்
உடன் சாரு பதிலெழுதுகிறார்!


 உங்களுக்கு என்னைக் கண்டால் ஆவதில்லை! புழுதி வாறித்தூற்றுகிறீர்கள்! நான் எப்படித்தின்பது? பீயைப் பேண்டு தின்பதா என்று!

அவரது பதிலுக்கும் சாரு பீயைப் பேண்டுதின்பதற்கும் என்ன சம்பந்தம் என்றுதான் புரியவில்லை.

ஆக ஆட்டம் ஆரம்பமாகியிருக்கிறது! சாருவின் அல்லக்கைகளுக்கு பரபரப்பான ஒரு விவாதக்களம்! அல்லக்கைகள் சாருவின் டவுசரை விட்டு விடாமல் இருக்க பிரச்சனையை திசை திருப்ப ம.பு-சாரு லடாய் நாடகம்!

     சாரு தனக்கிருக்கும் ஸ்த்ரீலோலன், பிச்சைக்காரன்,குப்பிகாட்டி இமேஜை வியாபாரமாக்குவது போதாதென ம.புவும் தன் பங்குக்கு தனது  நல்ல பிள்ளை இமேஜை கடை விரித்துள்ளார்.
நீங்களும் நானும் சாருவை வண்டி வண்டியாக கழுவி ஊத்தும் போது சாருவின் யோக்யதை மனுஷ்ய புத்திரன் அறியாததா?
அவரே சொல்கிறார் எல்லாரும் விட்டாலும் நான் தாங்கிப் பிடிக்கவில்லையா என! அவர் இன்னமும் பிடிக்கிறார்! 80லிருந்து எண்ணிக்கையைக் கூட்ட இதுவுமோர் யுக்தி!
சாரி,ஈடுதேங்காய் பொறுக்கும் அனுமதி பெற்ற அல்லக்கை(கள்), கூட்டுக்களவாணி(கள்) ஆகிய மூவருக்கும் தெரியும் தாங்கள் செய்வது இன்னதென்று! வெல்லம் தின்று புறங்கை நக்குபவர்கள் இவர்கள்! சுற்றிக் கூடிநிற்கும் ஒன் யூஸ் அல்லக்கைகள் நிலைதான் பரிதாபம்! கூட நின்ன பாவத்துக்கு குண்டி முழுக்கத் தழும்பு வாங்குகிறார்கள்!

Thursday, June 23, 2011

ஆகச்சிறந்த எளுத்தாளனின் அதிபுதிய அடிப்பொடிகள்



அய்ம்பது வயசுக்குமேல் நிரம்பிய, மலையாளத்தின் ஆகச்சிறந்த எழுத்தாளன் தான் தான் என்று தமிழ் கூறும் நல்லுலகில் பீத்திக்கொண்ட, பிச்சை எடுத்தாவது ஜாக்கி ஜட்டி போடுவேன் என்று கொஞ்சம் கூட லஜ்ஜையில்லாமல் வாழ்ந்துவரும் சாருநிவேதிதா என்ற அறிவுகெட்ட அழகனை அவனது உண்மைத்தன்மைக்காக மட்டுமே நான் கூட ஆதரித்துவந்தேன்.

ஆனால் அவனது உண்மைத்தன்மை என்பது அப்பட்டமான மேல்பூச்சு, இவன் சராசரிக்கும் கீழான மனிதன் என்று சொல்லக்கூட முடியாத ஒரு கேவல மிருகம் என்று அனைவரும் கீழே தள்ளி முகத்தில் பிய்ந்த செருப்பால் அடித்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில், சாரு நிவேதிதாவின் வலையுலக பி.ஆர்.ஓக்கள் கூட இந்த ஆள் செய்திருப்பான் என்று உறுதியாக நம்பும், ஆதாரங்களை அப்பட்டமான முன்வைத்ததும் அனைவருமே நம்பும் ஒரு விஷயத்தை, உண்மைத்தன்மை நிரம்பிய, ஒரு நம்பிக்கை துரோகத்தை, உனக்கு நான் தந்தைபோல என்று சொல்லி பழகிய ஒரு 'பிரபல' எழுத்தாளனின் உடைந்து தொங்கிய முகமூடியில் இருந்து கிளம்பிய வீச்சத்தை, அது எழுப்பிய அதிர்ச்சி மதிப்பீடுகளை உள்வாங்கக்கூடிய அளவில் கூட இல்லாத ஒருவரை, தாங்கி பிடிக்க வந்தவர்கள் யார் தெரியுமா ?

