Monday, January 31, 2011

#tnfisherman சந்திப்பும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகளும்.


#tnfisherman தொடர்பான ட்விட்டர்கள் மற்றும் பதிவர்களின் சந்திப்பு நேற்று (30/01/2010) மாலை சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெற்றது. அதில் ஆலோசிக்கப்பட்ட விஷயங்களும், அதனை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்வதில் அனைவரின் பங்கும் எப்படி இருக்கலாம் என்பதை இங்கு குறிப்பிடுகின்றோம்.

1. முழுமையான தகவல்கள் தொகுப்பு.
இதுவரை இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்பட்ட 539 மீனவர்கள் பற்றிய முழுமையான தகவல்களைத் திரட்ட வேண்டும். அவர்களது பெயர், ஊர், சம்பவம் நடைபெற்ற நாள், இடம் உள்ளிட்டவற்றோடு பத்திரிகைச் செய்திகள், பேட்டிகள் உள்ளிட்ட தரவுகளை முழுமையாக சேகரிக்க வேண்டும். நடைபெறும் பிரச்சனையை பேசுவதற்கு அடிப்படையான தகவல்கள் இவை.

பங்களிப்பு: நேற்று வந்திருந்த நண்பர்களில் சிலர் ஒரு சில பகுதிகளுக்கு நேரில் சென்று தகவல்களைத் திரட்ட பொறுப்பெடுத்துக் கொண்டனர். மேலும் சிலர், 539 மீனவர்களின் பெயர்கள் கொண்ட பட்டியல் இருப்பதாகவும், அதனை அளிப்பதாகவும் ஒத்துக்கொண்டனர். பொறுப்பேற்றுக் கொண்ட நண்பர்கள் தவிர மற்றவர்கள் இது சம்பந்தமான தகவல்கள் உங்களிடம் இருந்தாலோ, அல்லது திரட்டித் தர முடிந்தாலோ பதிவின் கடைசியில் இருக்கும் மின்னஞ்சல் முகவரிக்கு அவற்றை அனுப்பி வையுங்கள்.

2. பொதுநல வழக்கு (Public Interest Litigation)
மீனவர் பாதுகாப்பு குறித்து பொது நல வழக்கு ஒன்றும் தாக்கல் செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. நேற்றைய சந்திப்புக்கு சில வழக்கறிஞர்களும் வந்திருந்தனர். இது சம்பந்தமாக நிலுவையில் இருக்கும் ரிட் மனுக்கள் பற்றியும், சட்ட விபரங்களும் அலசப்பட்டன.

பங்களிப்பு: வந்திருந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களில் ஒருவர், தான் இப்பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார். வரும் சனி அல்லது ஞாயிறு வழக்குத் தொடர்பான கூட்டம் ஒன்று நடைபெறும். மேலும் சில வழக்கறிஞர்களும் அக்கூட்டத்திற்கு வருவார்கள். சட்ட நுணுக்கங்கள் தெரிந்த மற்ற ஆர்வலர்களும் அதில் கலந்துகொள்ளலாம்.

3. ஊடகங்களோடு தொடர்பு
நமது தொடர்ந்த கவன ஈர்ப்பின் மூலம் சில ஊடகங்கள் மீனவர்களைப் பற்றி கட்டுரைகள் வெளியிட்டு வருகின்றன. ஆனால், வட இந்திய ஊடகங்கள் இன்னும் பாரா முகமாகவே இருக்கின்றன. தமிழ் மற்றும் ஆங்கில ஊடகங்களின் எடிட்டர்களை சந்தித்து இந்நிலையை விளக்கிச் சொல்லி, மீனவர் பாதுகாப்பு தொடர்பான செய்திகளை வெளியிடச் செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை நாம் சந்தித்து ஒத்துக்கொள்ள வைப்பதற்கு #tnfisherman தொடர்ந்து ட்ரெண்டில் இருக்கவேண்டியது அவசியம்.

பங்களிப்பு: தமிழ் ஊடகங்களை தொடர்பு கொள்வதற்கென ஒரு குழுவினரும், ஆங்கில ஊடகங்களை தொடர்பு கொள்வதற்கு சிலரும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். கடந்த 5 நாட்களாக ட்ரெண்டில் இருந்து வந்த #tnfisherman இன்று காலையில் சில நிமிடங்கள் ட்ரெண்டில் இல்லாமல் போனது. அப்படி நேராமல், குறைந்த பட்சம் இந்த வாரம் முழுவதும் ட்ரெண்டில் நிலைத்து நிற்பதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் அவசியமாகின்றது. உங்களுக்கு 5 நிமிடம் ஓய்வு கிடைத்தாலும் 10 ட்வீட்டுகளாவது அனுப்பி இதனை தொடருங்கள். இது மிக மிக முக்கியமான விஷயம். நாம் சென்று எடிட்டர்களோடு பேசும்போது நான்கு நாட்கள் இருந்துவிட்டு இப்பொழுது இல்லாத ஒன்றைப் பற்றி பேச வேண்டாம் என்று ஒதுக்க முடியாத அளவிற்கு நம்முடைய தொடர் போராட்டம் இருக்கவேண்டும்.

4. ஆன்லைன் பெட்டிஷன்.
பிரதமருக்கு அனுப்புவதற்கென நாம் உருவாக்கியுள்ள ஆன்லைன் பெட்டிஷனில் இன்னும் பல்லாயிரக்கணக்கான கையொப்பங்கள் தேவைப்படுகின்றன. இதனை இன்னும் முன்னெடுக்க வேண்டியது அவசியம்.

பங்களிப்பு: நீங்கள் கையொப்பம் இடுவது மட்டுமின்றி உங்கள் நண்பர்கள், உடன் பணிபுரிவோர், உறவினர்கள் ஆகியோரிடமும் இதனைப் பற்றி எடுத்துரைத்து கையொப்பம் இடச்செய்யுங்கள். இப்பிரச்சனை உங்கள் சுற்று வட்டாரத்தில் விளக்கிச் சொல்லி இன்னும் பல கையொப்பங்கள் பெற்றுக் கொடுங்கள்.

5. அரசியல் கட்சியினரை சந்தித்து அவர்களை குரல் கொடுக்கச் செய்வது.
இதுவரை இப்பிரச்சனையில் கவனம் செலுத்தாத அரசியல் கட்சிகளின் தலைமையை அணுகி, இப்பிரச்சனை குறித்து அவர்களின் நிலைப்படை அறிவது, மற்றும் அவர்களையும் குரல் கொடுக்கச் செய்வது.

பங்களிப்பு: சில நண்பர்கள் தங்களது தொடர்புகள் மூலம் சில அரசியல் கட்சித் தலைவர்களை சந்திக்க முயல்கின்றனர். உங்களுக்கு அது போன்ற தொடர்புகள் இருந்தால் தெரியப்படுத்தி சந்திப்புகளுக்கு வகை செய்யுங்கள்.

6. சுஷ்மா ஸ்வராஜ் - நேரில் சந்திப்பது.
வரும் 4 ம் தேதி அன்று பாரதீய ஜனதாவின் சுஷ்மா ஸ்வராஜ் நாகப்பட்டிணம் வருகின்றார். அப்பொழுது வட இந்திய ஊடகங்களும் அவரது பயணத்தைப் பற்றி செய்தி வெளியிடுவார்கள். இந்தத் தருணத்தில் அவரை நேரில் சந்தித்து, முழுமையான தகவல்கள் அடங்கிய விளக்கங்களை நாம் நேரில் அளித்தால், மீனவர் பிரச்சனையை பற்றி விரிவான விவாதத்திற்கு வழி ஏற்படக்கூடும்.

பங்களிப்பு: அவரது சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய ஒரு நண்பர் முன்வந்துள்ளார். உங்களுக்கு தொடர்புகள் இருந்து அவரை சந்திக்க ஏற்பாடு செய்ய முடிந்தால் தகவல் தெரிவித்து ஏற்பாடுகள் செய்யுங்கள்.

==================================================================================
#tnfisherman போராட்டமானது அனைவரின் பங்களிப்போடும் நடைபெறுவது. தொடர்ந்து இதனை முன்னெடுத்துச் செல்வதே, ஒரு தீர்வு கிடைக்க வழி செய்யும். இங்கு நாம் குறிப்பிட்டுள்ள பங்களிப்புகளில் உங்களுக்கு எப்படியெல்லாம் முடியுமோ, அப்படியெல்லாம் பங்களித்து வாருங்கள். நம் சகோதரர்களைக் காக்க ஒன்றிணைந்துள்ள நாம் வெற்றி காண்பது அனைவரின் பங்களிப்பிலுமே உள்ளது. தொடர்ந்து ட்விட்டரிலும், மற்ற வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்குங்கள்.


நீங்கள் தகவல்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரிகள் :
savetnfisherman@gmail.com
tnfishermancampaign@gmail.com

http://www.petitiononline.com/TNfisher/petition.html


Saturday, January 29, 2011

தமிழக மீனவன் இழவுக்காதை-கிழிந்து தொங்கும் முகமூடிகள்

ஈழத்தில் லட்சக்கணக்கில் இனம் அழிக்கப்பட்ட போது பிளாஸ்திரி ஒட்டிக்கொண்ட வாய்கள் இந்திய இறையாண்மை; அயல்நாட்டு விவகாரம் என்ற சாக்குக்குள் ஒளிந்த கதை பழசாகிப்போனது.

அந்த சாக்கு முகமூடிகள் சிங்களவன் சர்வீஸ் செய்த துப்பாக்கிகளை சோதித்துப்பார்க்க தென்தமிழக மீனவன் மார் கொடுக்கும் இந்நாட்களில் பொத்தலாகிக் கிழிந்து தொங்குகின்றன.

இலங்கையில் தமிழ்ப்படங்கள் ரிலீஸ் ஆவதில் சிக்கல் என்ற போது வரிந்து கட்டிக் கிளம்பிய தமிழ் திரையுலகத்திற்கு இந்த இழவுகளால் பெரிய நஷ்டமேதும் இல்லை. அதிலும் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த், தான் இதுகாறும் பெரும்பாடு பட்டு சம்பாதித்து வைத்திருக்கும் ’’மெண்ட்டல்’’ இமேஜால் இந்த பிரச்சனையிலிருந்து அவரே அறியாமல் தப்பித்து விடுகிறார். யாரும் பொருட்டாக மதித்து அவர் குறித்து வினவுவதில்லை. சமீபகால தன்னிலை விளக்கங்களின் மூலம் கலைஞ்சரையே விழுங்கிவிடும் ஃபார்மில் உள்ள கமல்ஹாசன் இலங்கைத் தமிழனுக்கு சினிமா பைத்தியம் ’’இமேஜை’’ நிலை நிறுத்தி சாதனை செய்தது போல தமிழக மீனவனுக்கு பெண்பித்தன், மொடாக்குடியன் போன்ற ஏதேனுமொரு கதாபாத்திர மெருகேற்றல் பணியில் ஈடுபட்டிருக்கக் கூடும்.

டாக்டர் கேப்டனின் அறிக்கை எங்காவது வந்திருக்கிறதா என்று இணைய செய்தித் தாள்கள் முதல் பிள்ளைகளுக்கு  இசி வழித்தெறியும் துண்டுச்சீட்டு வரை துழாவினாலும் கிடைக்கப் பெறவில்லை

ஃபோனுங் கையுமாவே சுத்துறாப்ல; டயலாக் இதுதான்!

''நுப்பத்தஞ்சா அது 2006லனா ஓகே! ஆங்...''

''அம்பத்தி.... மூணா அது போன மாசம்!...... சேலத்துல கூட்டத்த பாத்தீங்கள்ள! பின்ன .... ''

''எலுவதுக்கு மேலன்னா பேச்சு. இல்லாட்டி அய்யா கால்(Call !!!) வெயிட்டிங்கு''

இந்த அரிபரிகளுக்கிடையில் மீனவன் செத்தத லேடி கேப்டனும் கேள்விப்பட்டிருக்க மாட்டாங்க பன்ரொட்டியாரும் சொல்லி இருக்கமுடியாது. எனவே விசயமே தெரியாமல் (எதிர்பாராத காரணங்களால்) போனதால் விசயகாந்த் ஆட்டையிலிருந்து விலகிவிட்டார்.

அடுத்ததாக லெட்டர் பேடில் 2011ன்னு போட்டு புதுசா அடிக்காம பழைய லெட்டர் பேடிலேயே ஒயிட்னர் வைத்து  பத்தை பதினொன்றாக்கும் நிலையில் கட்சி நடத்தி வருகிற சரத் குமார்,கார்த்திக் பற்றியெல்லாம் ஜெயா நியூசில் விளக்கமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.

சுறா என்ற படத்தில் மீனவனாக நடித்த இளையதளபதி விஜய் தன் சமகால நடிகர்களில் மீனவனாக நடித்தது தான் மட்டும் தான் என்ற திருப்தியுடன் இவ்விசயத்தில் ஆசுவாசம் கொண்டிருக்கலாம். மீண்டும் கலைஞ்சர் குழும தொலைக்காட்சிகளில் காவலன் தலை காட்டத் தொடங்கி விட்டதால் இழுத்து மூடுவதைத் தவிர அவருக்கும் வேறு வழியேதுமில்லை.

