Saturday, November 26, 2011

மயக்கம் என்ன! - A Film By Selvaragavan!

விஷூவல் மீடியம் கலை வடிவமான சினிமாவில், இந்தியப்படங்கள் தொட மறுக்கும் அழகுணர்ச்சியை வடிக்க பாலுமகேந்திரா போன்ற சிற்சில இயக்குநர்களே முயன்றிருக்கின்றனர். அவ்வகையில் சமகாலத்திய வெளிச்சம் செல்வ ராகவன். எல்லா படங்களிலும் End கார்டில் A Film By போட்டுக்கொள்கிறார்கள் தான், ஆனால் அதற்கெல்லாம் வக்கு இருக்கிறதா அந்தப் படங்களுக்கு என்றொரு கேள்வி தொக்கி நிற்கும். ஆனால் செல்வராகவன் படங்களின் நிறமும், அழகுணர்ச்சியும் இன்ன பிறவும் தனித்துவம் மிக்கவை.

செல்வராகவன் போன்ற இயக்குநரின் படங்களை மேற்கத்திய படங்களுடன் ஒப்பிட்டு குறைத்து எண்ணுவதும், சில பல மொக்கையர்களின் மொக்கைகளுக்கு ஜனரஞ்சகம் என்ற பெயரில் கிரீடம் சூட்டுவதும் என்னளவில் ஏற்புடையதாக இல்லை. 

ஒரு ஐரோப்பியன் பனி பொழியும் மலைச்சாரலை கேமராவில் படம் பிடிக்கிறான் என்றால் இங்கேயும் செட் போட்டு, தெர்மகோல் அட்டையை தூள் தூளாக்கித் தூவிக்கொண்டு அதைப் படம் பிடிப்பது மடத்தனம். கேமராவில் காட்சிப்படுத்த அவனுக்கு பனி மலை எனில் நமக்கு வறண்ட பாறையாக இருப்பதுதான் இயல்பான ஒன்று. பாவைக்கூத்தின் பரிணாம வளர்ச்சியாகத்தான் நமது சினிமா இருக்கும்! இருப்பது அழகு! பாடல்கள், நாடகத் தன்மை என நமது சினிமாவுக்கான வார்ப்பு சிதையாமல் இருப்பதே நல்லது என்பது என் துணிபு.

நம் வாழ்வியலை, அதன் நிஜத்துக்கு மிகவும் அண்மையில் காட்சிப்படுத்தும் கலை கைவரப்பெற்றவர்கள் பெரும்பாலும் தமிழ் சினிமாவில் கிராமத்து மக்கள் மற்றும் அவர்கள் சார்ந்த பூமி என படமாக்குபவர்களாகவே இருந்திருக்கிறார்கள். விதிவிலக்காக பாலு மகேந்திரா. மயக்கம் என்ன திரைப்படம் அவரது மாஸ்டர் பீஸ்களின் நிறத்தைக் கொண்டிருந்தது. நிஜத்துக்கு வெகு அருகில் நெருங்கி நின்றது என்றும் சொல்லலாம்.

மிகச்சிறந்த ஒரு நடிகனின் வெர்சடைல் ஆகிருதியை, திரையின் ஒரு மூலையில் தெரியும் தன் கண்களின் மூலம் கூட பார்வையாளனை கவர்ந்து ஈர்க்கும்; தன்னிடத்தில் ஒரு கூட்டத்தின் கருத்தை செறிவுடன்  நிற்கச்செய்யும் திறனை இதுவரை இல்லாத அளவு வெளிக்கொணர வாய்ப்பளித்திருக்கிறது கார்த்திக் கேரக்டர்! 

10 கதாபாத்திரங்களுடன் ஒரு ட்ராமா! யதார்த்தமான வசனங்கள், அழகிய கேமரா மொழி, வருடும் பின்னணி இசை, ஏற்கனவே ஹிட்டடித்த பாடல்கள். தனுஷ்-செல்வா காம்பினேஷன் - ஏமாற்றவில்லை.