சாரு நிவேதிவை முன் பின் பார்த்திராத, சாரு நிவேதிதா எழுதிய (?) ஒரு கந்தாயத்தை கூட வாசித்திராத சிலர். இந்த ஆள் சராசரி எழுத்தாளர் அல்ல, சராசரிக்கும் கீழானவன் என்பதை இலக்கிய உலகம் சொல்லவேண்டாம், இவன் தினமும் சலவைக்கு துணி கொடுப்பவன் கூட சொல்லுவான். ஆனால் மெத்தப்படித்த மருத்துவர் ஒருவர் கடந்த மூன்று நாட்களாக படாத பாடுபட்டுக்கொண்டிருக்கிறார்.  அவருடைய பொய் குற்றச்சாட்டுகள் இவை தான்.

1. பாவம் சாரு. அவருடைய புகழை குலைக்க நினைப்பவர்களால் வலை வைத்து பிடிக்கப்பட்டிருகிறார். பதில் : (சாரு பாவம் என்பதை சாருவே நம்பமாட்டார். வலை வைத்து பிடிக்க இந்த ஆளுடைய புகழ் உலகெங்கும் பரவியுள்ளதா என்ன ? வருடத்துக்கு வெறும் 80 புத்தகமே விற்கும், சோத்துக்கு பிச்சை எடுக்கும், இந்த ஜென்மம் அவ்வப்போது சொல்லும் ஜாக்கி ஜட்டி போட்டேன் (அவிழ்த்து பார்த்தால் தான் தெரியும் அது ஜாக்கி ஜட்டியா அல்லது பட்டாப்பட்டி அண்டர்வேரா என்று), அப்சலூட் வோட்கா குடித்தேன், நாப்பதாயிரம் கண்ணாடி போட்டேன் என்று பீற்றுவது எல்லாம் உண்மையாக இருப்பதாக நான் நம்பவில்லை. அப்படியே உண்மையாக இருந்தாலும் இது ஓசியில் வயிறு வளர்க்குற ஜென்மம், எவனாவது ஸ்டார் ஹோட்டலில் பிச்சை போட்டிருப்பான்)

2. அது பெண் அல்ல ஆண். பதில் : இதுவும் மருத்துவர் மெய்யாலிக்குமே நம்பும்(?) ஒரு விஷயம். அதாவது இவர் நம்புகிறாராம். அதனால் எல்லாரும் நம்பவேண்டுமாம். அடங்கொக்கமக்கா, இப்படி ஒரு பொய்யை நைஸாக பரப்புவது சாருவின் பழைய அடிப்பொடிகள், வெளியே சொல்லும் அளவுக்கு காரியமா செய்திருக்கிறான் சாரு, வெளிப்படையாக சப்போர்ட் செய்யமுடியாத நிலை. அதனால் இப்படி உள்ளடி வேலையில் இறங்கி அங்கங்கே சேட்டில் தூவி விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

3. அந்த பெண்ணும் உடன்பட்டுத்தான் இந்த காரியம் நடந்துள்ளது. பதில் : ஏற்கனவே நான் உனக்கு தகப்பன் மாதிரி என்று பழகிய பிரபல(?) எழுத்தாளர். திடீரென இப்படி இங்கிலீசும் தங்கிலீசும் தமிழும் கலந்த ஒரு ஆபாச எழுத்தை போடும்போது அது என்ன என்று தெரியாமலேயே பதில் சொல்ல வாய்ப்பு உண்டு. இது போன்ற அதிர்ச்சிகரமான சம்பவம் நடக்கும்போது எப்படி ரியாக்ட் செய்வது என்று தெரியாதவர்கள் உண்டு. எல்லாரும் மெத்த படித்த மருத்துவர்களா என்ன ? அல்லது மனோதத்துவத்தை கரைத்து குடித்த டாக்டர் ருத்ரனா ? உடனடியாக ரியாக்ட் செய்ய ? முதலில் ஒரு பிரபல எழுத்தாளர் தன்னிடம் இறங்கி வந்து பேசுகிறாரே என்று அவர் மீது மிகப்பெரிய மரியாதையை கட்டமைத்து வைத்திருப்பவர், இப்படி மிருகத்தனமான திடீர் தாக்குதலை எதிர்கொள்ளும்போது ம்ம் என்று சொல்லுவதால் அவரும் மெய்வழிபுணர்ச்சி (பின்னவீனத்துவ வார்த்தை) க்கு உடன்படுகிறார் என்று அர்த்தமா ? அப்படி உடன்பட்டிருந்தால் அதனை எக்ஸ்போஸ் செய்ய ஏன் முயல்கிறார் ? தனக்குள்ளே அழித்துவிட்டிருந்திருக்கலாமே ? இந்த எளிய உண்மை ஏன் மெத்தப்படித்த மண்டைகளுக்கு உறைக்கவில்லை ?