வைகோ டெல்லி சென்று சிங்கிடம் கடிதம் கொடுத்து சிவசங்கர மேனனுக்கு டாட்டா காட்டி ஏர்போர்ட் நெருங்கி இருக்கக் கூடமாட்டார் அடுத்த இழவு சேதி வந்துவிட்டது! அவர் கொடுத்த கடுதாசி நம்பர் 10,ஜன்பத் சாலை வீட்டில் உளுந்தவடைக்கு எண்ணை உறியச் செய்ய அனுப்பப் பட்டு இருக்கலாம். பிப்ரவரி 6ம் தேதி உண்ணாவிரதம் இருக்கப் போகிறாராம். நல்லது நடந்தா சரி  சாயந்திரம் அஞ்சு மணிக்கு ஜூஸ் குடுத்து சிறப்புரையாற்ற செயலலிதாவ கூப்பிடாம இருந்தா பரவால்லைங்க.

ராமதாஸ் கோவாலபுரத்துக்கு டிக்கெட் ரிசர்வ் செய்துவிட்டாராம்.

அதனால் ””ரெண்டு வாரம் முன்னாடி செத்துருந்தானுகன்னா அறிக்க உட்டுருப்பேனே!””  என்கிறார். மேலும்  முதல்வரிடம் மீனவர்களுக்கு நல  வாரியம் அமைப்பதாக இருந்தால் பாதிப்பேரை வன்னியர்களாகப் போடச்சொல்லி வலியுறுத்தப் போவது உறுதி!

செயலலிதா கொஞ்சம் அதிரடியாக ஹெலிக்காப்டரைக் கிளப்பினார்! ஆஹா! வந்துவிட்டாரய்யா தர்ம தேவதை! அம்மா வருவதற்கு முன்னமே இழவு வீட்டில் தற்காலிகமாக மரக்கட்டையில் படிகள் அமைக்கப்பட்டதாம்; அம்மையீர் உள்ளே நுழைய வசதியாக வாசல் சற்று இடித்து அகலப் படுத்தப்பட்டதாம் விட்டின் முன்புறம் முழுக்க மணல் கொட்டி மேடாக்கப் பட்டதாம் அடடா! இதல்லவா அதிரடி நலத்திட்டம்! இதற்குப் பிறகான காட்சி தான் அற்புதம்! இழவு வீட்டில் இறந்த மீனவரின் மனைவி மற்றும் தாயாரைத் தவிர அத்தனை பேரையும் துரத்திவிட்டார்களாம். மொத்தமாக 8 நிமிடம் அம்மா அந்த வீட்டில் இருந்தார் அழுதவர்களைக் கட்டி அணைத்தார் சில பல ஃப்ளாஷ்கள்!  1,00,000/- நிதி உதவி! முடிந்தது மேட்டர். வெளியே வந்ததும் நீட்டப்பட்டன மைக்குகள்! ‘’அதிமுகவுக்கு ஓட்டுப் போடுங்கள்’’ என்பதை வேறுமாதிரியாகப் பரப்புரை செய்துவிட்டு கிளம்பி விட்டார் ‘’எனது நல்லாட்சியில் மீன்களே இனி துள்ளிக் குதித்து வந்து கட்டுமரத்தில் விழும் ’’ என்று மட்டும் தான் சொல்லவில்லை.

கலைஞ்சர் டீவிக்காரர்கள் செயா வருகை தெரிந்த உடன்,  அவசர அவசரமாக மாவட்ட நிர்வாகம் மூலம் இழவு வீட்டில் 5,00,000/- பணம் கொடுத்துவிட்டு, மைக்கை நீட்டி ’’கலைஞ்சர் நல்லவர்;வல்லவர் நாலும் தெரிந்தவர்னு வாக்குமூலம் வாங்கிக் கொண்டு கிளம்பினர்.

திருமாவளவனை இன்னமும் நம்பிக் கொண்டிருக்கும் அப்பாவிகள் 500 பேர் மறியல் செய்தனர் [இவர்கள் நிலை தான் பரிதாபம்] இந்தச் சிறுத்தை துரோகத்தில் நம் முதல்வருக்கும் கருணாவுக்கும் சற்றும் குறைந்தவரில்லையல்லவா?! அதனால் தான்.

தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவும் மானமிகு வீரமணியும் இளைஞன் படத்தை ஒவ்வொரு ஷோவும் பார்த்து எப்ப்படியாவது ஹிட்டாக்கும் முயற்சியில் உள்ளனர்! ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு சமீபத்திய கிரக நிலை மாற்றங்கள் அவர் எதிர்பார்த்தாற் போலில்லையாதலால் சித்த பிரமையாம். மற்றவர்களுக்கு அறிக்கை எழுதிக் கொடுக்கும் அஸிச்டெண்ட்டுகள் லீவில் சென்றுவிட்டதால் சொல்வதற்கு எதுவுமிருக்காது.

இந்திய ஜனாதிபதிக்கு சேலையை சரியாகக் கட்டுவதே சிரமமாக உள்ள நிலையில் ராஷ்டரபதி பவனில் ரோஜாச் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதைத் தவிர வேறெதுவும் செய்வதற்கு இல்லை.


மன்மோகன் சிங்குக்கு நீல டர்பன் வேணாம்னு மஞ்ச டர்பன் கோவாலபுரத்துல இருந்து பார்சல் போயிருக்காம் அத சுத்தி சுத்தி கட்டிட்டு இருப்பார்.

சொக்கத் தங்கம் சோனியா காந்தி நிருபமா ராவ இலங்கைக்கு அனுப்பி இருக்காங்க. ஈழப்படுகொலைகளுக்கு நடவடிக்கை எடுக்கறதா சொல்லி அனுப்புனாங்களே முன்னொரு தடவை கடசீல என்ன ஆச்சு? அதே தான் இப்பவும் ஆகப் போவுது. எனக்கு புரியாத ஒரே விசயம் நேர்ல ஆளனுப்பிச்சு (Nil Report)அறிக்கைய வாங்கிட்டு வரணுமா! இல்ல பொம்பளைய அனுப்பிச்சி தான் இதுக்கு முன்னால எல்லாம் மத்த நாடுகளிலிருந்து அறிக்கை வாங்குனீங்களா? 

கொன்னவன் வீட்டுக்குப் போயி மன்னிப்பு கடிதத்துல கையெழுத்து வாங்கற கேவலம் வேற எங்கயும் நடக்காது.


இந்திய ஊடகங்கள் இந்த பிரச்சனைய உப்புசப்பில்லாததுன்னு ஒதுக்கித் தள்ளுவதிலும் நியாயம் இல்லாமலில்லை; பின்ன தெனம் ஒரு கட்சி அறிக்கை உடறதுதான் சென்சிடிவ் பிரச்சன! அதைக் கவர் பண்ணினா காசு பாக்கலாம்; மீனவன் செத்தத உள்ளூர்லயே ஒருத்தனும் கண்டிக்கல இத வெச்சு மயிரா புடுங்கறதுன்னு நெனச்சிருப்பான்.

தமிழ்நாட்டு பத்திரிக்கைகளில பாதி மஞ்சத் துண்டுக்கு மணியடிக்கவே கொள்கைச் சபதம் கொண்டவை.மீனவர் படுகொலைன்னு தலைப்பிட்டு செத்தவன் போட்டோ குடும்ப விபரம் எல்லாம் விலாவாரியா போட்டுட்டு தொடர்ச்சி 26ம் பக்கம்னு சொல்லிடுவானுக அடுத்த பக்கத்துல கலைஞ்சரும், அவர்தம் புத்திரச் செல்வங்களும் பல்லைக் காட்டிக் கொண்டிருக்கும்! இந்த கருமத்துக்கு முரசொலியே பரவால்ல.

தமிழக அரசு கலைமாமணி அறிவிச்சாச்சு! வாங்குனவன்லாம் சேர்ந்து இனி பாராட்டு விழா எடுப்பான். கெழம் அதுல பிஸியாகிடும். பொழப்பத்த வக்கீல் தமிழன் ஹை கோர்ட்ல மீனவன் செத்துட்டான் நடவடிக்கை தேவைனு கேஸ் போடுவான்; ஹை கோர்ட் அரசை கேள்வி கேட்கும். கருணாநிதியின் அல்லக்கை ஐ ஏ எஸ் எவனாவது சிறப்பு அலுவலர்னு வெள்ள அம்பாசிடர தூக்கிட்டு வெட்டிப் பயணம் கெளம்பிடுவார். 

அடுத்த இழவுக்காக தமிழர்கள் காத்திருப்பார்கள்....

டிஸ்கி 1: டுவிட்டரிலும் பதிவுகளிலும் முன்னெடுக்கப் பட்டிருக்கும் பரப்புரையையும்,அதை செய்பவர்களையும் நக்கலடிக்கும் நண்பர்களுக்கு ஒரு :-)

டிஸ்கி 2:இத்தனை பேர ஏன் ஒண்ணும் செய்ய மாட்டீங்கிறீங்கன்னு கேட்டதுக்கு கூடவே இருக்கற சக பதிவர்,டுவிட்டர்கள் சிலரிடம் {பினா பானாஸ்} கேட்கத் தான் நினைத்திருந்தேன் அந்த முகமூடியும் கிழிந்து தொங்கட்டும் என்று 
அவர்களுக்கு ஒரு :-)

கிரிக்கெட் உலகக்கோப்பையை புறக்கணிப்போம் !!!

எனக்கு மிகவும் விருப்பமான கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் சச்சின், ட்ராவிட், கங்குலி. சச்சின் க்ரீஸை விட்டு இறங்கி அடிக்கு சிக்ஸரும், காலுக்கு வரும் யார்க்கரை அப்படியே போர் ஆக இழுக்கும் ட்ராவிடும், ஸ்டம்புக்கு வெளியே வரும் பந்தை கவரில் விளாசும் கங்குலியும் ஆடிய காலம் இந்திய கிரிக்கெட்டின் பொற்காலம்.

இந்தியா தோற்றால் அப்செட் ஆகிவிடுவது, ஜெயித்தால் ஏதோ நானே களத்தில் இறங்கி ஆடியது போலவும் சந்தோஷப்பட்ட காலம் ஒன்று உண்டு.

ஆனால் இன்றைக்கு எனக்கு 'இந்திய' என்ற வார்த்தை சற்றே அன்னியமாக படுகிறது. ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டபிறகும், இனிமே சுடமாட்டோம் என்று புளுகும் இந்த அறிவு ஜீவிகள், இதுவரை ஒரு பேச்சுக்கு கூட இது தவறு, இந்த செயலுக்காக வருந்துகிறோம் என்று சொல்லவில்லை.

மத்திய மாநில அரசுகள் வெறும் நிவாரணம், செத்தவன் பொண்டாட்டிக்கு அங்கன்வாடியில் ஆயா வேலை (ஏன் தேர்தல்ல நிக்க வெச்சு ராணுவ மந்திரியாக்குங்களேன் ? ) இங்கிருந்து அங்கே வெளியுறவு செயலாளரை சுற்றுலா அனுப்புவது போன்ற காரியங்களில் இறங்கிவிட்டார்கள்.

இதெல்லாம் வெறும் கண் துடைப்பு என்று விவரம் அறிந்தவர்களுக்கும், ஏன் விவரம் அறியாதவர்களுக்கும் தெரியும். ஈழ விவகாரத்தில் மக்கள் செத்து மடிந்தபோது மேற்கு வங்க பிரணாப் முகர்ஜியும், மலையாள மேனனும் அங்கே சென்று பிரச்சனையை 'சுமூகமாக' முடித்த்து தெரியாதா ? (அனைவரும் செத்து மடிந்தது தான் சுமூகம்.)

ஒரு மலையாளியோ, ஒரு மராட்டியோ, ஒரு பிகாரியோ அண்டை நாட்டு ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டால், இப்படித்தான் ஊடகங்கள் கள்ள மவுனம் காக்குமா ? ஜெஸ்டிஸ் பார் ஜெஸ்ஸிக்கா, ஜெஸ்டிஸ் பார் ஆரூஷி. இந்தியாவின் அனைத்து ஊடகங்களும் வரிந்து கட்டினவே ? இப்போது அறுந்த 537 ஆவது தாலியை கட்டிக்கொண்டிருந்தவளுக்கு ஜஸ்டிஸ் தேவையில்லையா ? அங்கன்வாடி ஆயா வேலை மட்டும் போதுமா ?

இந்தியாவின் எதிரி நாடு என்று சொல்லப்படுவது பாக்கிஸ்தான். நிலையான அரசு கிடையாது அங்கே. அவ்வப்போது ராணுவ ஆட்சி. அந்த நாடு கூட இந்திய மீனவர்கள் அவர்கள் எல்லைக்குள் நுழைந்தால் சுடுவதில்லை. கைது தான் செய்கிறது. சமீபத்தில் வாகா எல்லையில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் திரும்பி வந்தனர். ஆனால் இலங்கை கொலைவெறி ராணுவத்துக்கோ, மீனவர்களின் படகுகளை கண்டால் துப்பாக்கியை முழக்கத்தான் தெரியும்.