மனதில் இருக்கும் ஸ்க்ரிப்டை போகிற போக்கில் ஷூட் செய்யும் செல்வராகவனின் வழக்கத்தாலேயே தென்படும் சிற்சில சொதப்பல்கள் மனதில் நிற்பதில்லை. 

படத்தின் மையம் தனுஷ்-ம் அவர் மூலம் வெளிப்படும் செல்வராகவனும் தான். வனவாழ்வு சார் புகைப்படக் கலையில் ஆர்வம் கொண்ட ஹீரோ, மறுக்கப்படும் திறமை, காதல், சகிக்கவொட்டாத துரோகம், ஏமாற்றம், விபத்து, மனநிலை பிறழ்வு, காதலின் அரவணைப்பு, அதிர்ச்சி, மீட்சி, வெற்றி. இதுதான் கதைப்போக்கு! இதில் தனுஷ் மட்டுமின்றி ஏறக்குறைய எல்லோருமே நடிப்பில் சராசரிக்கும் மேலே! 


முதலில் தனது நடிப்பில் அன்னியமாகப் படும் ரிச்சா இரண்டாம் பாதியில் தனுஷுடன் போட்டி போடுகிறார். அதீத மனநிலை கொண்ட தனுஷால் கீழே தள்ளிவிடப்பட்டு கர்பம் கலைந்து ரத்தம் நிலமெல்லாம் பரவும் காட்சியில் தனுஷின் எக்ஸ்பிரஷன்ஸும் அதற்கடுத்து ரத்தக் கறை காய்ந்து படிந்த அந்த ஃப்ளோரை சுத்தம் செய்கையில் கதறும் ரிச்சாவின் நடிப்பும் அசாதாரணம். காய்ந்த ரத்தம் தனது குழந்தை என புரிந்து அழுவதுடன் மனச்சிதைவிலிருந்து மீள்கிறான் எனச் செல்கிறது திரைக்கதை.

டேட்டிங் காதலனின் நண்பனை நாயகி காதலிப்பது, நாயகனின் தங்கையை டேட்டிங் காதலன் கைப்பிடிப்பது போன்றவை வலிந்து திணிக்கப்பட்டவையாகவோ, விசித்திரமானவையாகவோ எனக்குத்  தோன்றவில்லை. இன்றைய நிதர்சனம் இதை ஒட்டியே இருக்கிறது.

விபத்தால் மனச்சிதைவில் இருக்கும் தனுஷின் மீது அன்பைச் சொரியும் ரிச்சா, அவ்விடத்தில் மிக அழகாய்ப் பொருந்தும் பிறைதேடும் பாடல், சைந்தவியின் குரல் ஆகியவை அன்பாய்(!)  இருக்கின்றன. சாதாரண மனிதர்களின் சாதாரண வாழ்வை அசாதாரணமாக்கும் சில நிகழ்வுகளின் தொகுப்பாய் இந்தக் கதை மிக அழகான சினிமா! 

மனித மனத்தின் பக்கங்களை சினிமாவில் விரிக்கும் செல்வராகவனின் ரசனை, தெரிவு முதலியவை பாராட்டுதல்களுக்குரியவை. இறுதிக்காட்சிகளில் சுபம் போட மெனக்கெடுவது போன்ற கிளிஷேக்கள் செல்வராகவனின் நெகடிவ் கிளிஷேவைத் தவிர்த்த வகையில் ஓகே!


தனுஷைத் தவிர வேறெவரும் செல்வாவுக்கு சரிப்பட்டு வரமாட்டார்கள் என்பது மட்டும் நிச்சயம்! வெகுஜன ரசனைக்கு உகந்த படமாக இருக்குமா என்ற சந்தேகம் இருக்கிறது. இந்தப்படம் செல்வராகவன் பந்தயத்துக்கு விட்ட குதிரையாக இருக்காது என நம்புவதால் அதைப்பற்றிக் கவலை இல்லை.

