Thursday, June 24, 2010

கெடாக்கறி & மொடாக்குடி மாநாடு!

உடன் பிறப்பே....
நாம் அடித்த சரக்கினிலே பட்டையை போல் இனிதானது எங்கும் காணோம் என வால் பையனும்,
தண்ணியடி தமிழ்நாடு முழுவதும் கலங்கிட... என கும்மியும்,
சரக்கெந்தன் டவுசருக்கு நாடா என தோழர் பட்டாபட்டியும்,
போற்றிய சரக்குக்கு வலிவும் பொலிவும் சேர்த்து வையத்தோர் வழங்கும் வாழ்த்துக்களைக் குவித்திட கள்ளிறக்கப் போராடும் கோவையிலே விழா எடுக்கின்றோம்!
ஆம் சரக்குக்கு விழா! சரக்கடித்தவன் விழாமல் இருக்க விழா!
அந்த விழாதான் உடன்பிறப்பே கெடாக்கறி & மொடாக்குடி மாநாடு!
50 க்கும் மேற்பட்ட அயல்நாட்டு சரக்குகள் ; இந்தியத் திருனாட்டின் எல்லா மாநிலங்களிலிருந்த்தும் மதுவகைகள்; என வகை பிரித்திருக்கிறோம்!
ஆகவே,கள் பானையை மொய்க்கும் ஈ போல தென்னகம் நோக்கிப் படை எடுப்பீர் !

பட்டையை;
கள்ளை;
பிராந்தியை;
விஸ்கியை;
ஜின்னை;
ஒயினை;
ரம்மை;
என அத்துனையும் தென்னகத்துப் பலாக்கனியாம் டாஸ்மாக்கில் கண்டு மகிழ்வு பெற கை துடிக்கும் தோழர்களுக்கு கோப்பைகள் நிரப்பி வைத்து இருக்கிறோம்!
ஆயிரமாயிரம் குடிமகன்கள் வருவது மட்டுமின்றி அவர்களில் மப்பு மிக்கார் ; அதன் கிக்கு மிக்கார் எடுத்து விடும் கானங்களை கேட்டிடவும் அலப்பறைகளை பார்த்திடவும் அலைகடலென திரண்டிடு என் குடியினமே!

இது நாள் மட்டும் நாம் அடித்த சரக்கின் வலிமை கொண்டு பாரில் அடுத்த டேபிளை எட்டி உதைக்கும் வீரனாக, தலைக்கறி கேட்டால் சுண்டல் தரும் சப்ளையரை அல்லையில் மிதிக்கும் சூரனாக ஓசி சரக்கடிக்கும் வீணர்க்கும் கூன் நிமிர்த்தி டாஸ்மாக்கின் பச்சை போர்டினிலே நம் வரலாற்றை எழுதுதற்கு லுங்கி மடித்துக் கட்டி நிற்கின்றாய் நீ என்பதை நானறிவேன்!

வையத்துக் குடியினங்களில் அன்றும் இன்றும் இனி என்றும் நாமே முதல்வர்கள் எனும் கெத்தினை தூக்கி நிறுத்த வண்ணத் தமிழகத்து சேலைக் கிழி (சாரி) சோலைக்கிளிகளை அழைக்கிறேன் கோவைக்கு!

சங்கம் ஆரம்பிக்கிறோம்; கட்சி ஆரம்பிக்கிறோம் என பீலா விட்டு சண்டை போட்டுக் கொள்வார்களே அது போல ஒரு மொக்கை மீட்டிங்கிற்க்கு உனை நான் அழைக்கவில்லை!
அறிவார்ந்தோர் சபை அறிவீர் ஆனால் அவர்தம் உள்ளக்கிடைக்கை தன அறியும் ஒரு மப்புக் கோட்டை தான் கெடாக்கறி & மொடாக்குடி மாநாடு! அதற்கான அச்சாரமே இந்த அழைப்பு...

ஒரு உடன்பிறப்புக்கு இன்னோர் உடன் பிறப்பு எழுதும் மடல் மப்பில் மலர்ந்த மதன காவியமன்றோ? மப்பின் மிகுதியால் தான் நானே எழுந்து வர இயலாமல் பதிவிலிட்டு வைத்தேன்! சரக்கின் நினைப்புதந்த போதையிலே சப்புக் கொட்டியவாறு அங்கேயே உக்காந்து விடாதே என் உடன்பிறப்பே! அடுத்த பஸ்ஸில் துடிப்பாய் கிளம்பு!

