**************
வண்ணத்தில் இருப்பவை எங்கள் கேள்விகள்(கருத்துகள்)!
//குர்ஆன் என்பது அல்லாஹ் தன் தூதவரான ஜிப்ரீல் என்ற வானவர் மூலம் நபிக்கு அருளியது.//
ஆறு நாளில் மொத்த உலகையும் படைத்த கடவுள் அந்த ஜிப்ரீலை எப்போது படைத்தார், எங்கே வைத்திருந்தார்!, மேலும் குரான் ஜிப்ரீலால் தானே முகமதுவுக்கு சொல்லப்பட்டது, பிறகு ஏன் கடவுளால் நேரடியாக இறக்கபட்டது என சொல்லி வருகிறீர்கள்!
//அது நபியுடைய காலத்திலேயே மனித மனங்களில் தொகுக்கப்பட்டு விட்டது. அது இறைவனால் பாதுகாக்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டது.
அது தற்போதைய புத்தக வடிவிலில்லாமல் எலும்புகளிலும் மரப்பட்டைகளிலும் எழுதி வைக்கவும் பட்டிருந்தது.//
குரானின் மூல வடிவம் முற்றிலுமாக அழிக்கபட்டது அனைத்து இஸ்லாமியருக்கும் தெரிந்ததே, பாதுகாக்கப்படும் என கடவுளாலே உறுதியளிக்கபட்ட குரான் ஒரு மனிதனால் அழிக்கபட்டிருக்கிறது!, இருந்தும் தற்பொழுது இருப்பது கடவுளால் கொடுக்கபட்ட குரான் என்று எப்படி சொல்கிறீர்கள்?
//யாருடைய மனங்களில் தொகுக்கப்பட்டிருந்ததோ அவர்களில் சிலர் குழுவாக ஒரே நேரத்தில் கொல்லப்பட்ட போது அதை சரியானபடி தொகுத்து பாதுகாக்க வேண்டிய கட்டாயம் நபிக்கு பின் வந்த உத்தம கலீபாக்களால் உணரப்பட்டு தற்போதைய புத்தக வடிவிலானது.//
முகமது இறந்த சில வருடங்கள் கழித்து அவரது நண்பர்களுக்கு உணரப்பட வேண்டிய காரணம் என்ன, அது கடவுளால் அவர்களுக்கு சொல்லபட்டது என்றால், முகமது கடைசி நபி என்பது பொய்யாகிவிடுகிறது, அவர்களுக்கா தோன்றியது என்றால் அதிலுள்ள விசயங்களின் உண்மை தன்மையை சந்தேகிக்க வேண்டியிருக்கிறது!
//கீழள்ளவை நம்பிக்கையாளர்களுக்கே போரடிக்கலாம். நீங்கள் கேட்டதால்தான் ஓரளவுக்கு சுருக்கமாய் விளக்குகிறேன்.//
செக்கு மாடு அதே பாதையில் தான் சுத்தும் தோழரே! நீங்க எனக்கு சொல்லுங்க!
//ஹதீஸ்கள் எனப்படும் நபியவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகியவை செவிவழியாக ஒருவர் பின் ஒருவராக செய்தியாகத்தான் அறிவிக்கப்பட்டு வந்தது.//
குரானும் முகமதுவின் சொல்களால் தொகுக்கபட்டது தானே!,
//நபியவர்களின் காலத்திற்கு பிந்தைய நூறாண்டுகளுக்குப் பின்னரே அவை தொகுக்கப்பட்டது.//
குரானும் முகமது இறந்து சில ஆண்டுகளுக்கு பின் தொகுக்கபட்டு பின் அதை சொன்ன முகமதுவின் நண்பர்களின் மூலவார்த்தைகள் அழிக்கப்பட்டு விட்டது!
//அதற்குள்ளாகவே அவற்றில் சிலரது விருப்பு வெறுப்புகளுக்கேற்ப கைச்சரக்குகள் நுழைவிக்கப்பட்டு விட்டது.//
ஹதீஸில் விருப்பு, வெறுப்பு நுழைந்துவிட்டது என நம்புகிற நீங்கள் குரானை மட்டும் கண்மூடிதனமாக நம்புவது ஏன்!?