மத்திய மாநில அரசின் ஆட்சியாளர்களுக்கு தமிழன் சாவதை பற்றி கவலை இல்லை என்பதை தெளிவாக அறிந்துகொண்டபிறகு, நாம், மக்கள், நமது எதிர்ப்பை எல்லா வகையிலும் பதிவு செய்தால் மட்டுமே, அவர்களுக்கு அழுத்தம் கொடுக்க முடியும். ஒரு தீர்வை நோக்கி இந்த பிரச்சினையை நகர்த்த முடியும்.

அப்படி செயல்பட்டால் மட்டுமே, ஜனநாயக முறையில், அகிம்சை வழியில், மத்திய மாநில அரசுகளின் தற்போதைய 'கண்டும்காணா' கொள்கைகளில் சரியான மாற்றம் கொண்டுவரமுடியும்...

நமது எதிர்ப்பை பதிவு செய்ய கிடைத்த மிகச்சிறந்த வாய்ப்பு ஒன்று இருக்கிறது. அது,  வரப்போகும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளை புறக்கணிப்பது.

சென்னையில் போட்டி நடந்தால், முழு சேப்பாக்கம் மைதானத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் ஒரு ஆள் கூட இருக்கக்கூடாது.  தமிழன் என்ற உணர்வு தலை தூக்கவேண்டும். கிரிக்கெட் போட்டிக்கான கட்டணத்தை காசு கொடுத்து வாங்கக்கூடாது.

கிரிக்கெட் போட்டிகளை டிவியிலும் பார்க்கக்கூடாது. கிரிக்கெட் தொடர்பாக இணைய போரம்களில் விவாதிக்ககூடாது. கிரிக்கெட் தொடர்பாக வலைப்பதிவுகள், ட்விட்டர் பதிவுகள், பேஸ்புக் அப்டேட்டுகள் என்று எதுவும் கூடாது.

மற்ற மாநிலங்களில் நடக்கும் போட்டிகளில் தமிழக மீனவர்களை காக்க வேண்டும் என்று வலியுறுத்தும் பேனர்களை ஹிந்தியில், தெலுங்கில், சீன மொழியில், சிங்களத்தில், தமிழில், தெலுங்கில் எழுதி உயர பிடிக்கவேண்டும். துண்டு பிரசுரங்களை அடித்து கொடுக்கவேண்டும்.

தமிழன் தனியனாக இந்தி'யக்கடலில் ரத்தம் சிந்தியதை ஒவ்வொரு மொழியிலும் மொழி பெயர்த்து இணையத்தில் பரப்பவேண்டும்.

தமிழக அரசை, ஸ்டாலினை, ஜெயலலிதாவை, சீமானை, வைகோவை, திருமாவை, ராமதாஸை, பெஸ்ட் ராமசாமியை, சோ ராமசாமியை, சுப்ரமணிய சாமியை, இந்து ராமை, எஸ் வி சேகரை எல்லாரையும் இந்த கிரிக்கெட் புறக்கணிப்பை ஆதரிக்கச்சொல்லி கேட்போம்.

ரத்த வெறி பிடித்த சிங்களன் நேற்று ஈழத்தமிழனை அழித்தான். இன்று மீனவனை. நாளை நம் வீட்டு வாசலில் வந்து நிற்பான். நான் எனக்காக கேட்கவில்லை. உங்களுக்காகவும், உங்கள் உறவுகளுக்காகவும் கேட்கிறேன். இந்த பரப்புரைகளை, மறுதலிப்புகளை செய்யுங்கள். இந்த பதிவில் கொடுத்துள்ள படத்தை உங்கள் வலைப்பதிவுகளில், இணைய தளங்களில் சேருங்கள். இந்த பதிவை காப்பி செய்து உங்களுக்கு தெரிந்த தமிழர்களுக்கு எல்லாம் மின்னஞ்சல் செய்யுங்கள். உங்கள் கருத்துக்களை உங்கள் வலைப்பதிவில் பதிவாக பதிவு செய்யுங்கள். இணைந்திருங்கள். இனம் காப்போம். 

Friday, January 28, 2011

#TNFisherman ட்விட்டரில் ஒரு உணர்வுத்தீ

டிபிசிடி முதலில் ஆரம்பித்ததாக சொல்கிறார்கள். உறுதியாக தெரியவில்லை. ஆனால் நேற்று இரவு மூன்று மணிவரை தூக்கம் பிடிக்கவில்லை. காரணம் உணர்வுத்தீயாக பற்றி எரிந்த ட்விட்டர்.



100 பேர் ரீட்வீட்ட, ஆயிரம் பேர் அதை ட்வீட்ட, ஐம்பதாயிரமாய் ஒரு லட்சமாய் ட்விட்டர் செய்திகள் பரவி, இந்திய அளவில் TNFisherman என்ற வார்த்தை ட்ரண்டாகியது. (ட்ரெண்ட் என்பது பலரும் பேசும் விஷயம், ட்விட்டர் இணையதளத்தில் தானியங்கியாக ட்ரெண்ட் என்ற இடத்தில் காட்டப்படும்).

பல்வேறு பத்திரிகைகள், அரசியல் கட்சிகளின் அபிஷியல் ட்விட்டர் கணக்குகளில் (தெஹல்கா, யூத் பிஜேபி நான் பார்த்தவகையில்) இருந்து செய்திகள் அனுப்ப, ட்விட்டர்கள் எந்த எந்த ஊடகங்களுக்கு இந்த செய்தியை அனுப்பமுடியுமோ அனுப்புகிறார்கள். பிபிசி தமிழ், ஐபிஎன், எண்டிடிவி. என. அனைத்து ஊடகங்களையும் தொடர்புகொள்கிறார்கள்.

இந்திய, தமிழக அரசியல்வாதிகளின், இந்திய ராணுவத்தின் கையாலாக ஆண்மையில்லாத்தனம் பற்றி காறி துப்புகிறார்கள்.

இடையில் ராஜ'பெக்'சேயின் குடிகார கைக்கூலி ஒன்று ஒரு கணக்கு துவங்கி, ட்விட்டர்களின் உணர்வுத்தீயில் சுட்டெரிக்கப்பட்டு ஓடியது வேறு கதா.

ட்விட்டர்களின் உணர்வெழுற்சி என்ன செய்யும் ? ட்விட்டாத பத்திரிகையாளர்கள் உண்டா ? குறைந்தபட்சம் அவர்கள் மனசாட்சியை தட்டி எழுப்பிவிடாதா என்று நேற்றிரவு நினைத்துக்கொண்டேன்.

விடுதலைப்புலிகள் ஆக்டிவ்வாக இருந்தவரையில் பிணத்தை புணரும் சிங்கள பொறுக்கிப்படையை, எதிர்த்து குரல்கொடுத்தால் இருக்கவே இருக்கிறது LTTE முத்திரை ! அதை குத்தி எளிதாக திசை திருப்பிய பொந்து ராம், சோ ராமசாமி பாலோயர்ஸ் இப்போதும் அதே வகையில் முயன்றார்களே ! அதுவும் நேற்று நடந்தது.

இந்தி'ய மத்திய அரசுக்கு எதிராக தமிழர்களின் இந்த குரல் Indian Fisherman ஆக அல்லவா இருக்கவேண்டும். இல்லை. நாம் இந்தியர்கள் அல்ல. வெறும் தமிழன். அதுவும் தமிழ்நாட்டு தமிழன். எட்டு மந்திரி பதவி கொடுத்தால் பிஸ்கெட்டை பொறுக்கிக்கொள்ளும் 'எதுவோ' போல பொறுக்கிக்கொண்டு வந்துவிடுவோம் என்று 'பார்ம்' ஆகிவிட்ட பிறகு நம்மை எவன் மதிப்பான் சொல்லுங்கள்.

சில கூத்தாடி பிரபலங்கள், தங்களது எலுமிச்சை அளவு அறிவைக்கொண்டு, தங்களது அதிமேதாவித்தனத்தை காட்டிய ட்வீட்டுகளும் உண்டு.

இந்திய மத்திய அரசுக்கெதிரான கடும் கோபம், செக்ஸ் ஸ்கேண்டல்களில் மட்டும் அதிக ஆர்வம் காட்டும் இந்தி'ய ஊடகங்கள், பிஸ்கெட்டுக்கு வேலை செய்யும் தமிழ் ஊடகங்களின் உண்மையான முகத்திரை கிழிபட்டது, கிழிபட்டுக்கொண்டிருக்கிறது.

சட்ட நடவடிக்கைக்காக கோர்ட்டை அணுகுவது, இன்னும் பல ஊடகங்களை அணுகுவது என்று இதன் அடுத்த கட்டம் பரபரவென விவாதிக்கப்படுகிறது இப்போது...

மொழி தெரியாதவர்களுக்காக ஆங்கிலத்தில் தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டது பற்றி எழுதப்பட்ட செய்தி நறுக்குகளை ஒட்டி சுட்டி தருகிறார்கள்...

அனைத்து ட்வீட்டுகளையும் இங்கே எழுதமுடியாது என்பதால், ட்விட்டர் கணக்கு இருந்தால் அங்கே சென்று #TNFisherman என்று டைப் செய்து தேடவும்.

ட்விட்டரில் எழுதி என்னத்தை கிழிக்கப்போறாங்க ? இவங்க எல்லாம் என்னத்தை செய்துட முடியும் என்று ஒருவர் கேட்கிறார் ? தீ சிறியதாக ஆரம்பிக்கலாம். ஆனால் அது காட்டுத்தீயாக. கொடியதை அழிக்கும் தீயாக பரவும் என்ற நம்பிக்கை துளிர்க்கிறது.

இனமான உணர்வு என்பது ட்விட்டரிலும் கூட தொடங்கலாம். ! சுயமரியாதை தரும் நெஞ்சுரம் இருக்கும் வரை, சக தமிழனுக்கான குரல் ஓங்கி ஒலிக்கும் !!

தமிழக மீனவர்களைக் காப்பதற்காக ஒரு இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளது. அதற்கான லிங்க் இது. http://www.savetnfisherman.org/

பேஸ்புக்கில் இருக்கும் ஒரு இணைப்பு http://www.facebook.com/pages/Save-Fishermen-from-Sri-Lankan-Navy/167109543335671

ட்விட்டரில் #tnfisherman தொடர்பான ட்விட்டுகளை காண http://twitter.com/#!/search?q=%23tnfisherman

பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள். நீங்களும் இதனைப் பற்றி பதிவிட்டு ஆதரவு அலையைப் பரவச் செய்யுங்கள்.

Thursday, January 27, 2011

சீமானுக்கு கவிஞர் தாமரை கேள்வி.




காங்கிரஸ் கட்சியை ஒழிக்க வேண்டும் என்பதற்காக ஜெயலலிதாவை ஆதரிப்பது நியாயமல்ல. திமுக, அதிமுக இரண்டும் ஒன்றுதான் என்ற நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானுக்கு, திரைப்படப் பாடலாசிரியை தாமரை கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக சீமானுக்கு அவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

வணக்கம். இனியவளே படத்தில் பாடல் எழுத வாய்ப்புக் கேட்டு உங்களை நான் சந்தித்த அந்த நாட்களை நான் திரும்பிப் பார்க்கிறேன். நீங்களும் நானும் உங்கள் குழுவைச் சேர்ந்த நண்பர்களும் மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருப்போம். அந்தப் பேச்சில் பெரும்பான்மை தமிழைப் பற்றியதாக, தமிழினம் பற்றியதாக, தமிழீழம் பற்றியதாகவே இருக்கும்.

பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நானும் நீங்களும் நிற்கும் இடம் பற்றி யோசிக்கிறேன். திரைப்படத்துறை நம் தமிழ் உணர்வுகளை எந்த விதத்திலும் குறைந்து விடவில்லை. வெற்றியோ தோல்வியோ, புகழோ பெயரோ… எதனாலும் நம் போராட்ட உணர்வு மழுங்கிப் போய்விடவில்லை. அன்றும் இன்றும் நம்மை ஒருங்கிணைத்தது, இணைப்பது மொழி இன உணர்வும் தமிழீழ வேட்கையும்தான்!

திரைக்கலைஞர்களாக இருந்து கொண்டே தமிழீழ மக்களைக் காப்பதற்காக மற்றவர்களோடு சேர்ந்து போராடினோம். ஆவேசமான பேச்சு, கைது, சிறை என்று நீங்கள் போனீர்கள். ஒரு கட்டத்தில் நேரடியாக அரசியலில் இறங்கி ‘நாம் தமிழர்’ கட்சியை நிறுவுனீர்கள். தெளிவான சில அரசியல் கொள்கைகளின் அடிப்படையில் இயங்கினாலும் நான் எந்தக் கட்சி அல்லது அமைப்பையும் சேர்ந்தவனில்லை. எப்போதும் இப்படி இருப்பதையே விரும்புகிறேன்.




ஆனால் உங்கள் முயற்சியும் அதில் நீங்கள் கண்டுவரும் வளர்ச்சியும் எனக்கு மகிழ்ச்சியளிக்கின்றன. மொழி இனவுணர்வு படைத்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இன்று உங்கள் பின்னால் அணிவகுத்திருக்கிறார்கள். தமிழீழத் தேசியத் தலைவரிடம் நீங்கள் கொண்டுள்ள அன்பும் பொங்கு தமிழர்க்கு இன்னல் விழைந்தால் சங்காரம் நிசமென்று நீங்கள் முழங்குவதும் உங்கள் பின்னால் அணிவகுத்து நிற்கும் இளைஞர் வரிசையை மென்மேலும் நீளச் செய்யும் என்பது உறுதி!