இந்த கெடாக்கறி மொடாக்குடி மாநாடு உங்களையெல்லாம் கெடுப்பதறகாக என்று சில குரல்கள் ஒலிக்கின்றனவா? வாந்தி பேதி என்பார்களே அதன் சத்தம் தான் அது! அதை நீ நம்ப மாட்டாய் என நானறிவேன்! நீ என்ன கன்னிப் பெண்ணா கரும்புக் காட்டில் விட்டுக் கெடுப்பதற்கு! நாம் என்ன செய்தாலும் குடிகாரப் பயல்கள் குடித்து விட்டுக் கூத்தடிக்கிறார்கள் என சில புல்லுருவிகள் பூச்சாண்டி காட்டுவர்! இந்த அற்புதமான நேரத்திலே அந்த நாய்களை எண்ணாதே -

சரக்கை குடிக்க அல்ல தோழா சரக்கிலேயே குளிக்க உனை அழைக்கிறேன்! பறந்தோடி வா....

அன்புள்ள,

ஆல் இன் ஆல்


விழா நிரல்! காலை 10.00 மணி* ”40/- கட்டிங்!”
(* - கடை திறக்கும் நேரத்தைப் பொறுத்து மாறுபடலாம்)
விழாவின் ஆரம்பமாக அனைவருக்கும் 40 மிலி கட்டிங் வழங்கப்படும் அதனைத் தொடர்ந்து அந்த கட்டிங்கை பல்லாயிரக் கணக்கானோர் ஒரு சேர “சியர்ஸ்” சொல்லி மடக்கென்று அடித்து துவக்கம் செய்யபட உள்ளது.

நண்பகல் 11.30 மணி ”மொரட்டு கட்டிங்”

பெருந்திரளான மாநாட்டு உறுப்பினர்கள் அனைவரும் ஜோடிகளாக பிரிக்கப்பட்டு ஜோடிக்கொரு குவார்ட்டர் வீதம் பகிர்ந்த்தளிக்கப்பட்டு (சைட் டிஷ் ,மிக்ஸிங்க் ஏதுமின்றி) ஆளுக்கொரு கட்டிங்காக ஏக் கல்ப்பில் மடக்கென்று அடிக்கச்செய்து பரஸ்பரம் மண்டைகளை மாற்றி மாற்றி மோந்து பார்க்கச் செய்து நவீன தமிழ் மரபுசார் குடி முறையான “ மொரட்டு கட்டிங் “ நிகழ்வு நடை பெற உள்ளது.

பி.ப 12.30. மணி “ கெடாக் கறி & மொடாக்குடி “

மாநாட்டின் சிறப்பு நிகழ்வான இதில் உலகத் தரம் வாய்ந்த கெடாக் கறிகளும்; வேண்டுவொர்க்கு வேண்டிய மட்டும் வேண்டிய பிராண்டு சரக்குகள் பாட்டில் பாட்டிலாக வினியோகம் செய்யப்பட உள்ளன. அது சமயம் சிறப்பு விருந்தினராக அருமை அண்ணன் மன்சூர் அலிகான் அவர்கள் கலந்த்து கொண்டு விழாவுக்குச் சிறப்பு சேர்க்க உள்ளார்கள்.மாநாட்டுத் திடலிலேயே மப்பேறினோர் மல்லாந்து விழ இட வசதி செய்யப் பெற்றுள்ளதோடு, தெளிந்தவுடன் வீட்டை தேடிக் கண்டு பிடிக்க வழிகாட்டும் பலகைகளும் அமைக்கப் பட்டுள்ளன.


மைய நோக்குப் பாடல்!


கெடாக் கெடாக் கறி அடுப்புல கேடக்குது மொடா மொடாக் கள்ள ஊத்து!
சாராயம் கருவாடு துண்டு பீடி வவ்வாலுகுடிச குப்பத் தொட்டி பக்கத்துல
டீக்கட
ஒரலு
ஒண்ணு அங்கிருக்கு ஒலக்க ஒண்ணு இங்கிருக்கு நெல்லு குத்தும் நேரம் எது சொல்லடி என் சித்திரமே!
பல்லு குத்த பவுசு இல்ல பாவம் நீயோ வெடலப் புள்ளநெல்லுக்குத்த எடங்கொடுத்தா மாட்டிக்குமே ஒலக்க உள்ள!
நாம்பூவெடுத்து வெக்கணும் பின்னால!அத வெக்கறப்போ சொக்கணும் தன்னால!
வரதப்பா வரதப்பா கஞ்சி வருதப்பாகஞ்சி கலயந்தன்னை தலயில் தூக்கி வஞ்சி வருதப்பா
வவுத்துல
புள்ளயில்ல வாழ்க்கையில தொல்லையில்லவகைக்கொரு இன்பம் கண்டு செயிப்போம்
சக்களத்தி சண்டையில்ல தாலி கட்டும் வம்புமில்ல இப்படியே எல்லா நாளும் இருப்போம்!ஜும் ஜக்கும் ஜும் ஜக்கும் ஜும் ஜக்கும் ஜும்ஜும் ஜக்கும் ஜும் ஜக்கும் ஜும் ஜக்கும்
ஜும்

