போப்பாண்டவர் XVI பெனடிக்ட் இன்று ஒரு கூப்பாடு போட்டுக் கூவியுள்ளார். என்னவென்றால் கிறிஸ்தவத்தின் மீதான நம்பிக்கை கிறிஸ்தவர்களுக்கே குறைந்து வருகிறதாம். அதற்குக் காரணம் என்னவென்றும் அந்த அப்பாட்டக்கர் கண்டு பிடித்துவிட்டார். மதச்சார்பின்மையைக் கடைபிடிக்கும் நாடுகள் தான் கிறிஸ்தவத்தின் இந்த வீழ்ச்சிக்குக் காரணமாம்! அதுவும் கிறிஸ்தவ மதத்தை வேராகக் கொண்டிருக்கும் நாடுகள் பலவும் தற்போது தமது பண்பாடு நம்பிக்கை இத்யாதிகளைத் துறந்து மதச்சார்பின்மை எனும் லுச்சாத்தனத்தால் பீடிக்கப்பட்டுள்ளனவாம்!
புனித வியாழன் தினத்தில் யாரோ பன்னிரண்டு பேரின் காலைக் கழுவிக் காயவைக்கும் சடங்கு ஒன்று நடந்திருக்கிறது! போப்பாண்டவர் அதில் கலந்து, கழுவிக் காயவும் வைத்து விழாவைச் சிறப்பித்திருக்கிறார். வருசா வருசம் இதெல்லாம் நடக்கறதுதான் ஆனால் இந்தவாட்டி நாக்குக்கு நடுவுல அரிப்பெடுத்துருக்கும் போல, அண்ணாத்த சும்மா வடிவேலு கணக்கா ஒளறித் தள்ளிப்புட்டார்!
வரும் மே ஒண்ணாம் தேதி மறைந்த போப்பாண்டவர்களை நினைவுகூரும் தினமாம்! அதுக்கு 3 லட்சம் கத்தோலிக்கர்கள் ரோமில் கூடுவார்கள் எனக் கருதப்படுவதால் கிறிஸ்தவத்தை மீட்டெடுக்க அன்றைய தினம் அடிக்கல் நாட்ட உள்ளாராம்!
இந்த சந்து கேப்புல ஆண்டவர் ஐய்யா உலகம் ஃபுல்லா இருக்குற பாதிரிகள் ஆங்காங்கே குழந்தைகளிடமும் பெண்களிடமும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு செருப்படி வாங்குவதும், இதனால் மானம் கோவணமாய் பறப்பதும் அதை மறக்கடிக்கவும் சபையின் பெருமையை மீட்டெடுக்கவும் தாம் பிரயத்தனப் படுவதாகத் தெரிவித்திருக்கிறார்!
அமெரிக்கா போன்ற கிறிஸ்தவ வேர் கொண்ட (வல்லரசு அல்லது பெரிய )நாடுகள் மதச்சார்பின்மையைத் துறக்க வேண்டுமாம்! ஐரோப்பிய கிறிஸ்தவ நாடுகளை மத அடிப்படையில் பலப்படுத்த வேண்டுமாம்! மதச்சார்பற்ற பெரிய நாடுகள் கிறிஸ்தவ நாடுகளா மாறிட்டாலே தொங்கிக் கெடக்கும் சர்ச்சின் பெருமை தொன்ணூறு டிகிரில தூக்கிட்டு நிக்க ஆரமிச்சுடுமாம்!
மதச்சார்பின்மை என்பது ஒரு கிறுக்குத் தனம் எனவும் கண்டிப்பாக ஒவ்வொரு நாடும் ஏதாவது ஒரு மதத்தைப் பின்பற்றுவது அவசியம் என்பதும் போப்பாண்டவர் கூவலின் சாரம்!
கெழவனுடைய ஏத்தத்துக்கு அளவே இல்லாமல் போய் விட்டது! ரோமின் கலைஞ்சராக இருப்பார் போலிருக்கிறது!