வேறெதனுடனும் ஒப்பிட முயலவில்லை. ஒப்பீட்டளவில் சினிமா பார்ப்பது என் வழக்கமும் அல்ல. என் வரையில் மயக்கம் என்ன என்ற வினா வாக்கியத்தின் முடிவில் வினாக்குறியை அல்ல வியப்புக் குறியிடவே செய்வேன்! 

ராஜன்.

38 comments:

PaulGregory.... said...

மயக்கம் என்ன போலவே என்னால் இந்த எழுத்தையும் ரசிக்க முடிந்தது ! வாழ்த்துகள் ராஜன் !

ஆகாயமனிதன்.. said...

வீணாகப் போன அறி குறியும் அல்ல !
Nice Review !

Sabari said...

Nice Review !

rajesh said...

மயக்கம் என்ன படம் எனக்கு புடிக்கலைய்யா,,,, ஆனா உன் எழுத்து அந்த படத்த ரசிக்க வைக்குதுய்யா..! செம..! வாழ்த்துகள் ராஜன்..!

Selvaraj Chettiar Ekambaram said...

Very good movie and very professional. Selvaraj Chettiar

தங்கராஜா கீர்த்திராஜ் said...

படத்தின் டிவிட்டர் விமர்சனங்களை விட உங்களின் ஒவ்வொரு வார்த்தைகளுமே படத்தின் ஒவ்வொரு பிரேம்களாய் நம்முன்னே காட்சி விரிக்கின்றது, கட்டாயம் தியட்டரில் பார்க்கவேண்டும் அருமையான விமர்சனம் ஒரு ரசனையுள்ள கலைஞனாய்

த.லட்சுமணன் said...
This comment has been removed by the author.
த.லட்சுமணன் said...

"டேட்டிங் காதலனின் நண்பனை நாயகி காதலிப்பது, நாயகனின் தங்கையை டேட்டிங் காதலன் கைப்பிடிப்பது போன்றவை வலிந்து திணிக்கப்பட்டவையாகவோ, விசித்திரமானவையாகவோ எனக்குத் தோன்றவில்லை. இன்றைய நிதர்சனம் இதை ஒட்டியே இருக்கிறது." விமர்சனத்தின் நடுநிலை தன்மையை இந்த வரிகள் உணர்த்துகின்றன... அருமையான விமர்சனம் தோழர்... உடனே படத்தை பார்க்கவேண்டும்... நன்றி....

கோகுல் said...

எனக்கு படத்தைப்பற்றி கவனம் போகவில்லைங்க,உங்க எழுத்து நடை அடடா... கட்டிப்போட்டுவிட்டது.

காவேரிகணேஷ் said...

ராஜன், உங்கள் எழுத்து வசீகரிக்கிறது..

chinnapiyan said...

நல்லதொரு விமர்சனம்.நன்றி

ராம்குமார் - அமுதன் said...

பிரமாதமான விமர்சனம். அழகு.

மனித புத்திரன் said...

எலும்பன் தனுசுக்கு குடுத்ர்த காசுக்கு ஜால்ரா போட்ட!மெண்டல் ராகவன் படத்துல ஒருத்தனாவது மேண்டலா இருப்பான்!இதை எல்லாம் ஒரு படம்னு சொன்னா ஐயோ!எலும்பன் தனுசு!ஒன்றை கண்ணன் மெண்டல் ராகவன் தமிழ் தெரியாத ஐசுவரியா இந்த குடும்பத்துக்கு போய் சேவகம் பண்ணுடா!

விடுதலை கரடி said...

மொக்கை படம் தலை வழிதான் மிச்சம்!அட போங்கையா!

விடுதலை கரடி said...

வாங்குன காசுக்கு மீறி கூவுராண்டா கொய்யால!ராஜன்!பகுத்தறிவு கட்டுரைகள் எங்கே?மத வாதிகளின் மிரட்டலுக்கு பயந்து சினிமா விமர்சனத்துக்கு ஜம்ப்!நல்லா இருக்குய்யா உம்ம வீரம்!பீஜே காலில் உழுந்தியாமே?