கெடாக்
கெடாக் கறி அடுப்புல கெடக்குதுமொடா மொடாக் கள்ள ஊத்து!

Thursday, June 3, 2010

பூக்காரி - பைத்தியகாரத்தனமான பாலிடிக்ஸ்



நர்சிம் - இன் கேவலமான ஒரு பதிவு; அதைத் தொடர்ந்து நடந்த களேபரங்கள் - இது வரையிலும் வெளிவந்துள்ள பதிவரசியல் காய் நகர்த்தல்கள் என இந்த வாரத்தில் அதகளப் பட்டன தமிழின் முன்ணணி திரட்டிகள்....

இறுதியில் மலிவாக நீர்க்கச்செய்யப்பட்ட விடயத்தின் ஒரு டிரைலர்...


நர்சிம் மன்னிப்பு கேட்டு போட்ட பதிவப் பாக்கணுமே யப்பா! இங்கே பதினஞ்சு நாள் ஆகலாம் படிச்சு முடிக்க! ”எல்லாத்துக்கும் வணக்கம் பந்தி பின்னாடி நடக்குது சாப்புட்டு போங்க”ங்கற ரேஞ்சுல ஒரு நாலு வரி... அடுத்த பக்கம் அண்ணன் உண்மைத் தமிழன்; மேட்டருக்கு யாரு வேணா பஞ்சாயத்து பண்ணலாம் ஆனா என்னோட எதிரிக மட்டும் பண்ண உடக் கூடாது... அல்லாரும் வினவ எதிர்த்து போராடுவோம்னு லூசுத்தனமா சொல்லிட்டு இருக்காரு... அது போக ரெண்டு பேரையும் பேச வைக்கறதா ஒரு அண்ணா மறுமலர்ச்சித் திட்டமும் சொல்லி இருக்காரு.இங்கே

இன்னொரு சைடு ஷோபா ஷக்தி இங்கே இன்னைக்கி நல்ல நாட்டியம் பேசும் வினவு லீனா மணிமேகலையை அன்னைக்கி வன்புணர்ச்சி செய்தது நியாயம்னா இதுவும் நியாயம் தான்ங்கற தொனியில அவர் ஒரு கோல போட்டு இருக்காரு....

பைத்தியக் காரன்இங்கே பிரச்சனைக்குரிய வினவு பதிவை எழுதியதே அவர்தான் என்ற ஊகங்கள் நிழலாடும் நிலையில் ஆதரிப்போம் வாருங்கள் வினவை ! என பதிவிட்டு இருக்கிறார்.

அடுத்து சுகுணா திவாகர் ! எப்பிடி நைனா இப்பிடி நடிக்கற என பைய்த்தியக்காரனை வினவி இட்ட பதிவில்
இங்கேபைத்தியக்காரன் எழுதிய ரஃப் டிராப்ட் என டிங்கரிங் செய்யப்படாத கட்டுரையை பிரசுரித்திருக்கிறார்.

நெக்ஸ்டு மங்களூர் சிவா!இங்கே பெண் பதிவர்களிடம் ‘ஜொள்ளு’ விடுவதில் யார் முதன்மையானவர் என்று போட்டி வைத்தால் மங்களூர் சிவா உட்பட பலருக்குள் அடிதடியே நிகழும். // மேற்படி லிஸ்டில் தன்னை லாஸ்டாக சேர்த்ததன் காரணத்தை வினவு கண்டிப்பாக சொல்ல வேண்டுமென்று கேட்டு பதிவிட்டு இருக்கிறார். அதில் அவரது கடுங்கோபம் எரிமலையாகக் கொப்பளிக்கிறது. வினவு இதற்கு பதிலளிக்க கடமைப் பட்டிருப்பதாக வால் பையன் வேறு பரிந்துரை செய்திருக்கிறார். அவரும் தன் பங்கிற்கு நசுங்கும் சொம்புகள் என்ற தலைப்பில்இங்கே குமுறித் தள்ளியாகிவிட்டது.