இந்த விஷயத்தை கொண்டாட்டமாக அணுகிய சில ஜென்மங்கள் வலையுலகில் இருக்கின்றன. தான் வகிக்கும் பதவிக்கும், வேலை பார்க்கும் இடங்களுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாமல் கீழ்த்தரமாக நடந்துகொண்டன. அந்த பெண்ணை எப்படி எல்லாம் டிபேம் செய்யவேண்டுமோ அப்படி எல்லாம், அவரை பற்றிய இல்லாத பொல்லாத தகவல்களை குறுஞ்செய்திவழியும், சாட் வழியும் பரப்பிய ஜென்மங்கள் அவை. அவைகளின் முகத்தில் அறைவது போல நானும் சில வார்த்தைகளை விடவேண்டியதாயிற்று. அதாவது நான் சொன்ன வார்த்தைகளை தான் அந்த ஜென்மங்கள் செய்தியாக்கிக்கொண்டிருந்தன. உண்மையில் உங்களுக்கு எல்லாம் அக்கா தங்கை என்று ஒருவர் இருந்து, அவர் இப்படியான ஒரு சம்பவத்தில் சிக்கினால் சர்வே போடுவீர்களா ? என்று அவர்களை கேட்கிறேன்.

ஊகத்தினால் ஆன உங்கள் இத்துப்போன பதிவுகளுடன் ஒரு ஆபாச வீடியோவையும் இணைத்து வெளியிட்டது போன்றதொரு வன்முறையினை நீங்கள் இன்னொரு பெண்ணுக்கு எந்த விதத்திலும் செய்துவிட முடியாது.

ஒரு சிறிய மனோதத்துவ விஷயம் உண்டு. தான் அமைவிடத்தில் / வாழ்விடத்தில் / பணியிடத்தில், மற்றைய பெண்ணை அனுமதிக்கமாட்டார்கள் சிலர். அவர்களுக்கு எந்த விதமான நல்ல காரியங்களும் நடந்துவிட அனுமதிக்கமாட்டார்கள். அது ஏன் என்றால் ஒரு பெண் என்ற அட்வாண்டேஜ் தனக்கு மட்டுமே கிடைக்கவேண்டும். இன்னொரு பெண் அந்த இடத்தில் இருந்தால் தனக்கு கிடைக்கும் சலுகைகள் கிடைக்காது என்பதே அது. இதனை நானே நேரடியான உணர்ந்துள்ளேன். ஆக இவ்வாறு சாரு நிவேதிதா என்ற வீணாப்போன எழுத்தாளனை எந்த விதத்திலும் அறிந்திராத டாக்டர் ரோகிணி சிவாவின் அப்ரோச் ஏன் இப்படியாக இருக்கிறது என்பதை விளக்குகிறது. இங்கே யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் இழுத்துவிடாமல் டாக்டர் ரோகிணி சிவாவின் கடந்த மூன்று நாட்களான நடவடிக்கைகளை மட்டுமே வைத்து சொல்வது. (அவர் இன்னொரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையில் தான் விளையாடுகிறார் என்பதை இன்னும் உணராமல் காது செவிடாகவே இருக்கிறார்).