என் அயல்நாட்டுச் சுற்றுப் பயணங்களின்போது உலகத் தமிழர்கள் உங்கள் பால் வைத்துள்ள நேசத்தை நேரில் அறிந்து வியந்தேன், மகிழ்ந்தேன். அத்துணைப் பேரும் உங்களைத் தங்கள் உறவாகவே மதிக்கிறார்கள். உங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறார்கள். அவர்களின் ‘நம்பிக்கை நாயக’னாக நீங்கள் நிற்பது கண்டு வாழ்த்தி வரவேற்கிறேன்.




ஆனால், உங்கள் நலம் விரும்பிகள்… என்று சாதாரணமாகச் சொல்லமாட்டேன், உங்கள் உறவுகளை – நான் உட்பட உரிமைச் சொந்தங்களை, அண்மையில் குழம்பித் திகைக்கச் செய்துள்ள ஒன்றை, உங்கள் முகத்திற்கு நேரே சொல்லப் பலரும் தயங்கிக் கொண்டிருக்கும் ஒரு செய்தியை இந்த திறந்த மடல் வழியாக உங்கள் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன். எனக்கு அந்த உரிமை இருக்கிறது என்றே நம்புகிறேன்.

வரப்போகும் சட்டப் பேரவைத் தேர்தலில் ஜெயலலிதாவையும் அ.தி.மு.கவையும் ஆதரிக்கப் போவதாக நீங்கள் பேசியும் எழுதியும் வருவது எங்கள் நெஞ்சங்களில் ஆயிரம் இடிகளை ஒன்றாக இறக்கியுள்ளது.

நம் தமிழினத்தை அழித்து, மென்று, உமிழ்நீரால் ஊறவைத்த காங்கிரஸ் கட்சியைத் தமிழ்நாட்டில் இருந்து ஒழிக்க வேண்டும் என்று நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சரி. ஆனால் அதற்காக அ.தி.மு.கவை ஆதரிக்கவேண்டும் என்றால் எப்படி?

யார் இந்த ஜெயலலிதா?



‘போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்’ என்ற, காலத்தால் அழிக்க முடியாத அரும்பெரும் பொன்மொழியை உதிர்த்தவர் அல்லவா? அதுதான் அவருடைய ‘உண்மையான உள்ள வெளிப்பாடு’!

தேசியத் தலைவரைப் பிடித்து இழுத்து வந்து தூக்கில்போட ஆசைப்பட்டவர், நோய்வாய்ப்பட்ட ஐயா ஆன்டன் பாலசிங்கம் இந்தியாவில் சிகிச்சை எடுக்க முடியாமல் மூர்க்கமாகத் தடுத்து அவர் உயிருக்கு உலையானவர், வைகோ, நெடுமாறன் உள்ளிட்ட ஈழ ஆதரவுத் தலைவர்களைப் பொடாக் கொடுஞ் சிறையில் அடைத்தவர், இப்படியெல்லாம் கொடுமைகள் புரிந்ததற்கு இன்று வரை ஒப்புக்குக்கூட வருந்தாதவர், இன்றளவும் ராஜபக்சே புரிந்த இனப்படுகொலையைக் கண்டித்து ஒரு வார்த்தை பேசாதவர், அந்தக் கொலைகாரனுக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்கும் இந்திய அரசைக் கண்டிக்காதவர், தமிழர்களின் வாக்கைப் பெறுவதற்காக ‘தமிழீழம் அமைத்துத் தருவேன்’ என்று முழங்கிவிட்டு, தமிழ் மக்கள் இவர் ‘சிலநாள் மட்டும் நடிக்க வந்த புது நாடகத்தை’ நம்பவில்லை என்றதும், உண்ணாவிரதக் களைப்பு நீங்க கொடாநாடு போய்விட்டவர் – இவரையா சீமான் நாங்கள் ஆதரிக்க வேண்டும் என்கிறீர்கள்? என்ன கொடுமை இது?

உங்கள் தர்க்கப்படி பார்த்தால் இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சேவைத் தடுக்க ரணில் விக்ரமசிங்கேவை நம் அண்ணன் பிரபாகரன் ஆதரித்திருக்க வேண்டும், அப்படித்தானே? இதைத்தான் இந்து ராம் சொன்னார், நக்கீரன் பேட்டியில் ரணிலே சொன்னார், கலைஞரும் ஆமோதித்தார். அண்ணனுக்கு அருவருப்பாகத் தெரிந்த சந்தர்ப்பவாதம் உங்களுக்கு மட்டும் தேர்தல் வியூகமாகத் தெரிவது எப்படி இயக்குனரே?


உங்கள் நிலையை சுபாஷ் சந்திரபோசோடு ஒப்பிடுகிறீர்கள். அவர் பிரிட்டனை எதிர்க்க ஜப்பானியனை நாடியதாகக் கூறுகிறீர்கள். ஆம் உண்மைதான். ஆனால் ஜப்பான் பிரிட்டனின் எதிரிநாடு! பிரிட்டனை மெய்யாகவே எதிர்த்தது, போர் புரிந்தது. களத்தில் நின்றது. எனவே போஸ் ஜப்பானிய ‘இராணுவ’த்தின் உதவியை நாடினார். இங்கே ஜெ உண்மையிலேயே காங்கிரசை எதிர்க்கிறாரா? இந்த வகையிலும் கலைஞர் செய்வதைத்தானே ஜெவும் செய்கிறார்?

தீயை அணைக்க சாக்கடையை வீசலாம். பெட்ரோலை வீசலாமா?

கலைஞரின் இனத் துரோகத்தைத் தோலுரித்துக் காட்டும் நீங்கள் ஜெ.யின் இனத் துரோகத்தையும் உரிக்க வேண்டாமா? அதை மன்னிக்க முடியாது என்றால் இதையும் மன்னிக்க முடியாது அல்லவா?

‘ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தாலும் தமிழர் விரோதப் போக்கில் செயல்பட்டால் எதிர்த்து முழங்குவேன்’ என்று கூறியுள்ளீர்கள். அப்படியானால் அவர் இதுவரை தமிழர் விரோதப் போக்கில் செயல்படவில்லை என்கிறீர்களா? அல்லது ‘இனி தமிழர் விரோதப் போக்கில் செயல்படமாட்டேன்’ என்று உங்களிடம் தனியாக ஏதும் உறுதியளித்திருக்கிறாரா?.

கலைஞர் காங்கிரசோடு அப்பிக் கொண்டிருப்பவர், ஜெ அதைப் பிய்த்து எடுத்துத் தான் அப்பிக் கொள்ளத் துடிப்பவர். இவர்களுக்கிடையே எதில்தான் வேறுபாடு உள்ளது – ஒருவர் வேட்டி, மற்றவர் சேலை அணிவது தவிர?

ஒருவேளை கூட்டணியில் ‘திடீர்’ மாற்றம் ஏற்பட்டு காங்கிரசுடன் அதிமுக கூட்டணி சேர்ந்துவிட்டால் உங்கள் ‘வியூகம்’ என்னாகும்? அப்போது காங்கிரசை ஒழிப்பதற்காகக் கலைஞரை ஆதரிப்பீர்களா?




‘அதிமுக ஆட்சிக்கு வந்தர்லும் சீமான் இருக்குமிடம் சிறைதான்’ என்கிறீர்கள். சரி, தமிழீழ ஆதரவாளர்களை – வைகோ, நெடுமாறன், சீமான் யாராயினும் – ஒடுக்குவதில் திமுக, அதிமுக ஆட்சிகளுக்கிடையே வேறுபாடு இல்லை என்று தெரிந்தும் அதிமுக ஆட்சிக்கு வர நாம் ஏன் உதவ வேண்டும். இப்போது அவசரமாகக் கலைஞரைப் பதவியிறக்கி, அம்மையாரை அரியணையில் அமர்த்தி நாம் சாதிக்கப் போவது என்ன? – அரசு அலுவலகங்களில் தொங்கும் படம் மாறும் என்பதைத் தவிர?

ஐந்தாண்டு கழித்து (ஜெ.யின் உண்மை உருவத்தைப் பார்த்து, ‘அதிர்ந்து’போய், மேடை, சிறை, வழக்கு, வாய்தாவெல்லாம் முடித்து) – அடுத்த தேர்தலில் கலைஞருக்கு ஆதரவு கேட்க மாட்டீர்கள் என்பது என்ன நிச்சயம்?

அவரை எதிர்ப்பதற்காக இவரையும், இவரை எதிர்ப்பதற்காக அவரையும் ஆதரித்து தேர்தலுக்குத் தேர்தல் கால்பந்தாக மாறி.. ஐயகோ.. அதைத்தானே இயக்குனரே, எங்கள் அன்பிற்கினிய வைகோ அவர்களும் தோழர் திருமாவளவனும் செய்து கொண்டிருக்கிறார்கள். காலங்காலமாகத் தமிழகம் இந்தக் கால்பந்து விளையாட்டைத்தானே பார்த்துக் கொண்டிருக்கிறது!

தமிழக அரசியல் என்பது ரங்க ராட்டினமாகி வெகுகாலமாகிவிட்டது. திமுகவும் அதிமுகவும் மேலும் கீழுமாகப் போய் வந்துகொண்டிருக்கின்றன. இதில் ஏறினால் மேலும் கீழுமாகச் சுற்றிச் சுற்றி, ‘தலைசுற்றிப்’ போகலாமே தவிர, வேறு ஊருக்குப் பயணம் போக முடியாது. இதை மக்கள் தெரிந்து கொண்டார்கள்… அதனால்தான் ஒரு மாற்று அரசியலை எதிர்பார்த்து தவம் கிடக்கிறார்கள்.



விஜயகாந்த் இட்டு நிரப்ப முயன்றது இந்த இடத்தைத்தான். இரு கழகங்களுக்கும் மாற்றாக அவர் இருப்பார் என்று நம்பித்தான் மக்கள் இன்றைய இடத்தை அவருக்குக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அவரும் மக்களை ஏமாற்றி விட்டார். ஊழலற்ற நல்லாட்சி என்ற அடிப்படையில்தான் அவர் மக்களை அணுகினார். தமிழினம், தமிழர் இறையாண்மை என்ற அடிப்படையில் அணுகவில்லை. எனவேதான் காங்கிரசுக்குக் கைகொடுக்கும் நிலைக்கு நெருங்கி வந்தார். காலாவதியாகிப் போன இந்திய இறையாண்மை என்ற இறகுத் தொப்பியை அணிந்து வந்தவர் அவர். தமிழக அரசியல் வெற்றிடத்தை அவரால் நிரப்ப முடியாது என்பது நிதர்சனம்!

காங்கிரஸ் கட்சியைத் தமிழகத்தில் இருந்து ஒழிக்க வேண்டும் என்பது அவர்கள் தமிழீழத்தைச் சிதைத்தார்கள் என்பதற்காக மட்டும்தானா? இல்லவே இல்லை. இன்னும் விரிந்த நோக்கில், நம் தௌ்ளிய, நேரிய நோக்கமான ‘தேசிய இனங்களின் தன்னுரிமை, இறையாண்மை பெற்ற தமிழ்நாடு’ ஆகியவற்றின் முழுமுதல் எதிரியாகவும் இருப்பதால்தானே?

உங்களிடம் தமிழினம் என்ன எதிர்பார்க்கிறது என்பதை நீங்கள் உணரவேண்டும். ஆங்கிலேய அரசுக்கு எதிராகப் போராடுவதற்கு அன்று இந்தியத் தேசியம் தேவைப்பட்டது. இந்திய சுதந்திரத்தோடு அதன் தேவை முடிந்துபோய் விட்டது. காங்கிரஸ் கட்சி அத்தோடு கலைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் மாறாக, தமிழர்கள் உள்ளிட்ட அனைத்துத் தேசிய இன மக்களுக்கும் எதிராக வளர்ந்து, அடித்துத் தின்ன முயன்றது. ஆதனால் ‘திராவிட தேசியத்தின்’ தேவை உருவானது. திமுக அபரிதமான வெற்றி பெற்றது. ஆனால் பதவி நாற்காலியில் அமர்ந்த பின் தன் கொள்கைகளைக் கைகழுவி விட்டது.

திமுக வும் எதிர்க்கட்சியான அதிமுக வும் மீண்டும் ‘இந்திய தேசியத்’தைச் தூக்கிச் சுமக்கப் போட்டியிடுகின்றன. பதவிக்காக இந்தக் கழகங்கள் போட்டுக் கொள்ளும் பங்காளிச் சண்டை காங்கிரசுக்கு மறுபிறவி கொடுத்து விட்டது. ‘எரிவதைப் பிடுங்கினால் கொதிப்பது அடங்கும்’ என்ற அடிப்படையில் காங்கிரசைத் தமிழ்நாட்டிலிருந்து ஒழித்தால் கழகங்கள் இரண்டும் தமிழ்நாட்டை, தமிழரை முன்னிறுத்தி அரசியல் செய்ய வேண்டி வரும். அந்த நிலையை ஏற்படுத்துவதே நம் போன்றோரின் அவசரக் கடமை.