//யூதர்களும் தங்களின் பங்களிப்பை கணிசமாக செய்திருந்தனர்.//
ஆபிரஹாம மதத்தின் ஆரம்பம் யூதர்களிடம் தானே இருக்கு, அவர்கள் யகோவா, கர்த்தர் என அழைப்பவரை தானே நீங்கள் அல்லா என்கிறீர்கள், பழைய ஏற்பாட்டை இன்னும் கடைப்பிடிப்பவர்கள் தானே யூதர்கள், உலகம் ஆறேநாளில்!? கடவுளால் படைக்கபட்டது என அவர்களும் தானே நம்புகிறார்கள், அவர்கள் வழிவந்து தானே நீங்களும் விருத்தசேதம்(சுன்னத்) செய்து கொள்கிறீர்கள், உங்களுக்கு முன்னரே தூதர்களை கண்ட யூதர்கள் ஹதீஸில் தவறு செய்திருப்பார்கள் என நம்பப்படுவதின் காரணம்!?
//அது யாரிடமிருந்து யாருக்கு சொல்லப்பட்டு பின்னர் யாருக்கு என அந்த வரிசையில் வந்த அனைவருமே நம்பகமானவராக இருக்கும் பட்சத்தில் அது ஏற்றுக் கொள்ளப்பட்டதாகும்.//
நம்பகமானவர் என்பது எந்த அடிப்படையில் முடிவு செய்யபடுகிறது, அப்பொழுது அவருக்கு இருந்த வசதியை பொறுத்தா!?
//ஆரம்பத்தில் தொகுக்கப்பட்டவைகளில் நம்பகமற்ற செய்திகளும் கலந்தே இருந்தன.//
அதே நம்பகமற்ற செய்திகள் குரானிலும் இருக்காது என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கு!?
//பின்னர் வந்த இமாம்கள் அவற்றை தரம் பிரித்து வைத்தனர். எது மாதிரியான தரமற்றவைகள் எல்லாம் இருந்தன என்பதையும் பின்னால் வருபவர்களுக்கு பாடமாக இருக்க தரமற்றவைகள் என்ற தலைப்பில் தனி நூலாக தொகுத்தும் வைத்துள்ளனர்.//
தரமற்றவை, தரமுள்ளைவை என்பதை விட உண்மையானவை, பொய்யானவை என்று தானே இருக்க வேண்டும்! இமாம்களா கூட இருந்து பார்த்தார்கள், குறிபிட்ட ஹதீஸ் பொய்யென்று!?
//எந்தெந்த வகையில் பலவீனமானவை என ஹதீஸ்கள் ஒதுக்கப்டுகின்றன?
1. ஒரு ஹதீஸை நபித்தோழர்கள் நேரடியாக அறிவிக்காமல் அதற்கு அடுத்தத் தலைமுறையினர் நேரடியாக அறிவித்தால், அவர்கள் நபி (ஸல்) அவர்களைப் பார்த்துப் பழகும் வாய்ப்பில்லை என்பதால் அத்தகைய ஹதீஸ்கள் பலவீனமாகி விடும்.//
அடுத்த தலைமுறைக்கு பெற்றொர்கள் சொல்வது வழக்கம் தானே! அப்படி தானே ஒவ்வொரு மதமும் வலுப்பெறுகிறது, உங்கள் பெற்றோர் சொல்லி தானே இஸ்லாம் உங்களுக்கு தெரியும்!
//2. அறிவிப்பாளர்களுக்கு மத்தியில் தொடர்பின்மை இருந்தால் அவைகளும் பலவீனமாகும்.//
தொடர்பு இல்லையென்று இமாம்களுக்கு எப்படி தெரியும்!?
//3. நபித்தோழர் ஒரு ஹதீஸை அறிவித்து அதன்பிறகு வரும் அறிவிப்பாளர்களிடையே தொடர் விடுபட்டிருந்தால் அதுவும் தொடர் அறுந்த பலவீனமான ஹதீஸாகும்.//
முகமதுவின் தோழர் பொய்யே சொல்லமாட்டார் என எந்த நம்பிக்கையில் நம்புகிறீர்கள்!?