மருத்துவர் புருனோ சில கேள்விகள் கேட்டுள்ளார். அவருக்கும் அது பெண் அல்ல ஆண் என்று சந்தேகம். அதன் விளக்கங்களை அவருக்கு அளிப்பேன். இதன் மூலமாக நாங்கள் இங்கே நிறுவ முயல்வது என்ன என்று நினைக்கையில் ஆயாசமாக இருக்கிறது. ஒரு காம வெறி கொண்டலையும் பிசாசின் முகமூடியை கிழித்து தொங்கவிடும்போது, செக்சுவல் ஹராஸ்மெண்டில் சிக்கிய ஒரு சகோதரியின் மனக்காயங்களை ஆற்ற முயலும்போது, இது போன்ற அறிவுஜீவித்தனத்தை விடுத்து, அவருக்கு எப்படி உதவலாம் என்று இந்த அறிவுஜீவிகள் முன்வந்திருந்தார்கள் என்றால் அது ஆரோக்கியமானது. ஆனால் சம்பவத்தின் ஆத்தண்ட்டிஸிட்டியை மட்டுமே கேள்விகேட்டுவிட்டு, அப்படியே கிளம்பிப்போய்விடுவதுதான் உங்கள் நோக்கம், சாரு நிவேதிதா என்ற கிழட்டு பொம்பளை பொறுக்கியை பற்றி உங்களுக்கு எந்த கவலையும் இல்லை என்றால் தயவு செய்து அத்தையும் இத்தையும் கொஞ்சம் மூடிக்கொள்ளுங்களேன்.

பி.கு : அல்லக்கைகளின் அடுத்த முயற்சி ஒன்று, பேஸ் புக்கில் சாரு நிவேதிதா என்று ஒரு ஐடி மூலம் தொடர்ந்து இன்வைட் கொடுப்பது. அட டோமருங்களா இன்னும் எத்தனை காலம் இப்படி செய்யப்போறீங்க ? இதன் மூலம் சேட் செய்தது சாரு நிவேதிதாவே அல்ல, அவருடைய நாய்கள் பப்புவும் ஸோர்ரோவும் தான் என்றா ? அந்த நாய்களையாவது விட்டு விடுங்களேன் சாரு. (யார் கண்டா, அதுங்களை மொதல்ல வெட்னரி டாக்டர்ட்ட கூட்டிக்கிட்டு போகனும். 5 மணிக்கு முன்னால அதுங்களை என்ன செய்யறானோ இவன் )

Monday, June 20, 2011

சாரு நிவேதிதா - வக்கற்றவனின் வக்கிரம்


தமிழ் வலையுலகில் ஜல்லியடித்துத்தான் பிழைப்பை ஓட்டவேண்டும் என்று கங்கணம் கட்டித் திரிபவர்களுக்கான ஆளுமைகளில் முக்கியமான இரண்டு பேர் சாருவும், ஜெயமோகனும்! இதில் சாரு வின்னரில் கைப்புள்ளையை ரியாஸ் கான் குறிப்பிடுவது போல ’’அடித்தும் பாத்தாச்சு’’ ‘’அவுத்தும் பாத்தாச்சு’’ ரகம்! நித்தியானந்தா விவகாரத்தில் டவுசர் அவிழ்ந்த சாரு ஓவர் நைட்டில் யோக்கியனானது, மிசுகின் விவகாரத்திலும் அதே போல தோசையை திருப்பிப் போட்டது என அண்ணலது அளப்பறைக்கு அளவென்பதே கிடையாது. தன்மீதான விமர்சனங்களுக்கு எது மாதிரியும் இல்லாத புதுமாதிரியான ரியாக்சன்களை வழங்குவதில் சாரு ஒரு குட்டி கலைஞ்சர். 

சமீபத்திய அண்ணலது அதிரடி குறித்து தமிழச்சியின் லெஃப்ட் ரைட் பதிவு மூலம் அறிய நேர்ந்தது.