தமிழ்த் தேசியமே இன்றைய தேவை. அதை அரசியல் நிலைப்பாடாகக் கொண்டு, களம் காணும் அரசியற் கட்சிகளே இல்லை என்ற நிலையில் நீஙகள் அந்த இடத்தைப் பூர்த்தி செய்கிறீர்கள் சீமான் அவர்களே… உங்கள் பொறுப்பு பெரும் பொறுப்பு. எதிர்காலத் தமிழினத்திற்கு நீங்கள் ஆற்றும் மகத்தான கடமை!

சிங்களன் தமிழ் மீனவனை நோக்கிச் சுடும் ஒவ்வொரு தோட்டாவிலும் இந்திய இறையாண்மை பொத்தலாகிக் கிழிந்து தொங்கும் நேரம் இது! இரண்டகம் செய்யும் இரட்டையர்களான திமுக வையும் அதிமுக வையும் ஒன்றாகக் கருதி, ஒரு சேர தனிமைப்படுத்த வேண்டும். பதவி அரசியலை சந்தர்ப்பவாதக் கூட்டணி அரசியலை மறுதலிக்க வேண்டும். தேர்தல் வரட்டும், போகட்டும். ஆனால் இந்த கொள்கை வழித் தமிழ்த் தேசியப் போராட்டத்தை முன்னெடுப்பது உங்கள் பணியாக இருக்க வேண்டும். இதை நீங்கள் செய்தால் எம்மைப் போன்ற தமிழ் உணர்வாளர்களின் ஆதரவு கிட்டும். தமிழ்த் தேசிய இயக்கங்கள் வலுவாக உங்கள் பின்னால் அணிவகுப்பார்கள். உலகத் தமிழர்கள் வலுக்கூட்டுவார்கள். நாளை அழிக்க முடியாத பெரும் அரசியல் சக்தியாக உருவெடுக்கலாம்.

அதைவிடுத்து நீங்களும் அரசியல் சதுரங்கத்தில் பகடையாக மாறி உருண்டீர்களானால், நாங்கள் பதைபதைத்துப் பார்த்து பத்தடி தள்ளி நிற்பதைத் தவிர வேறென்ன செய்வது?

நான் என்ன செய்யட்டும், பகலவன் படப்பிடிப்பை இப்போதே நடத்தலாமா என்று நண்பர்களைக் கேட்கிறீர்கள். சரி என்னுடைய யோசனையைச் சொல்கிறேன்.

ஐந்து ஆண்டுகளுக்குத் தேர்தலில் நிற்க வேண்டாம். ஊர் ஊராகச் சென்று ‘நாம் தமிழர்’ கட்சி அமைப்பை வலுப்படுத்துங்கள். தமிழ்த் தேசியச் சிந்தனையை மக்களிடம் வலுவாக வளர்த்தெடுங்கள். காங்கிரஸ் நிற்கும் தொகுதிகளில் மட்டும் எதிர்த்துப் பரப்புரை செய்யலாம்.

இல்லை, இந்தத் தேர்தலிலேயே நின்றாக வேண்டும் என்றால், நல்லது, காங்கிரஸ் நிற்கும் தொகுதிகளில் மட்டும் போட்டியிடுங்கள். காங்கிரசை எதிர்த்துத் தோற்கடிப்போம்.

மற்றத் தொகுதிகளில் ‘திமுக வும் அதிமுக வும் ஒன்றே’ என்ற நிலைப்பாட்டை எடுங்கள். ’49 ஓ’ வுக்குக் குரல் கொடுங்கள். அது உங்களுக்கு உடன்பாடு இல்லை எனில், யார் வென்றால் என்ன, அந்தத் தொகுதிகளைப் பற்றி கவலையில்லை என்று முடிவெடுங்கள்.

இலங்கைப் புறக்கணிப்பை வலுவாக மேற்கொள்வோம். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயல்பாடுகளைத் தமிழகத்தில் கொண்டு வருவோம். தமிழீழமும் தமிழ்நாடும் ஒன்றாக விடியல் காணட்டும்!

இதையெல்லாம் செய்தபின் பகலவனுக்காகவும் நேரம் ஒதுக்கினால், நல்லது.. சொல்லியனுப்புங்கள், நானும் வந்து பாடல் எழுதுகிறேன்.

திரை அதிர, தமிழனின் சிறை உடைப்போம்!
என்றும் அடங்கா தமிழ்த் தாகத்தோடு
தாமரை

Wednesday, January 26, 2011

சங்கர்ராமன் கொலைவழக்கு

  

புதுவை கோர்ட்டில் நடந்துவரும் வழக்கு விசாரணையில் இதுவரை மொத்தமுள்ள 134 சாட்சிகளில் 70 பேர் பிறழ் சாட்சிகளாக ( அதாவது முன்பு சொன்னது பொய் என்று சொல்வது) மாறிவிட்டார்கள்.

சேது பாலம் ராமர் கட்டியது, அயோத்தியில் ராமர் பிறந்தார் என்ற உடான்ஸுகளை நம்பும் நீதிமன்றம் இருக்கும் நாட்டில், இவர்களின் விடுதலை ( அதாவது நீதியின் சாவு, அது உயிரோட இருக்கா என்ன ? ) விரைவில் நடக்கும் பாருங்கள்.

மூங்கில்களின் மூஞ்சிகளில் அப்பாவிகள் என்று எழுதி ஒட்டியிருக்கிறது இப்போதுதான் என் கண்ணில் புலப்படுகிறது. என்னையும் பிறழ் சாட்சியாக சேர்த்து எதாவது அமவுண்டு கொடுங்க மூங்கில்ஸ் !!

Tuesday, January 25, 2011

உருத்திரகுமாரன் அறிக்கை

நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திர குமாரன் அறிக்கை


தமிழக மீனவர்கள் மீது சிறிலங்காப் படையினர் கட்டவிழ்த்து விட்டு வரும் கொலை வன்முறையின் தொடர்ச்சியாக ஜெயக்குமார் எனும் நமது சகோதரன் சிறிலங்கா கடற்படையினரால் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார் எனும் செய்தி நம்மையெல்லாம் கடும் கோபத்திலும் பெருந்துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது.

சிறிலங்காப் படையினரின் இக் காட்டுமிராண்டித்தனத்தை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வன்மையாகக் கண்டனம் செய்வதுடன், கொலை செய்யப்பட்ட சகோதரனின் குடும்பத்தினரின் துயரில் நாமும் பங்கு கொள்கிறோம்.

ஈழத் தமிழ் மக்களின் அரசியல் பெருவிருப்பான சுதந்திரத் தமிழீழ நாட்டை தமிழீழத் தாயகத்தில் அமைத்துக் கொள்வதனை முதன்மை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், உலகில் எந்தப் பாகத்திலும் தமிழர்கள் மீது எவரால் இன்னல் இழைக்கபட்டாலும், கொடுமைகள் நிகழ்த்தப்பட்டாலும் அவற்றை எதிர்த்து அனைத்துலக ரீதியாகக் குரல் கொடுக்கும்.

உலகில் தமிழர்களுக்கென்றொரு அரசும், அதற்கான அரசாங்கமும் இதுவரை அமையாத சூழலில், உலகத் தமிழ் மக்களின் நலன்களுக்காகவும் தன்னால் இயன்றவரை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் போராடும்.

இந்த வகையில் தமிழ்நாட்டு மீனவர்களுக்கெதிராக சிறிலங்கா அரசு மேற்கொண்டு வரும் பயங்கரவாத நடவடிக்கைகளை அனைத்துலகின் கவனத்துக்கு கொண்டு வரும் வழிவகைகள் தொடர்பாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஆலோசனை செய்து வருகிறது.

இலங்கையின் திட்டமிட்ட தாக்குதல்...

தமிழக மீனவர்களுக்கெதிரான சிங்களப் படையினரின் தொடர்ச்சியான வன்முறைகள் தற்செயலான நிகழ்வுகளல்ல. இதன் பின்னணியில் தமிழர்களுக்கெதிரான இனவாதமும், இந்திய எதிர்ப்புணர்வு கொண்ட அரசியல் உள்நோக்கமும் உள்ளது என்றே நாம் கருதுகிறோம். இவை தொடர்பாக சில கருத்துக்களை தமிழக மற்றும் இந்திய மக்களுடன் இத் தருணத்தில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்.

சிங்களப் படையினரின் தமிழர்களுக்கெதிரான இனவாதத்தினதும் தமிழர் குரோத மனப்பாங்கினதும் ஒரு வெளிப்பாடாகவே நாம் தமிழக மீனவர்களுக்கெதிரான கொலைவெறியினை நோக்க வேண்டும். இல்லையெனில் ஜெயக்குமார் என்ற நமது சகோதரனைக் கொடிய முறையில் கொல்ல வேண்டிய வேறு எவ்விதக் காரணமும் சிங்களப்படையினருக்கு இருக்கவில்லை.

சிங்கள ஆட்சியாளர்கள், தமது படையினர் மத்தியில் பெரும் இனவாதத்தை ஊட்டியே ஈழத் தமிழ் மக்களுக்கு எதிரான ஒரு பெரும் கொடும் போரை நடத்தினார்கள். இதன் தொடர்ச்சியாகத் தற்போது தமிழ்நாட்டு மீனவர்கள் வேட்டையாடப்படுகிறார்கள்.

இது மட்டுமன்றி, ஈழத்திலும் தமிழ் நாட்டிலும் உள்ள தமிழர்களை இந்திய விரிவாக்கத்தின் குறியீடாகத்தான் நோக்குகிறது சிங்களம். தமிழ் நாட்டின் ஊடாகத்தான் சிங்களத்தின்மீது தமிழர்களதும் இந்தியாவினதும் படையெடுப்பு நிகழ்ந்ததாகக் கருதும் சிங்களம், தமிழர்களை தமது பாதுகாப்புக்கு எதிரானவர்களாக நோக்கும் மனநிலையினைக் கொண்டுள்ளது.

மகாவம்ச இதிகாச மயக்கத்தினுள் தோய்ந்து போயிருக்கும் சிங்களம் ஈழத் தமிழ் மக்களுக்கெதிராகத் தொடுத்த போரை இலங்கைத் தீவில் இந்திய விரிவாக்கத்துக்கு எதிராக நடாத்தப்பட்ட போராக வர்ணிக்கும் ஆய்வாளர்கள் உள்ளனர். இன்று தமிழக மீனவர்களுக்கு எதிராக சிங்களம் நடத்தும் போரும்கூட உண்மையில் தமிழகத்துக்கும் இந்தியாவுக்கும் எதிராக சிங்களம் நடாத்தும் போரின் ஓரங்கமே. இலங்கைத் தீவில் இந்திய ஆதிக்கத்தை குறியீட்டு வடிவில் எதிர்ப்பதும் இப் போரின் ஒரு நோக்கம்.

இந்தியாவுக்கு எதிராக சீனாவை அரவணைத்து வைத்துக் கொண்டு இந்திய ஆட்சியார்களுடன் சதுரங்க விளையாட்டைத் தற்போது விளையாடிக் கொண்டிருக்கிறது சிங்களம்.

சிங்களத்துக்கு உதவி செய்வதன் மூலம் இலங்கைத் தீவில் தமது செல்வாக்கினை நிலைநிறுத்த முடியும் என இந்திய ஆட்சியாளர்கள் நினைக்கின்றனர். ஆனால், இந்தியாவின் பிடியிலியிருந்து இலங்கைத் தீவினை எவ்வாறு விடுவிப்பது என்பது குறித்து சிங்களம் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. இதற்காகத் திட்டமிட்டுச் செயலாற்றுகிறது. இலங்கைத் தீவில் ஈழத் தமிழரை இனக் கபளீகரம் செய்யும் முயற்சியில் சிங்களம் இறங்கியிருப்பதும் இத் திட்டத்திற்குட்பட்டுத்தான் நிகழ்கிறது.

புரிந்து கொள்ளாத இந்தியா...

ஆனால், இவையெல்லாவற்றையும் தமிழக ஆட்சியாளர்களோ, இந்திய ஆட்சியாளர்களோ சரிவரப் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. அல்லது சிறிய நாடான சிறிலங்காவை எப்படியும் தம்மால் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும் என இந்திய ஆட்சியாளர்கள் எண்ணக் கூடும்.

சீனாவின் துணையுடன்....

சிறிலங்கா சிறிய நாடுதான். ஆனால் சீனாவுடன் சேரும் போது சிறிலங்காவைச் சிறிய நாடாகப் பார்க்க முடியாது. இந்தியாவினை விட சீனாதான் சிங்கள மக்களின் இயல்பான தெரிவாக இருக்கும். காலம் தாழ்த்தி உண்மையினை இந்தியா உணரும்போது அது இந்தியாவுக்கு ஆபத்தானதாகவே அமையும்.

சிறிலங்கா தொடர்பான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மாற்றத்துக்குள்ளாக்கப்படுவது ஈழத் தமிழர் தேசத்துக்கு மட்டுமல்ல - தமிழக, இந்திய மக்களின் நலனுக்கும் அவசியமானது. இதனை இந்திய கொள்கை வகுப்பாளர்களது கவனத்துக்கு கொண்டு வருவதற்கு ஆவன செய்யுமாறு தமிழக, இந்திய மக்களிடம் இத் தருணத்தில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

இழவு வீடும், கருணாநிதியின் டீ பார்ட்டியும்

இடம் : பிரதமர் இல்லம்.