மனித புத்திரன் said...

ஒடுக்கு உழுந்த மூஞ்சி காரண தனுசு!அவன் மூஞ்சியை பத்தி ஒன்னுமே எழுதல?(போன முறை பார்த்திபன் மூஞ்சியை கிண்டல் பண்ணியே இப்போ தனுசின் அழகை ஏன் விவரிக்களை?)ஐயோ பீஜெவின் மிரட்டலுக்கு பயந்து சினிமாவுக்கு பாய்ந்த ராஜன் நிலை அந்தோ பரிதாபம்!மெண்டல் செல்வா ராகவன் காலி விழுங்கடா!

வடக்குபட்டி ராம்சாமி said...

டப்பா படம் தனுசு கொசுப்பய!!ஒன்றை கண்ணு டோரியா செல்வா ராகவன் மெண்டல்!

Naran said...

இன்ஷா அல்லாஹ் அருளால் உங்களிடம் இருந்த அறியாமை எண்ணங்கள் நீங்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது!கடவுளை நின்தித்தல் என்னும் அறியாமையை நீங்கள் விட்டோழித்தது மகிழ்ச்சி!நம் அனைவர் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக்!

ராஜ் said...

பாஸ்,
படமும் குழப்பமாக இருக்கும்...உங்க விமர்சனமும் ரொம்ப குழப்பம்...கொஞ்சம் புரியறமாதிரி எழுதுங்க...

வடக்குபட்டி ராம்சாமி said...

தனுசின் கீழ்த்தர பொருக்கி கதாபாத்திரங்கள்:ஞானி விளாசல் :
http://gnani.net.in/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF/?cat=8

மனித புத்திரன் said...

தவ்ஹீத் ஜமாத்தின் மிரட்டலுக்கு பணிந்து தனுசின் அடிவருடி ஆன ஒன்னுக்கு உடும் லீக்ஸ் ராஜாவை தவ்ஹீத் ஜமாஅத் பாராட்டுகிறது!இதையே கண்டின்யூ பண்ணு.அதான் உனக்கு நல்லது!
***********************************

மனித புத்திரன் said...

ஆமா வித்தகன் படத்துல பார்த்திபனின் முகத்தை கிண்டல் செய்தியே இந்த படத்தில் தனுசின் சொட்டும் அழகையும் கொஞ்சம் விமர்சிங்கன்னோவ்!!

vijay said...

செல்வராகவன், படைப்பாளியாக தனது பொறுப்புகளை உணர வேண்டும். தவறான சில நிகழ்வுகளை திரையில் காட்டுவதை 'எங்கதான் சார் நடக்கல?' என்று நியாயப்படுத்த கூடாது.

vijay said...

மேற்க்கத்திய கலாச்சாரத்தினாலும், மேற்க்கத்திய திரைபடங்களாலும் செல்வா எந்த அளவுக்கு ஈர்க்கபட்டுள்ளார் என்பதற்கு அவர் படங்களே சாட்சி.. அவர் நமது வாழ்வியலை படமாகுகிறார் என்பதை ஏற்றுகொள்ளமுடியவில்லை..vijay_porayar@twitter.com

தமிழினி said...

உங்கள் பதிவை மேலும் பிரபலப் படுத்த / அதிக வாசகர்களைப் பெற உங்கள் பதிவுகளை தமிழ்10 தளத்தில் இணையுங்கள் . ஓட்டளிப்பில் புதிய மாற்றம் செய்யப்பட்டு இருப்பதால் இப்போது தரமான பதிவுகள் அனைத்தும் முன்பை விட விரைவிலேயே பிரபலமான பக்கங்களுக்கு வந்து விடும் .தளத்தை இணைக்க இங்கே செல்லவும்

http://www.tamil10.com/

ஒட்டுப்பட்டை பெற



நன்றி

வடக்குபட்டி ராம்சாமி said...