வெறும் கூகுள் ஐடி மட்டுமே வைத்துக் கொண்டு பிளாகுகளில் கமெண்ட் போட்டுக் கொண்டிருந்த காலம் முதலே எனக்குத் தெரிந்த சிறுமி அவள்! இன்றுவரையிலும் என் கணிப்பில்,மனிதர்களைப் படிக்கும் திறமையெல்லாம் கைவராத இளம் பெண்!  திடீரென முகநூலில் கவிதைகள் எழுத ஆரம்பித்தாள்! கணக்கில்லா லைக்குகளும் கமெண்ட்டுகளும்! சற்றேறக் குறைய அனைவரையும் நண்பர்கள் வட்டத்தில் இணைத்தாள்! நள்ளிரவில் நகை போட்டுக்கொண்டு பஸ் ஸ்டாண்ட் அருகில் கேட் வால்க் போவதைக் காட்டிலும் இணையத்தில் சொந்தப் புகைப்படத்தை ப்ரொஃபைலில் வைத்துக் கொண்டு ஒரு பெண் இருப்பது இன்னும் டேஞ்சர் போல! திடீரென சாரு தனது தளத்தில் மேற்கண்ட பெண்ணின் கவிதைகளை ஆகா ஓகோவெனப் புகழ்ந்து கட்டுரை நொட்டினார்! என்னடா எலி அம்மணமா ஓடுதேன்னு சந்தேகம் வந்தது! சிலரிடம் பேசவும் செய்தேன்! அவனைக் கலாய்ப்பதாக சொல்லி ஒரு எழுத்தாளனால் பாராட்டப்பட்டதை பெருமையாக நினைக்கும் அந்தப்பெண் சந்தோஷத்தை ஏன் கெடுக்கணும்னு விட்டாச்சு! 

ஆனால் இப்போதுதான் தெரிகிறது நிஜம்! வாசகியாக அறிமுகமான ஒரு பெண்ணை தன் இச்சைக்கு பயன் படுத்த தனது தளத்தில் அவளுக்கு விளம்பரம் கொடுத்திருக்கிறான் என்று! முகம் தெரியாத ஒருத்தியிடம் அவள் பெண்ணாகவே இருக்க வேண்டுமென்ற அவசியம் கூட இல்லை! சாட்டில் ஆழ்மன இச்சைகளுக்கு வடிகாலாய் உபயோகப் படுத்திக் கொள்ளுவது சாருவுக்கு வழக்கம் தான் போல. ஆனால் இவள் மிரண்டு விட்டாள்!
தனது நாவல்களில் வரும் கேரக்டர்களுக்கு எழுதும் வசனம் போலவே அப்பெண்ணிடமும் தூண்டில் போட்டிருக்கிறான் கிழட்டுப்பயல்! இவனிடம் நேரில் ஒரு பெண் போய், என்னடா வேணும் இங்க வா... என்றால் தலையணையை அடியில்  பொத்தினாப்பிடி வெச்சு உக்காந்துடுவான்! ஏமாளியா எதுனா பொண்ணு சார் சார்னு கூப்புட்டாதான் டிக்கி அட்டாளிக்கு ஏறிக்கும்! 





இவனது சாட்டிங் களேபரங்கள் இந்த வீடியோவில்!

வயசான காலத்தில் சுயமைதுனம் செய்வதற்கு இவனுக்கு இது போன்ற ரசிகைகள் தேவைப்படுகின்றனர் போல! இவன் குசு விட்டாலும் நுகர்ந்துவிட்டு ஜல்லியடிக்க அடிப்பொடிகள் இருக்கும் போது வீட்டுக்கே வரச்சொல்லி நினைத்தவாறெல்லாம் உதவ(!) சொல்லலாமே! நம்ம ஜல்லிகள் மாட்டோமென்றா சொல்லப் போகிறார்கள்! 

இவனது சில்லறைத்தனத்திற்கு இணங்கச் செய்ய தனது தளத்தில் விளம்பரம் கொடுப்பானாம்! இணங்க மறுத்தால் வியாக்கியானமாக விளக்கம் சொல்வானாம்! 

வாழ்க்கையைக் கொண்டாட்டமாக அணுகுவதாகக் கூறிக்கொண்டு 20 வயதுப் பெண்ணிடம் எச்சிக்கலைத்தனத்தைக் காட்டும் இவனைப் போன்ற பொறுக்கியை என்ன செய்யலாம்?!

Monday, June 13, 2011

நம்மால் என்ன செய்ய முடியும்?

சாதாரண பொதுமக்களாகிய நம்மால் என்ன செய்துவிட முடியும் என்று எண்ணும் லட்சம் தமிழர்களும், ஜூன் 26 மாலையில் மெரீனா கடற்கரைக்கு வாருங்கள். வரலாற்றை நம் பக்கம் திருப்புவோம்.