சோனியா: ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு பிரச்னை தலைவலியை கொடுக்கும். ஆனா இந்த வாரம் இதுவரைக்கும் ஒரு பிரச்னையும் என் கவனத்துக்கு வரலையே. என்னாச்சு?

மன்மோகன்: ஒரு பிரச்சனை வந்துச்சு மேடம். நான்தான் உங்ககிட்ட சொல்லாம இருந்துட்டேன்.

சோனியா: என்ன பிரச்னை?

மன்மோகன்: போன வாரம் இலங்கை கடற்படை ரெண்டு தமிழக மீனவர்களை சுட்டுட்டாங்களாம்.

சோனியா: என்னது ரெண்டு மீனவர்களையா?

பிரணாப்: வர வர இலங்கை கடற்படையின் போக்கே சரியில்லை.

சோனியா: ஆமா, இத உடனே மஹிந்த கிட்ட பேசணும். போன் போடுங்க.

மஹிந்த போனில்:

மஹிந்த: வணக்கம் சோனியாஜி.

சோனியா: வணக்கம். வணக்கம். தம்பிக்கு ஏதும் உடம்பு சரியில்லையா?

மஹிந்த: நல்லாதானே இருக்காரு. ஏன் கேட்கறீங்க?

சோனியா: போன வாரம் ரெண்டு மீனவர்களை மட்டும்தான் சுட்டிருக்காங்க உங்க கடற்படை. ஏன் எல்லாருக்கும் லீவ் கொடுத்து அனுப்பிட்டீங்களா?

மன்மோகன்: ஒரே நாளில் ஆயிரக்கணக்கான மக்களை கொன்ற உங்கள் படையினரின் வீரம் எங்கே? தீரம் எங்கே? ஏன் இந்த அவல நிலை?

மஹிந்த: தமிழகத்துல தேர்தல் நெருங்குறதுனால தேர்தல் முடிஞ்சதுக்கு அப்புறம் எல்லா மீனவர்களையும் முழுசா அழிச்சிரலாம்ன்னு கொஞ்சம் ஓய்வெடுக்கச் சொல்லியிருக்கோம்.

சோனியா: ஆமா, அதுவும் நல்லதுதான்.

மஹிந்த: அமெரிக்காவுல உட்கார்ந்துக்கிட்டு எந்த நாட்டுல வேணாலும் பூகம்பம் வர்ற மாதிரி ஏதோ ஆராய்ச்சிலாம் பண்ணிருக்காங்களாம். நீங்களும் உங்க நாட்டு விஞ்ஞானிகள்ட்ட சொல்லி சுனாமி வரவைச்சு எல்லா மீனவர்களையும் அழிக்கிறதுக்கு ஏதாவது கண்டுபிடிக்க சொல்லுங்களேன்.

சோனியா: அடுத்த வருஷம் அதைப் பத்தி பாக்கலாம். மஹிந்தஜி ராமேஸ்வரம் மீனவர்களை பயமுறுத்துன மாதிரி மற்ற பகுதி மீனவர்களை பயமுறுத்தாம விட்டுருக்கீங்களே ஏன்?

மஹிந்த: கலைஞர்ஜியே சொன்னார் ராமேஸ்வரத்துல ஹோட்டல் வேலைய சீக்கிரம் ஆரம்பிக்கணும்; அதுனால எவ்வளவு சீக்கிரம் அங்க மீன்பிடித்தொழில நிறுத்துறீங்களோ, அவ்வளவு நல்லது அப்படின்னு. ஆனா மத்த எடத்துலையெல்லாம் ஹோட்டல் கட்டுற திட்டம் இல்லை போலிருக்கு.

சோனியா: அப்ப தேர்தல் வரைக்கும் உங்க கடற்படை வீரர்களுக்கு லீவ் கொடுக்கப்போறீங்களா?

மஹிந்த: அவ்வளவு நாளு லீவ் கொடுத்தாலும், எங்க ஆளுங்க சுடுறதையே மறந்துருவாங்க. அதுனால, வாரத்துக்கு ரெண்டு தமிழக மீனவர்களை மட்டும் சுட்டு ப்ராக்டிஸ் பண்ணிக்குறோம்.

சோனியா: சரி. அப்படியே இருக்கட்டும். ஆனாலும், கலைஞர்ஜி கிட்ட பேசுனா இன்னும் நெறைய ஐடியா கெடைக்கும். போன் போடுங்க.



கலைஞர் போனில்:

கலைஞர்: வணக்கம். சோனியா அம்மையாரே.

சோனியா: வணக்கம். போன வாரம் ரெண்டு மீனவர்களை இலங்கை கடற்படை சுட்டிருக்காங்களே. அங்க நிலவரம் எப்படி இருக்குது?

கலைஞர்: அதெல்லாம் எப்போதும் போலதான் இருக்குது. டிவி, பேப்பர் எல்லாம் நம்ம கட்டுப்பாட்டுல இருக்குறதுனால, நியூஸ் வெளிய வராம அமுக்கி வச்சிருக்கோம்.

சோனியா: ஜெயா டிவில சொல்லுவாங்களே.

கலைஞர்: ஜெயா டிவி சொல்றது எதுவுமே உண்மை இருக்காதுன்னு மக்கள் முடிவுக்கு வந்துட்டாங்க. இப்ப ஜெயாவுல நெஜமாவே உண்மை சொன்னாக்கூட மக்கள் நம்ப மாட்டாங்க.

சோனியா: ராமதாஸ்ஜிகூட ஒரு டிவி வச்சிருக்காருல்ல?

கலைஞர்: நம்ம கூட எப்ப கூட்டணில இணையலாம்ன்னு அவர் காத்துக்கிட்டு இருக்காரு. அதனால் இந்த மாதிரி நியூசெல்லாம் அங்க வராது.

சோனியா: அப்ப மக்களுக்கு இந்த மீனவர்கள் கொலையைப் பத்தி ஒன்னும் தெரியாது. அப்படிதானே?

கலைஞர்: இல்லை. அவங்களுக்கு விஷயம் தெரியும். ஆனாலும், வர்ற தேர்தல்ல ஒரு ஓட்டுக்கு நாம எவ்வளவு பணம் கொடுப்போம் அப்படின்னுதான் ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்காங்க.

சோனியா: அப்ப மீனவர்கள் செத்தா நம்ம கூட்டணிக்கு எதுவும் இழப்பு இல்லையா?

கலைஞர்: இழப்பா? லாபம்தான். செத்துப்போன மீனவர்களுக்கு ஓட்டுக்குக் கொடுக்கவேண்டிய பணம் மிச்சம்தான். இன்னும் நூறு பேர கொன்னாலும், ஒரு ஓட்டுக்கு ரூ. 10000/- அப்படின்னு வச்சாலும், நூறு ஓட்டுக்கு 10 லட்சம் லாபம்தான்.

சோனியா: ஆனா, இறந்தவர்கள் குடும்பத்துக்கு நிதி உதவி கொடுக்கணும்ல்ல?

கலைஞர்: அது அரசு கஜானாவிலேர்ந்து கொடுக்குறது. ஆனா, ஓட்டுக்குக் கொடுக்குறது, நாம மூளையை கசக்கிப் பிழிந்து, ஸ்பெக்ட்ரம் மூலம் சம்பாதித்தது.

சோனியா: உங்களுடைய அனுபவமும் அறிவும் இருக்கும் வரை எதற்கும் கவலைப்படவேண்டியதில்லை. நான் மஹிந்தவிடம் சொல்லி இனி வாரம் 100 மீனவர்களையாவது கொல்ல வேண்டும் என்று கூறிவிடுகின்றேன்.

கலைஞர்: இந்தியப் பெருங்கடலில் த்ரேதாயுகத்தில் ராமனுடன் வந்த வானரத்தில் ஒன்று இயந்திரத் துப்பாக்கியுடன் சுற்றிக் கொண்டிருக்கிறதாம் அப்படின்னு நான் அறிக்கை விட்டுர்றேன். மக்களும், மீனவர் பிரச்னையை மறந்துட்டு ராமன பத்தி எப்படி இப்படி சொல்லலாம் அப்படின்னு பேச ஆரம்பிச்சிருவாங்க.

--------
டிஸ்கி: இந்த உரையாடல்கள் கற்பனையே. ஆனால், நிஜத்தில் நடைபெறக்கூடிய சாத்தியங்கள் இல்லாமல் இல்லை.

Monday, January 24, 2011

தமிழக மீனவர் கொலை. சீன கடற்படை அட்டூழியம்



சமீபத்தில் (பத்துநாளுக்கு முன்னால) - கொல்லப்பட்ட பாண்டியன் என்ற மீனவர் இலங்கை கடற்படையால் கொல்லப்படவில்லை என்று ராஜபக்சே, இலங்கை சிங்கள கடற்படை அதிகாரி வரை கற்பூரம் அடித்து சத்தியம் செய்கிறார்கள்.

ங்கோத்தாபய சவுண்டே காணோம்.

கலைஞர் வழக்கம்போல சிங்கை லட்டர் போட்டு லவ் பண்ணிட்டார். எஸ் எம் எஸ் அனுப்பும்போது ஒரு சின்ன தவறு நடந்துருச்சு. தம்பி நித்யா அனுப்பிய விஜய் பற்றிய காமெடி எஸ்.எம்.எஸை மாற்றி அனுப்பிவிட்டார் சன்முகநாதன். அப்புறம் எலக்சன் வேற வருது. பிரணாப் வந்தார். நல்ல அயிரை மீன் குழம்பு வைக்கப்பட்டது. இளைஞன் குறைந்தபட்சம் சந்திரமுகியின் ரெக்கார்டை உடைக்கும் என்று பா விஜய் அலைபேசியில் சொன்னார். அழகிரி வீட்டுக்கு வரும்போது அப்படியே இதை மறந்திடுவோம். குடும்ப விஷயம் பேசுவோம்.

மைய காங்கிரஸ் அரசுக்கு தமிழ்நாட்டு மீனவன் செத்தான் என்று தகவல் போனால், அது மாரடைப்பு, வவுத்துவலி, எயிட்ஸ் போன்ற இயற்கை மரணம், வீணாக ஊதி அரசியல் ஆக்குகிறார்கள் என்று கேரளாக்காரனால் சொல்லப்படுகிறது. காரணம் நாயரும் நம்பூதிரியும் இருவது முப்பது வருசமா ஐ ஏ எஸ் ஐ பி எஸ் படிச்சு பாஸாகி, பெரிய படிப்பு படிச்சு எல்லா இடத்திலயும் உக்காந்திருக்கானுங்க. இதுல மிகப்பெரிய காமெடி டெல்லிக்காரங்ககிட்ட வொர்க் பண்ற ஒரு கேரளாக்காரர் தமிழ் நாடு அப்படீன்னு இருக்கு அதனால அது தனி நாடு, அந்த நாட்ல நடக்கற பிரச்சனை நமக்கு எதுக்கு அப்படீன்னு சொல்ல அந்தம்மாவும் இதுநாள் வரைக்கும் நம்பிக்கிட்டு இருக்காங்களாம்..

ஆக, இப்ப கொல்லப்பட்ட இந்த ஜெயக்குமார் மேட்டர்ல கயித்தை கழுத்துல இழுத்து சுருக்கு மாட்டி கொன்னிருக்காங்க பாடு பசங்க. செய்தியில கேட்டப்ப இவருக்கு நீச்சல் தெரியாதுன்னு நெனைச்சு ஆச்சர்யம். மீனவராச்சே..ஆனா இவர் சுனாமி தாக்குதல்ல ஊனம் அடைந்தவராம்.

கொன்றவர்கள் தமிழீழ விடுதலை புலிகள் இல்லை. இந்திய படை இல்லை. சிங்கள படை இல்லை. அப்ப பாக்கிஸ்தான் அல்லது சைனா படையாத்தான் இருக்கனும். அப்புறம் என்ணடா முண்ட கலைப்பை, சைனா மேல பழியை போடுடா மடப்பய மருமகனே.



எவ்ரி திங் வில் பீ ஆல் ரைட். இந்தா இது தான் சீன படை கப்பல். கீழ சீனா லெட்டர்லாம் இருக்கு பார். சீன கடற்படை மீது சந்தேகம்னு தினகரன்ல, முரசொலில, விடுதலைல, கலைஞர் டிவில, சன் டிவில, அடிச்சு உடு. பேசாம சீனா தமிழக மக்களுக்கு வெள்ளை பேப்பர்ல தனி விசா வழங்கட்டும். அப்புறம் சீனாக்கிட்ட இந்த மீனவர் பிரச்சனைய டிப்ளமேட்டிக்கா பேசி சரி செய்துடலாம்னு கலைஞர் அறிக்கை விடுவார். அப்புறம் என்ன, கலைஞர் அன்பு உடன்பிறப்பே வென் ஜியாபோன்னு முரசொலில லவ் லட்டர் எழுதுவார். கலைஞரின் சீனன் அப்படீன்ற புது படத்துக்கு ஒரு கோடி வசனம் எழுத அமவுண்டு வாங்குவார். அதுல மதன் கார்க்கி நடிப்பார். நினைக்கவே கொடூரமா இருக்கு. அதே சமயம் சூடு சொரணை கொஞ்சம் கூட இல்லாத இந்த நாட்ல வாழ கேவலமா இருக்கு.