இங்கு இந்த பிரச்சனையை வைத்து பெருந்தலைகள் பல இங்கு தத்தம் வலையுலக எதிரிகள் மீதான பழய பகையுணர்வைக் கொட்டி பகடை ஆடியது தான் மிச்சம். ஒருவன் மாட்டிக் கொண்டால் வறுத்தெடுப்பது என்பது இங்கு இயல்பான ஒன்று தான் ஆனால் அதை வைத்து டைமிங்காக அரசியல் செய்திருக்கும் ஒவ்வொருவரையும் பார்க்கையில் பிரமிப்பாகவே உள்ளது.

இது பதிவுலகில் ஜென்மப் பகைகளை தீர்த்துக்கொள்ளும் சிலரின் நாடக வசன கதையாக இருக்கும் பட்சத்தில் பலிகடாவானது நர்சிம்மோ , முல்லையோ என்பதை விட ஏதுமறியாமல் தமிழில் டைப்ப கூட தெரியாமல் திரட்டிகள் மூலம் வாசிக்கும் எண்ணற்ற வாசகர்களே.


இது நர்சிம் மீதான பகை தீர்க்கும் முயற்சி என பைத்தியக்காரன் சொல்லக்கூடின் அங்கு அனாவசியமாக மங்களூ சிவா, குசும்பன் என கலந்து கட்டி வன்மம் தீர்க்க வேண்டிய அவசியமென்ன?

இவை உண்மையாகின் நர்சிம்மின் புனைவுக்கும் இவரது பகடைக்கும் யாதொரு வித்யாசமும் காண இயலவில்லை என்னால்.

சில வருடங்களுக்கு முன்பு வரை ஆசைக்கு பேப்பரில் எழுதி பொட்டிக்குள் வைத்துக்கொண்டிருந்த எழுத்துக்களை இன்றைய வலையுலகில் சில நூறு பேர் படிக்கிறார்கள் என்பதால் உச்சத்தில் ஏறி அமர்ந்த கொழுப்பின் விளைவே இது! அன்று மலம் துடைக்க மட்டும் பயன் பட்டிருக்கக் கூடிய காகிதத்தை இன்று மகோன்னத படைப்பாய் கருதும் பதிவர்களின் தோற்ற மாயை படிப்பவர்களை வாசகனாகவும் தன்னை மாபெரும் எழுத்தாளனாகவும் கற்பிதம் செய்யக் கற்றுக் கொடுத்திருக்கிறது.

கால் நிலத்தில் பட நடக்க மறந்து விட்டனர் இன்று பாவம்... சும்மா இருக்கும் போதே இந்தக் கூத்தெனில் இனி சங்கம் கழகமெல்லாம் வந்தால் எப்படி இருக்கும்? இன்றைய நாளிலேயே பல பதிவர்களுக்கு பதிவர் என்ற பதமே பிடிப்பதில்லை பெயருக்குமுன் எழுத்தாளர் என சேர்த்திக் கொண்டால்தான் சோறே இறங்குகிறது போல.

முன்பொருமுறை சாரு நிவேதிதா என்பவன் “வலைப் பதிவர்கள் எழுத்தாளர்கள் அல்ல என சொன்னதை மெய்ப்பிக்கவோ; அல்லது எழுத்தாளர்களுக்கு கொஞ்சமும் சளைத்தவர்களல்ல என பாலிடிக்ஸ் செய்யவோதான் இவ்வளவும் நடந்தேறு கின்றன போலும்! 

ஒரு சில நாட்கள் சென்ற நிலையில் இன்றைக்கு பூக்காரி மேட்டர் அடைந்திருக்கும் பரிணாம மாற்றம் அபரிமிதமானது. அடிச்ச காத்துல துணி உலர்த்திய பதிவர்கள் மத்தியில் காத்தாடி வெச்சு கரண்ட் எடுக்கும் கில்லாடிகளிடமிருந்து வலையுலகம் இனி கற்க வேண்டியவை ஏராளம் ஏராளம்.