ஈழ வரலாறையும், தற்போதைய நிலையையும் எடுத்துரைத்து மெரீனாவிற்கு வாருங்கள் என அழைக்கிறார் தமிழருவி மணியன்.



மெழுகுதிரி ஏந்த,
மெல்லிதயம் கொண்டோரே
மெரீனாவிற்கு வாரீர்!

Thursday, June 2, 2011

மெல்லிதயம் கொண்டோரே மெரினாவிற்கு வாரீர்!

இரு வாரங்களுக்கு முன் மே 18 ம் தேதி அன்று மெரினாவில் ஈழப்படுகொலைகள் நினைவாக மெழுகுதிரி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. அப்பொழுது அங்கு வந்திருந்த பொது மக்கள் பலரும் என்ன நிகழ்வு நடைபெறுகிறது என்று கேட்டறிந்து அவர்களும் தத்தம் குடும்பத்தினரோடு மெழுகுதிரி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். அவர்களோடு பேசிக்கொண்டிருந்தபோதுதான் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இதுவரை நடைபெறவில்லை என்பதை உணர்ந்தோம்.

ஒவ்வொரு கட்சியினரும் அமைப்பினரும் இனப்படுகொலைகளைக் கண்டித்து பல்வேறு பொதுக்கூட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தியிருந்தாலும், பெருமளவிலான பொதுமக்கள் கலந்து கொள்ளும் நிகழ்வு இதுவரை நடைபெறவில்லை என்பதை அறிந்தோம். பொதுமக்களுக்கும் இதுபோன்ற ஒரு ஆதங்கம் இருப்பதையும் அறிய முடிந்தது. இந்தச் சூழலில் பொதுமக்கள் கலந்து கொள்ளும் மாபெரும் அஞ்சலி நிகழ்வு ஒன்றினை சாதி, மத, கட்சி, அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்ப்பட்டு ஏற்பாடு செய்யலாம் என்று தோன்றியது.

இது தொடர்பாக பல்வேறு அமைப்பினரோடும் ஆலோசனை செய்தோம். ஈழப் படுகொலைகளை நினைவு கூறும் அதே சமயம், இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்ட 543 தமிழக மீனவர்களுக்கும் அஞ்சலி செலுத்துவதாகவும் இந்த நிகழ்வை அமைத்துக்கொள்ளலாம் என்றும் சில ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டு, அதுவும் அனைத்து நண்பர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்வுக்கான நாளாக ஜூன் 26 தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டோருக்கு ஆதரவு தெரிவிக்கும் நாளாக ஐ.நா சபையால் அறிவிக்கப்பட்ட நாளான ஜூன் 26 அன்று நமது அஞ்சலியை செலுத்துவோம்.



இந்த நிகழ்வினை பலவேறு தரப்பினரும் தாமே முன்வந்து முன்னெடுத்தால் பெருமளவிலான மக்கள் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். இதனைக் கருத்தில் கொண்டு, நாம் அனைவரும் இது நமது முன்னெடுப்பு என்று முன்வந்து பணியாற்ற வேண்டும். ஒவ்வொருவரும் அவரவர் குடும்ப உறுப்பினர்களோடு பேசி அவர்களையும் வரச் சொல்லுங்கள். பக்கத்து வீட்டினர், அலுவலகத்தில் உடன் பணிபுரிவோர், மற்ற நண்பர்கள் என்று அனைவரிடமும் பேசி அஞ்சலி செலுத்தும் நிகழ்வுக்கு அனைவரையும் வரச்செய்யுங்கள்.

இணையத்திலும் பல்வேறு கட்டங்களில் இதற்கான பணிகளை மேற்கொள்ளவேண்டும். Twitter Campaign எப்பொழுது தொடங்குவது என்பதை ஆலோசனை செய்து தொடங்குவோம். அதுவரை நீங்கள் அனுப்பும் ட்விட்டுகளில் #June26Candle என்னும் Hash Tag இணை சேர்த்துக்கொள்ளுங்கள்.

மெல்லிதயம் கொண்டோரே
மெழுகுதிரி ஏந்த
மெரினாவிற்கு வாரீர்.

நாள்: ஜூன் 26
நேரம்: மாலை 5 மணி
இடம்: மெரினா கண்ணகி சிலை.