//4. எனக்கு இவர் இந்த ஹதீஸை அறிவித்தார் என்று ஒரு அறிவிப்பாளர் கூறும் போது அவர்கள் இருவரும் சமகாலத்தில் வாழ்ந்தவராகவும் இருவரும் நேரடியாக சந்திக்கும் வாய்ப்பை பெற்றவராகவும் இருக்க வேண்டும். அதில் ஏதாவது குறை இருந்தால் அதுவும் பலவீனமாகும்.//
சமகாலத்தில் வாழ்ந்தார் அல்லது இல்லை என்ற வரலாற்று நிகழ்வுகளை எதை வைத்து நம்புகிறீர்கள், முகமதுவின் நண்பரின் நண்பரே பொய் சொல்லும் பொழுது வரலாற்றை தொகுத்தவன் மட்டும் உண்மையை மட்டுமா சொல்வான்!?
//5. நபித்தோழர்களைத் தவிர்த்து இதர அறிவிப்பாளர்களில் எவராவது பொய்யர் என்று பரவலாக இனங்காட்டப்பட்டால் அதுவும் பலவீனமாகும்.//
பொய்யர் என இனங்கானப்பட உங்களுக்கு இருக்கும் ஆதாரம் மெய்யானது என்பதற்கு என்ன ஆதாரம்!?
//6. மார்க்கத்திற்கு முரணான காரியங்களைச் செய்யக் கூடியவர்கள் அவர்களது செயல்களை நியாயப்படுத்தி ஹதீஸ்கள் அறிவித்தால் அதுவும் பலவீனமாகும்.//
முகமதுவே தனது செயல்களை நியாயப்படுத்தி பல வசனங்களை சொல்லியிருக்கும் பொழுது மற்றவர்கள் சொல்வது மட்டும் எவ்வாறு பொய்யாக இருக்கும்!
//7. ஒரு அறிவிப்பாளர் இளமையில் நல்ல ஞாபக சக்தியுடன் இருந்து பிற்காலத்தில் ஞாபக சக்தியில் தடுமாற்றம் ஏற்பட்டால், தடுமாற்றம் ஏற்பட்ட பின்பு அறிவித்தவை பலவீனமாகும். அவருக்கு எப்போது தடுமாற்றம் ஏற்பட்டது என்ற தகவல் தெரியாவிட்டால் அவர் அறிவித்த முழு செய்திகளும் பலவீனமாகும்.//
ஒருவர் சொல்கிறார், அவராக சொன்னால் தான் ஆச்சு, சரியாக ஞாபகமில்லைன்னு, நீங்களே எப்படி தடுமாறுகிறார், அவருக்கு 1512 மே 23 ஆம் தேதி மதியம் மூன்று மணியிலிருந்து ஞாபகத்தில் தடுமாற்றம் ஏற்பட்டது என சொல்ல இஸ்லாத்தில் இருந்த மந்திரவாதி யார்!?
//8. ஒரு செய்தியை அறிவிக்கும் போது ஒருமுறை ஒருவர் பெயரையும் அடுத்த முறை அறிவிக்கும் போது பெயரை மாற்றியும் அறிவித்தால் தடுமாற்றத்தின் காரணத்தால் அதுவும் பலவீனமாகும்.//
ஹதீஸில் உள்ள விசயம் முக்கியம் ஆயிற்றே, அவர் முதல்முறை சொன்ன பெயர் சரியா, இரண்டாவது முறை சொன்ன பெயர் சரியா என ஆராயாமல் முற்றிலுமாக ஹதிஸை நீக்குவது எப்படி சாத்தியம்!? ஒருவேளை ஒரு குறிபிட்ட தினத்திற்கு பின் முகமது நபிகாளக இருந்து சாதாரண மனிதராக மாறினார் என்னும் முக்கியமான ஹதீஸ் இருந்தால் மொத்த குரானும் பொய் என்று ஆகிவிடும் அல்லவா!?