Tuesday, June 1, 2010

கார்ப்பொரேட் தேவிடியாத்தனம்

என்ன காரணத் தாலோ அழிக்கப் பட்டுவிட்டபடியால் பூக்காரி எனும் காவியக்கதையை  இன்று காலை தான்  PDF ஆக படிக்க நேர்ந்தது.
அடடா என்னே ஒரு புனைவு! கார்ப்பரேட் கம்பன் வீட்டுக் கக்கூஸ் வாளியும் கவி பாடும் என்பது எவ்வளவு நிதர்சனமான உண்மை! பதிவுலகை முன்னேற்றப் பாதையில் அழைத்துச்செல்ல அடியெடுத்து வைத்திருக்கும் ஒரு மகோன்னதக் கும்பலின் தன்மானத் தளபதியொருவரின்  காலத்தால் அழியாத காவியக் கதை தான் பூக்காரி!

சொறிந்து கொண்டால் சுகமா தான் இருக்கும் ஆனால் பத்து நிமிஷம் கழிச்சு பட்ட பட்டையாக தடித்து விடும்! இவர் தானாக சொறிந்திருந்தாலும் பரவாயில்லை ஆள் போட்டு சொறிந்த்ததால் வந்த வினை அதுவும் பப்ளிக் பிளேஸில்!  பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள்!  அது பொறுக்காமல் ஆடிய ஆட்டத்தில் அண்டர்வேர் அவிழ்ந்ததென்னவோ அண்ணனுக்குத்தான்!

உச்சக் கட்ட கையாலாகாத் தனமன்றி வேறெதுவும் அவரை இங்கனம் எழுதத் தூண்டியிருக்க வாய்ப்பில்லை. நல்ல பழக்கம் தான் தன்னைப் பற்றி விமர்சிப்பவரை அதுவும் பெண்ணென்றால தேவிடியாப் பட்டம் கட்டி துரத்த முயலும் தந்திரம்! நிஜமாகவே அதி அற்புதமானதுதான்!வழக்கமான வலையுலக டிரெண்டான  அனானி ஆயுதத்தைக் கூட கையிலெடுக்க நேரமில்லாமல் பதிவிலேற்றிவிட்டார் அன்பு நண்பர்! என்ன தான் அவசரத்தில் மலத்தை அள்ளி மடக்கென்று விழுங்கினாலும் குடல் முதல் குண்டா மணி வரை எடுத்த நாற்றத்தில் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப் பட்டது மேற்படி காவியக் கதை!

வன்மம் புரையோடிப்போன பைத்தியக் காரனைப் போல புனைவென்ற பெயரில் பிதற்றியிருக்கிறார் நர்சிம். அக்கதை சொறிந்துவிடும் சொம்புகளுக்கு வேண்டுமானால் தீனி போடக் கூடுமேயல்லாது வேறெதுவும் பயனளிக்கப் போவதில்லை. உசுப்பேத்திய சொம்புகள் இப்போது வக்காலத்துக்கு வரப் போவதில்லை தலைவா.....

சாணிக்கு சொம்புதூக்கி அவனை மலக்குழியில் போட்டு  மூடியான கதை ரிப்பீட்டுகிறதோ மீண்டும்!

தேவிடியாத்தனம்  என அடிக்கடி பூக்காரியில் சொல்லப் படுகிறதே அது வேறெதுவுமில்லை அவர் செய்துள்ள இக்காரியம்தான்.

தனக்கு சம்பந்தமே இல்லாத ஒரு பெண்ணை மேற்கண்ட வார்த்தையால் சாடுவதற்கு அதுவும் ஒரு பொதுவெளியில், அவர் சொல்வது போல் மேதாவிகள் புரளும் வலையுலகில் வசைபாடுவதற்கு பெயரை வேண்டுமானால் இனி தேவிடியாத்தனம் என வரையறுக்கலாம்.

தன்னை பிரபல எழுத்தாளராக நிறுத்தத் துடிக்கும் நபரின் வன்மம் மிகுந்த இச்செய்கைக்கு சாதி ரீதியான சாயம் பூசப்படுவதை ஏற்க இயலவில்லை. வினவு தோழர்களின் பதிவில் தொனிக்கும் அக்கருத்து  இவ்விடயத்தை திசை திருப்பவே முயல்கிறது ; கோரப்பட்ட மன்னிப்பால் எதுவும் இங்கு முடிந்து விடவில்லை ஆயினும் ..... இன்னும் ஏதோ மிச்சமிருக்கிறது.

பெண் மீதான வன்மம் என்பதாகவே கொள்ளவியலும் இதனை திசைமாற்ற வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

பிளாஷ் பேக்கிற்கு....

வினவின் பதிவு!