தனுசு பற்றி நான் சொன்னபோது ஆட்சேபித்தவர்கள் இதை படிக்கவும்!தனுசு படங்களும் அழுகிய சமூகமும் (நன்றி ஞானி)
http://vadakkupatti.blogspot.com/2011/11/blog-post.html

மாயன் : அகமும் புறமும் said...

நீங்கள் சொல்கிற மாதிரி நிச்சயம் செல்வராகவன் வேறுபட்டவர். ஆனாலும் ஏதோ ஒன்று இடிக்கிறது அவர் படங்களில்...அந்த மயக்கம் என்ன என்று தெரிந்து விட்டால் இன்னும் எங்கேயோ போய்விடுவார் என்று தோன்றும். உண்மையே பாலுமகேந்திராவுக்கு அப்புறம் இந்த மாதிரியான சப்ஜெக்ட்ஸ் எடுக்க இவர் தான் சரியான ஆள். பாலுமேகேந்திரா தன் வாழ்வில் நிறைய வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளாமல் நேரம் கடத்தியவர் என்று சொல்வார்கள். அவர் தகுதிக்கு நிறைய தரமான படங்கள் எடுத்திருக்கிலாம். செல்வா நிச்சயம் அதை நிகழ்த்துவார்.

இன்று என் வலையில் ;

யானை ஆடி நின்றிருந்த காலியான கொட்டில்...!

jroldmonk said...

"பாடல்கள், நாடகத் தன்மை என நமது சினிமாவுக்கான வார்ப்பு சிதையாமல் இருப்பதே நல்லது என்பது என் துணிபு."
-என் கருத்தும் இதுவே.செல்வா ராகவன் இதை தெரிந்தே அனைத்து படத்திலும் கடை பிடிக்கிறார்.
வசீகரிக்க கூடிய எழுத்து நடை பாஸ்.. நன்று.

praveen said...

rajan watch beautiful mind... this movie's 2nd half copied from that movie...

praveen said...

rajan watch beautiful mind.... 2nd half copy

வடக்குபட்டி ராம்சாமி said...

விக்ரமன் படத்தில் ஹீரோ ஒரு பாடலில் பணக்காரன் ஆவது போல இந்த படத்தில் தனுஷ் பின்னணி இசையில் சர்வதேச விருதை பெறுகிறார்///
.
.
ஹீய்யி!!!எல்லாரும் கைதட்டுங்க!இதான் ஒலக சினிமா!

மணிஜி...... said...

நல்லா எழுதியிருக்கே ராஜன்..

உமா கிருஷ் said...

படம் நல்லா இருக்கு இல்ல என்ற விசயத்திற்கு அப்பாற்பட்டு இந்தப் படத்திற்கு நீங்கள் விமர்சனம் எழுதிய விதத்தினை வெகுவாக ரசித்தேன் வாழ்த்துகள் உங்கள் எழுத்துகளுக்கு மட்டும் :)

freeyavudu_mame said...

அருமையான நடை. வசீகரமான வார்த்தைகள். உங்கள் விமர்சனத்துக்காகவே மயக்கம் என்ன பார்க்கலாம்...

வால்பையன் said...

//நன்றி ஞானி//

வடக்குபட்டி அது ஞாநி

ஞானி என்று கோவையில் ஒருவர் இருக்கிறார், தகவல்பிழையை கொஞ்சம் பார்த்துக்கோங்க!

வடக்குபட்டி ராம்சாமி said...

சாரி!ஆமா கோவை ஞானி என்று ஒருவர் உள்ளார்!திருத்தி கொள்கிறேன்!

வடக்குபட்டி ராம்சாமி said...

@ராஜன்
என்னைய்யா மதங்களின் டவுசர் அவுக்கும் பதிவுகளையே இப்போது காணோம்!

D.R.Ashok said...

ப்ளாகர் உலக புத்திஜீவிகள் விமர்சினத்தினால்(negative) படம் பார்க்கவேயில்லை.. எவ்வளவு மடத்தனம்...

நல்ல எழுதியிருக்கீங்க ராஜன் (இதுவும் கிளிஷேதான்) :)