//9. மொழி, இனம், பாரம்பரியம், மார்க்கத்தில் பிரிவினை இவைகளை அனுமதித்து அல்லது புகழ்ந்து அறிவிக்கப்படும் அறிவிப்புகள் மொத்தமாக குர்ஆனுக்கு முரண்படுவதால் அவைகளும் பலவீனமாகும்.//
யூதஇனம் இஸ்லாமியரால் மடியில் வைத்து கொஞ்சப்படுகிறதா!?, ஷியா, சன்னி பிரிவினைகள் மார்க்கத்தில் இருக்கின்றதால் எது சரியான பிரிவு என்றே சண்டை வருமே அதை குரான் அனுமதிக்கிறதா!?, பின் ஹதீஸ் என்ன செய்தது அதுக்கு.
//10. ஹதீஸ் கலை வல்லுனர்கள் அனைவர்களிடமும் அறிமுகமில்லாத, தகவல் கிடைக்காத ஆட்கள் மூலம் ஒரு செய்தி வந்தால் அதுவும் பலவீனமாகும்.//
ஹதீஸ் முகமதுவின் நண்பர்கள் மூலம் சொல்லப்பட்டதை தொகுத்ததா!? சொல்நயம் மிக்க கலைவல்லுனர்கள் மூலம் தொகுத்ததா!?
//11. தந்தை வழியாக மகன் அறிவிக்கும் செய்தியில் மகனுடைய சிறு வயதிலேயே தந்தை இறந்திருந்தால், தந்தையிடமிருந்து செவியுறும் வாய்ப்பை இழந்திருந்தால் அதுவும் பலவீனம்.//
ஏன் அம்மா மூலம் மகனுக்கு சொல்லமுடியாதா!?, அப்படி சொல்வது பொய்யாக தான் இருக்கும் என்று எவ்வாறு முடிவு செய்கிறீர்கள்!
//12. ஒரு தந்தைக்கு பல மகன்கள் இருந்து மகன்களுடைய பெயர் குறிப்பிடாமல் இன்னாரின் மகன் அறிவித்தார் என்று கூறினால் அதுவும் பலவீனமாகும்.//
ஹதீஸின் செய்தி முக்கியமா, சொன்னவர் பெயர் முக்கியமா?
//13. இறைவன் கருணையாளன் என்பதால் எத்தகைய பொய்யும் பேசலாம், தவறில்லை என்ற கொள்கை வாதிகள் அறிவிக்கும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமாகும்.
இப்படி ஏராளமான வழிகளில் ஹதீஸ்கள் தரம் பிரிக்கப்படுகின்றன.
சந்தேகமானவற்றை பின்பற்ற வேண்டாம் (அல் குர்ஆன் 17:36). என்ற இறை கட்டளைக்கிணங்க, சந்தேகம் ஏற்படும் எல்லா செய்திகளையும் ஹதீஸ் கலை மேதைகள் ஒதுக்கி தள்ளிவிட்டார்கள்.//
கருணையாளன் ஒரு பொய் சொல்ல அனுமதிக்கமாட்டார் ஆனால் ஆண்களுக்கு அள்ளி அள்ளி கொடுப்பார் என்று இந்த பதிவில் இருப்பது உண்மை தானா?
//குர்ஆனுடன் எந்த வகையிலும் ஒத்துப் போகாத - முரண்பட்டே நிற்கும் ஹதீஸ்கள் ஏதாவது இருந்தால் அப்போது நாம் குர்ஆனுக்கு முக்கியத்துவம் கொடுத்து விட வேண்டும். ஹதீஸ்கள் முக்கியம் என்று குர்ஆனை அலட்சியப்படுத்தி விடக் கூடாது (நன்றி: http://tamilislam-qa.blogspot.com & ஜி.என்.)//
எது உங்களுக்கு சாதகமா இருக்கோ அதை எடுத்துக்கலாம்னு சுருக்கமா சொல்றிங்க சரியா!?
*********
வழக்கம் போல பீஜேவின் லிங்கை கொடுக்கிறார்!, அடுத்து பீஜேவின் உளரல்களை அம்பலபடுத்த வேண்டியது தான் பாக்கி!