..

Thursday, January 20, 2011

யமுனைக் கரையில் அம்மணக் கூத்து! இன்னொரு சாமியார் வீடியோ! நித்தியைத் தொடர்ந்த சுத்தி!

டால்ஃபின் டைவ் புகழ் நித்தியானந்தா தனது வழக்குகளை எல்லாம் காவிக் கோவண ஆட்சி நடக்கும் கர்னாடகாவில் வெற்றிகரமாக முடித்ததைத் தொடர்ந்து [இந்த லட்சணத்துல எடியூரப்பா சீஎம் சீட்டு தப்பிச்சதே சாமியோட அருளால தானாம்!] மீண்டும் திருவண்ணாமலை கோவிலில் மகாயாகம்; பக்தைகள் புடைசூழ உரைவீச்சு என ஃபார்முக்கு திரும்பியிருக்கும் நிலையில், சுவாமிகளின் வழியில் வடக்கண்ட வீரகாளாம் மம்பட்டி போல ஒருத்தர் செகண்ட் இன்னிங்ஸை ஆடியிருக்கிறார்!


மதுராவில் வசித்து வந்த ராஜேந்திரா என்பவர் புராணக் கதை சொற்பொழிவாளர். அவரது பக்த கோடிகளால் பகவத் ஆச்சார்யா என்று அழைக்கப்பட்டவர். ஒரு மடமும் நடத்தி வந்திருக்கின்றார்.

அங்கு வரும் தனது வெளிநாட்டு பக்தர்கள் மூலம் ஒரு புது தொழில் தொடங்கியுள்ளார். அது தான் பிட்டுப் படங்களில் அர்த்தமுள்ள இந்துமதம்! பிட்டுப்படங்களுக்கு டைரக்டர் கம் ஹீரோவான நமது சாமியார் காட்சிகளை உண்ர்ந்து நடிக்க வெளியாட்கள் ஒத்து(!) வராது என்று நினைத்தார் போலும்; தன் மனைவியிடமே கால்ஷீட் வாங்கி விட்டார். சர்ரியலிஸத்துக்காக அதில் சில குழந்தைகளையும் பங்கு பெறச் செய்திருக்கிறாராம்! பின் நவீனத்துவத்தை எதற்கு பிசினாரித் தனமாக விட்டு வைக்க வேண்டும் என்று அவரது மடத்தையும் பின்புலமாக சித்தரித்து புதுமையை புகுத்திவிட்டார்.

இந்த மேட்டர் எடுக்கும்போது ஒரு தெய்வீக எண்ணம் ஏற்படவேண்டும் என்பதற்காக பின்னணியில் அவரது கடவுள்களின் புகைப்படங்களையும் வைத்துள்ளார். மடத்துக்குள்ளே எடுத்தால் Indoor Film என்றும் கம்மி பட்ஜெட் என்றும் விநியோகஸ்தர்கள் கூறிவிடுவார்கள் என்பதால் யமுனை நதிக்கரையில் சில காட்சிகளையும் எடுத்துள்ளார்.

இந்த ஜிலுக்கு ஜிப்பான் வீடியோக்கள் எல்லாம் ஏற்கனவே பல வெப்சைட்கள் மூலமாக விற்பனைக்கு வந்துள்ளன. இந்நிலையில் பிட்டுப் படங்களால் நிரம்பி பால்வினை வைரஸ் வந்ததோ என்னவோ அவரது லேப்டாப்புக்கு இடுப்பு சுளுக்கி விட்டதாம்! அதனை ஒரு இடத்திற்கு சர்வீசுக்கு செல்ல அங்கிருந்த கரசேவகர்கள் சிலரால் பொது மக்களும் பயன்பெறும் நோக்கில் உள்ளூர் மக்களிடம் சென்று சேர்ந்துள்ளது.

எப்போதும் போல் லேட்டாக விழித்துக்கொண்ட போலீஸ் அவரைத் தேடி செல்ல அவரோ போலிசிடமிருந்து தப்பிக்கும் புனிதப் பயணத்தை மேற்கொண்டார். 15 நாட்கள் கடும் தேடலுக்குப் பிறகு அவரது வீட்டில் வைத்து போலீஸ் செக்ஸ் சாமியாரை கைது செய்துள்ளனர்.(ஊட்டுலயே இருந்த நாய 15 நாள் தேடுனானுகளாம்!)

கைது செய்தபோது ஷூடிங்கிற்கு பயன்படுத்தப்பட்ட கேமெரா,(தொட்டுக் கும்புட்டுங்கப்பா!) பல CD கள் கைப்பற்றியுள்ளனர். அவற்றுள் குழைந்தைகள், மனைவி மற்றும் வெளிநாடினரோடு 'இருக்கும்' பல மணி நேரம் ஓடக் கூடிய விடியோக்கள் உள்ளனவாம்.

நதிக்கரை நல்லசாமியின் தளம் இதோ! http://www.news.vrindavantoday.org/

மேலும் செய்திகளுக்கு!



நன்றி: திரு. கும்மி அவர்கள்., [காலங்காத்தால கவுச்சி மேட்டர் புடிச்சு குடுத்ததுக்கு]

இன்னொரு நன்றி:திரு வால் பையன் அவர்கள்., [இந்த புனிதக் கட்டுரையை நானே உருவாக்கக் கோரியதற்கு!]

Sunday, January 16, 2011

சாரு நிவேதிதாவின் 27வது காதல் கடிதம்

சாரு (எ) சரோஜாதேவி!  

எழுத்தாளர் சாரு நிவேதிதாவுக்கும் இயக்குனர் மிஷ்கினுக்குமான காதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கடந்த ஒரு மாதமாக தனது இணைய பக்கத்தில் 26 காதல் கடிதங்களை எழுதி வெளியிட்ட சாரு இன்றைய(மாட்டுப் பொங்கல்) தினம் தனது வரலாற்றில் இடம் பெறப் போகும் உணர்ச்சி ததும்பும் காதல் கடிதத்தை வெளியிட்டுள்ளார்.
இனி 27வது காதல் கடிதம் உங்களுக்காக....
மிஷ்கின் இந்தத் தொடரைப் படிக்க மாட்டார் என்பது எனக்கு நூற்றுக்கு நூறு தெரியும். ஏனென்றால் அவருக்கு வேறு உருப்படியான வேலைகள் நிறைய இருக்கலாம்!  மேலும், இது மிஷ்கின் பற்றிய பிரச்சினையும் அல்ல.என்னைப் பற்றியது.  30 ஆண்டுக் காலமாக யாரென்றே தெரியாமல் அட்ரஸின்றி இருந்த சாருவை எழுத்தாளன் என்று சொல்லாமல் சரோஜாதேவி என்று உயிருக்கு உயிரான காதலனாக  மதித்த மிஷ்கினும் சொன்னதால் – அதுவும் ஒரு பிரம்மாண்டமான புத்தக வெளியீட்டு விழாவில் சொன்னதால் – இந்த நீண்ட தொடரை எழுத வேண்டியதாயிற்று.
  மிஷ்கினின் பிரச்சினையே படிக்காமல் கருத்து சொல்வதுதான்.படித்துவிட்டால் அவரால் கருத்தெல்லாம் கண்டிப்பாக சொல்ல முடியாது. எங்காவது ஓரஞ்சாரமாக ஒதுங்கிவிடுவார். அமீர் ஒரு புட்டக வெளியீட்டு விழாவில் “எனக்குப் புட்டகத்தை திறந்தாலே கண்ணில் பூச்சி பூச்சியாக பறக்கிறது” என்று குறிப்பிட்டார்.  ஆனாலும் எழுத்தாளர்கள் அவரைப் புட்டக வெளியீட்டு விழாவுக்கு அழைத்து அவருடைய கண்களை ஏன் கெடுக்கிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை.அவர் ஒருதரம் தேகம் புட்டகத்தை படிக்கத்தான் வேண்டும். அப்பொழுது நிச்சயப் பூச்சிகள் பறக்காது புறாக்களாகப் பறக்கும். ஆனால் அமீர் நேர்மையான மனிதர்.  தன் இயலாமையைப் பொதுமேடையிலேயே தெரிவிக்கிறார்.  மிஷ்கினும் அப்படி வெளிப்படையாக இருக்க வேண்டும்.தேகத்தைப் படித்தால் என்கனவில்சரோஜா தேவி போஸ்டர்களாக தெரிகிறது என்று ஒவ்வொரு மேடையிலும் சொல்ல வேண்டும்.  அல்லது, கூலிங் கிளாஸ் கழட்டி வைத்துவிட்டு விழாக்களில் கலந்து கொள்ள வேண்டும்.  ரெண்டும் கெட்டானாக இருந்தால் இப்படித்தான் ஆகும்.
மிஷ்கின் இந்தத் தொடரைப் படிக்காமல் இருந்தால் கூடப் பிரச்சினை இல்லை. ஆனால் இவ்வளவு எழுதியும் என்னை மயிறுக்குச் சமமாக மதித்து கண்டுகொள்ளாமல் விட்டது ரொம்பவும் மோசம். அதன் பிறகு ஒரு நண்பரிடம் சொல்லி மிஷ்கினிடம் போன் போட்டு இதைத் திரித்துத் திரித்துக் கூற வைத்தால்,  அவன் கிடக்கிறான் கேனக் கூனா என்று ஒற்றை டையலாகில் முடித்து விட்டாராம்.  பிறர் கூறுவதைக் கேட்டாவது ஒரு மனிதனுக்கு கொஞ்சம் கோவம் வரக் கூடாது.  கோவம் வரும் முன்பு நாமே படிக்க வேண்டும்.  மிஷ்கின் டிசம்பர் 13-ஆம் தேதிக்குப் பிறகு என்னைத் தொடர்பு கொள்ளவே இல்லை.நானும் ஒரு மாதமாக வாயைத் தொண்ணாந்து வைத்தவாறு காத்திருக்கிறேன்.  ராத்திரி தண்ணி அடித்துக் கொண்டே தேகம் நாவல் பற்றி சாருவும் நானும் விவாதிப்போம் என்று சொன்னவர் அப்படியே காணாமல் போய் விட்டார். அவர் வருவார் சரக்கருள்வார் என வாஞ்சையோடு உக்காந்திருந்த நான் கடைசியில் கிறுக்குக் கூனா ஆகிவிட்டேன்.அவர் என்னிடம் ஒரு குவார்ட்டர் வாங்கி அல்லக்கைகளிடம் கொடுத்தனுப்பி இருந்தால் கூட இந்தத் தொடரை நான் எழுதியிருக்க மாட்டேன்.
நேற்று (15.1.11) புட்டககச் சந்தையில் ஒரு புத்தகத்தை வெளியிட்ட மிஷ்கின் (அது சரோஜாதேவி புத்தகம் மாதிரி இருந்திருக்காது; பகவத் கீதை போல் இருந்திருக்கும்!) என் நண்பரிடம் தனிப்பட்ட முறையில் ”அவனுக்கு என்ன பேதி வந்ததாம்,இன்க்குக்கு கேடாய் 27 அத்யாயம் எழுதினானாம்?” என்று கேட்டதாக அறிந்தேன்.  திரும்பத் திரும்ப செருப்பால் அடிக்கிறீர்கள் மிஷ்கின்.  இந்தத் தொடரைப் படியுங்கள்.  என் கஷ்டம் என்னவென்று புரியும்.  அதைச் செய்யாமல் உங்கள் அத்யந்த நண்பரிடம் போய் என்னை வண்டை வண்டையாக வழித்துக் கொட்டினால் என் பிரச்சினை எப்படித் தீரும்? 
 நான் கேட்கும் மிக சாதாரணமான சரக்கை கூட நீங்கள் வாங்கித் தரவேண்டாம்.  நீங்களே குடித்துப்பார்த்துக் கொள்ளுங்கள்.என் நாய்க்குட்டிகள் என் எழுத்துக்களை வாசிப்பவை அல்ல.  அதுகளுடைய உலகம் வேறு.  நான் என் வாழ்நாளில் எந்த நண்பரையும் இரவில் சந்தித்தது இல்லை. குடித்தால் நான் குடிக்கும் நேரம் மதியம் ஒரு மணியிலிருந்து மாலை நான்கு வரை.  என்னால் இரவு பத்து மணிக்கு மேல் எந்த விஷயத்திலும் மனம் செலுத்த முடியாது.  நான் தூக்கத்துக்கு அடிமை.  ஆனால் எவ்வளவு குடித்து விட்டுப் படுத்தாலும் காலை மூன்றரை அல்லது நான்கு மணிக்கு எழுந்து விடுவேன்.  என் வாழ்வில் யாரையுமே நான் இரவில் சந்தித்தது இல்லை.  அது உங்களுக்காக மட்டுமே நான் செய்து கொண்ட சமரசம்.  நான் உங்களை என் உயிருக்கு உயிராக நேசித்தேன்.  உங்களிடம் பலமுறை சொல்லியிருக்கிறேன்,  நான் ஒரு பெண்ணாக இருந்தால் உங்களை இன்னேரம் கடத்திச் சென்று கற்பழித்து இருப்பேன் என்று.   உங்களை நேசித்த அளவுக்கு நான் என் வாழ்நாளில் எவரையுமே நேசித்ததில்லை; ஆண் பெண் உட்பட.  காரணம் ஒன்றே ஒன்றுதான். ஒருநாள் உங்கள் உதவியாளர் உங்களிடம் “எப்படி சார் பிட்டுப்படம் எடுப்பது?” என்று கேட்ட போது நீங்கள் ஒருக்கணம் கூட தயங்காமல் “சாரு போல இரு; உன்னால் நல்ல பிட்டுப்படம் எடுக்க முடியும்” என்று சொன்னீர்கள் அல்லவா? அந்த வார்த்தைகளை நான் நம்பினேன்.  அடுத்து, நீங்கள் என்னைக் காதலிப்பதாக நம்பினேன்.  அவ்வளவுதான்.  கோபிக்காதீர்கள்.  மீண்டும் மீண்டும் கேட்கிறேன்; சரோஜாதேவி புத்தகங்களை எல்லாம் பொட்டிக்குள் வைத்து எனக்குப் பரிசாக அளித்த நீங்கள் எப்படி என் தேகத்தைப் பார்த்து காறித் துப்பலாம். என்னைத் திருமணம் செய்து கொள்ளுங்கள்.  இந்தத் தொடரை நிறுத்தி விடுகிறேன்.  என்னைக் கல்யாணம் செய்து கொள்ளாதவரை இன்னும் 150 அத்தியாயங்கள் எழுதுவேன்.  ஏனென்றால், 15 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயமோகன் ஆரம்பித்து வைத்த ஆபாச விளையாட்டு இது.  சாரு என்னைக் காதலிப்பதாக சொல்கிறான் என்று.  15 ஆண்டுகளுக்கு முன்பு குற்றாலம் பட்டறையில் வைத்து ஜெயமோகன் சொன்னதையே சகல தரப்பினரும் காறி உமிழ்ந்துகொண்டிருப்பதால் – அதே குற்றச்சாட்டையே நீங்களும் என் மீது வைத்திருப்பதால் – இதற்கு நான் 1000 பக்கங்களில் பதில் சொல்லியாக வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறேன்.  ஜெயமோகனை நான் நேசிக்கவில்லை.  அதனால் அவர் சொன்னதை முட்டாள்தனம் என்று எண்ணித் தூக்கியெறிந்து விட்டேன்.  ஆனால் நீங்கள் அப்படி அல்ல; ”எருமையில் கண்களைத் தோண்டி எடுத்து நாற்காலியில் வைத்து அதில் என் புண்டையை நசுக்கி அமர்கிறேன்” என்று எழுதும் ழார் பத்தாயின் நூலை எனக்குப் பரிசாக அளித்தவர் ஆயிற்றே?  ழார் பத்தாயின் இன்னொரு நாவல் பற்றியும் உங்களுக்குத் தெரியாமல் இருக்காது.  அந்த நாவல் ஒரு தாய்க்கும் மகனுக்குமான காமக் களியாட்டங்களை சரோஜாதேவி மொழியிலேயே பக்கம் பக்கமாகப் பேசுகிறது.  நான் ழார் பத்தாயின் வாலைக் கூடத் தொடவில்லையே ஐயா? 
இரவு பத்து மணிக்கு மேல் உங்களைப் பார்க்கச் சென்று விட்டு காலையில் பால்காரர் பால் போடும் நேரத்தில் வந்து கொண்டிருந்தேன்.  வாரம் ஒருமுறை என்று ஒரு வருட காலம்.  அப்படி என்னதான்  விடிய விடிய செய்வீர்கள்? என்று கேட்கும் பக்கத்து வீட்டுக் காரர்களிடம் ஒவ்வொரு முறையும் ஜெர்மன் ஸ்டைல்,லத்தீன் ஸ்டைல், கேரளா வர்மஸ்டைல் என்றே சொல்லி வந்திருக்கிறேன்.  ஏனென்றால் அதுதான் உண்மை.  ஆனால் நீங்களோ ஒரு பொதுமேடையில் வைத்து சாரு என்னிடம் வாழைப்பழம் மட்டும் தான் தின்பார் என்றீர்களே; ஒரு கோடி ரூபாய் கொடுத்தாலும் இனிமேல் நான் பக்கத்து வீட்டுக் காரர்களிடம் நல்ல பெயர் வாங்க முடியுமா?  இனிமேல் என் வாழ்நாளில் எந்த நண்பரையாவது சந்திக்கச் செல்ல முடியுமா?  இதன் மூலம் நீங்கள் என்னை மட்டும் அவமானப்படுத்தவில்லை. என் நண்பர்களையும் சேர்த்து அவமானப்படுத்தி விட்டீர்கள்.  இனிமேல் நான் மனுஷ்ய புத்திரனிடம் பேசிக் கொண்டிருந்து விட்டு நள்ளிரவில் திரும்ப முடியுமா?  என்னுடைய அமைதியான குடும்ப வாழ்வையே குலைத்து விட்டீர்களே, இது பற்றி நான் 200 அத்தியாயம் எழுதினாலும் இழந்த நல்ல பெயரை மீட்க முடியுமா?  அழைத்தால் சாரு போலாமா?! என்று கேட்பார் என்று கூட்டத்தில் சொன்னீர்களே, நான் போகாமல் இருந்ததற்கு காரணமே நீங்கள்தானே ஐயா?  சரி, இதையெல்லாம் நீங்கள் விளையாட்டாகத்தான் பேசினீர்கள் என்றே எடுத்துக் கொள்வோம்.  என் காதலைப் பற்றி என்ன சொன்னீர்கள்?  நான் சரோஜாதேவி போன்றவர்; நீங்கள் வீட்டில் வைத்துப் புடிக்க முடியாது என்றீர்கள். ஆனால் அதே சமயம், நீங்கள் கண்ணாடி போட்டால் மெண்டல் போலிருக்கிறது என்று ஒரே ஒரு வரி என் இணையதளத்தில் எழுதி விட்டதற்காக இரவு பனிரண்டு மணிக்கு என்னை அழைத்திருக்கிறீர்கள்.  நான் எடுக்கவில்லை என்றதும் மனுஷ்ய புத்திரனை அழைத்திருக்கிறீர்கள்.  மிஸ்டு காலைப் பார்த்து விட்டு நான் அதிகாலை மூன்றரை மணிக்கு உங்களுக்கு போன் செய்தேன்.  அந்த வரியை நீக்கி விடுங்கள் என் இமேஜ் பாதிக்கும் என்றீர்கள்.  அடுத்த நிமிடமே அந்தப் பதிவை நீக்கினேன்.  எதற்காக?  உங்கள் மீதான என் காதலுக்கு நான் கொடுத்த மரியாதை அது.  ஆனால் நீங்கள் அந்த மரியாதையை எனக்கு அளித்தீர்களா?  ஒரு அட்டு ஃபிகரை என்னிடம் குப்பை என்றீர்கள்.  ஆனால் அடுத்த நாளே அந்த ஃபிகருடன் பார்க்கில் அமர்ந்து நீ ஒரு அருமையான பீஸ் என்றீர்கள்.  ஏன்?  அப்படிச் சொன்னால்தான் அந்த ஃபிகரை மடக்க முடியும். அப்படியானால் என்னைப் பற்றியும் ஒன்றும் சொல்லாமல் இருந்திருக்கலாமே?  சாரு என்றால் உங்கள் அக்குளின் மயிர் என்று நினைத்துக் கொண்டீர்களா? இவ்வளவுக்கும் என்தேகத்தை நீங்கள் பார்க்கவே இல்லை.  பார்த்து விட்டு அதை சரோஜாதேவி என்று வர்ணிக்கும் அளவுக்கு ஒரு மூடனாக உங்களைப் பற்றி நான் நினைக்க மாட்டேன்.
கிக்குஜிரோவைத் தழுவி என்னை எடுத்தீர்கள். ஆனால் நான் கிக்குஜிரோவை விட நன்றாக இருந்தேன். அடுத்து என்னையும் நீங்கள் தழுவலாம்.  அது கிக்குஜிரோவைவிடவும் கிக்காக அமையலாம்.  உங்களிடம் அதற்கான தகுதியும் திறமையும் உண்டு.  ஆனால் என்தேகம் வாழ்க்கையை இழந்து உருவாக்கியது.  நான் செய்த வேலைகள் இரண்டு மூன்று ஜென்மத்துக்குப் போதும்.  மூடு தாங்காமல் கனரா வங்கி சென்று தனியறையில் என் ஆணுறுப்பை எடுத்து கரமைதுனம் செய்யும் போது வர வேண்டிய விந்து வராது.  வெளியே அடுத்து வரிசையில் நிற்பவன்“நேரமாச்சு சார்” என்று குரல் கொடுப்பான்.  எனக்கோ பக்கத்தில் ஆள் இருந்தால் சிறுநீரே வராது.  அதனால் கழிப்பறைகளில் மூடிய அறை இருக்கிறதா என்றே தேடுவேன்.  சிறுநீருக்கே அந்த கதி என்றால் விந்து விஷயத்தை என்னவென்று சொல்ல? வெளியே ஒரு பெண் கதவையும் தட்டிக் கொண்டிருந்தால்…  இந்த அவமானத்தை நீங்கள் அடைந்ததுண்டா?  இதை சொன்னால் நான் சரோஜாதேவியா?  சரோஜாதேவி  இப்படித்தான் சொன்னார்களா?
மூடு தாங்க முடியாமல் போற வர்ற பயலுகளுக்கெல்லாம் குப்பி கொடுத்திருக்கிறேன்.  குப்பி என்பது நாகூர் வார்த்தை.  சென்னையில் என்ன வார்த்தை என்று தெரியாது.  கேடமைட் என்று ஆங்கிலத்தில் சொல்லலாம்.  ஒரு ஆள் தன் காமத்தைத் தணித்துக் கொள்வதற்காக புட்டத்தைக் காண்பிப்பது.  அதில் ஒரு ஆள் காமவெறியில் என் முதுகெங்கும் நகத்தால் கீறி விட்டான்.  அந்தக் காயம் ஒரு மாதம் தீராமல் வேதனையில் வெந்தேன்.  அதற்குப் பிறகுதான் உங்களைக் காதலிக்கத் தொடங்கினேன்.   இதைத்தான் உங்களிடத்தில் சொன்னேன். சரோஜாதேவி இப்படித்தான் சொல்வார்களா மிஷ்கின்?
உலகத்தில் ஒருவன் ஆண் வேசியாக இருப்பதைப் பார்க்க முடியும்; பிக் பாக்கெட் திருடர்களையும் உலகில் காண முடியும்.  ஆனால் நான் இப்படி வாழ்ந்த போதெல்லாம் இரண்டு கோடீஸ்வரர்கள் என் நெருங்கிய நண்பர்கள்.  ஒருவர் பத்திரிகையாளர்.  ஒருவர் இப்போது பிரபலமாக இருக்கும் ஒரு பெண்.  ஒருநாள் அந்தக் கோடீஸ்வரருடன் பார்க் ஷெரட்டனில் மது அருந்திக் கொண்டிருப்பேன்.  மறுநாள் ஒரு ஆளுக்குக் குப்பி கொடுத்துக் கொண்டிருப்பேன்.  இதுதான் என் பொழப்பு.
(உங்களை ஆத்மார்த்தமாக இன்னும் நான் காதலிக்க ஆரம்பிக்கவே இல்லை மிஷ்கின். அதற்குள் அலுத்துக் கொள்ளாதீர்கள்…)
வேண்டுகோள்; தயவு செய்து கண்ணாடியைக் கழட்டி வைத்துவிட்டு படிக்கவும்! 
பின் குறிப்பு : ஹேப்பி மாட்டுப் பொங்கல் மிஷ்கின்! ஐ லவ் யூ சோ மச்! லவ் யூ மோர்தன் எனிதிங்! 

Monday, January 3, 2011

நைட்டு ஒம்போது மணிக்கு டிஸ்கவரி சேனல்ல

தலைப்பை பார்த்து டர்ஜ் ஆகவேண்டாம். நாங்களும் போலி மத நம்பிக்கைகள், மூடநம்பிக்கைகள் என்று பல விஷயங்களை இந்த ஆல் இன் ஆல் வலைப்பூ வழியாக எழுதி வருகிறோம்.

எமது குழுவின் வால் பையனும் பரிணாமம் பற்றி தன்னுடைய சொந்த வலைப்பூவில் டவுசர் கிழித்து வருகிறார்.

இன்றைக்கு இரவு ஒன்பது மணிக்கு ஸ்டீபன் ஹாக்கின்ஸ் - இந்த பிரபஞ்சத்தில் இப்போது வாழும் மிகச்சிறந்த அறிவியலாளர்களில் ஒருவர் - ஏலியன்ஸில் இருந்து டைம் ட்ராவல் வரை பல விஷயங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்
.


மத நம்பிக்கை இல்லாதவர்கள், போலி மத நம்பிக்கை கொண்டவர்கள், எதிலுமே பற்றில்லாதவர்கள், என்று எல்லா தரப்பினரும் பார்க்கவேண்டியது இன்று இரவு ஒம்போது மணிக்கு டிஸ்கவரி சேனல்.