Friday, May 28, 2010

காளஹஸ்தியும், சிவபெருமான் விட்ட குசுவும்!

ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் ராகு, கேது கிரகங்களுக்கு!? பரிகாரம் செய்ய கோவில் இருக்காம், அது சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் வாயு தலமாக உள்ளதாம், அந்த சந்தேகம் தான் தலைப்பாக உள்ளது, ஏன் அந்த இடம் வாயுத்தலம், அங்கே போய் சிவபெருமான் குசு விட்டிருப்பாரோ!, கண்ட கருமத்தை தின்னா விட்டு தானே ஆகனும், சரி அந்த ஆராய்ச்சியை பிறகு வைத்து கொள்ளலாம், இப்ப மேட்டர் என்னான்னா அந்த கோவில் கோபுரம் இடிஞ்சு போச்சு!. அய்யப்பன், தம்பி வேணும்னு கேட்டதால விஷ்ணு கூட சல்லாபிக்க போயிட்டார் போல சிவன், அதான் காப்பாத்த முடியல!

அது பற்றி சில உலகமகா பிராடு சோதிடர்கள் தினமலரில் கருத்து தெரிவிச்சிருக்காங்க, அதை துவைத்து காயப்போடுவோம்!

படம் நன்றி:தினமலர்


//இந்தக் கோவில் ஆந்திர மாநிலத்தில் உள்ளதால், அந்த மாநிலத்தில் இயற்கை சீற்றங்களாலும், பயங்கரவாதிகளின் தாக்குதல்களால் பாதிப்பு ஏற்படலாம். பெரிய அளவிலான விபத்துகள், கோர சம்பவங்கள் நிகழவும் வாய்ப்பு உண்டு. //

தக்காளி, இப்போ தான் பெரு வெள்ளம் வந்து ஆந்திராவே மிதஞ்துச்சு, அதுல சிக்கி ஒரு முதலமைச்சர் வேற மரணமடைஞ்சார், எல்லா காலமும் காவல்துறைக்கும், நக்சலைட்டுகளுக்கும் சண்டை நடந்து கிட்டு தான் இருந்தது, அப்பவெல்லாம் இந்த கோபுரம் நட்டுகிட்டு தானே நின்னுச்சு, அப்ப காப்பாத்த முடியாதது, இப்போ அழிவை தருமாக்கும்!


//ஜோதிடர் சிவஓம்குருரவி: பஞ்ச பூத தலங்களில் ஒன்றான காளஹஸ்தி கோவில் கோபுரம் இடிந்து விழுந்தது, அரசியல் தலைவர்களுக்கு ஆகாது. கேது ஸ்தலமாக காளஹஸ்தி இருப்பதால், இது நிச்சயம் ஏதேனும் ஒரு பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக, தமிழகத்திற்கும் அது பாதிப்பை ஏற்படுத்தும். இதற்கு தர்ம பரிபாலனம் செய்வதே சிறந்த பரிகாரம்.//

பேரை பார்த்தாலே பெரிய பிராடு மாதிரி தெரியுது! தமிழகத்திற்கு ஆபத்து வருமாம்! மஞ்சதுண்டு மாவீரன் அதெல்லாம் எப்பவோ பரிகாரம் பண்ணியிருப்பாரு, வந்து துட்டை வாங்கிட்டு போ!


//ஜோதிடர் பூவை நாராயணன்: பொதுவாக கோவில் கோபுரம் இடிந்து விழுதல், கொடிமரம் எரிதல் போன்ற நடக்க தகாத, வினோத சம்பவங்கள் ஏற்படுவது தேச நலனை பாதிக்கும். இதற்கு வைகானச கல்ப சூத்திரத்தில் கூறியுள்ளபடி பஞ்ச சுக்தங்களை படித்து, "அற்புத சாந்தி ஹோமம்' செய்ய வேண்டும். இதை வைகானச ஆகம விதிகளை பின்பற்றும் கோவில்களில் இத்தகைய ஹோமங்கள் செய்யப்படும். மேலும், தெய்வீக விருட்சங்களை பொது இடத்தில் நட வேண்டும். அதிலும், வாயு ஸ்தலமான காளஹஸ்தி கோபுரம் இடிந்து விழுந்தது வருந்தத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும்.//


திரு. பூனா நாராயணம் .. ஸாரி, பூவை நாராயணம் என்ன சொல்றாருன்னா, சாந்தி ஹோமம் நடத்தனுமாம், தக்காளி விரிசல் விட்ட போது எல்லாரும் சேர்ந்து கொஞ்சம் சிமெண்ட் பூசியிருந்தா அது பாட்டுக்கு நின்னிருக்கும், இப்போ ஹோமம் நடத்தனுமாம், எப்படியும் பத்து லட்சம் பில்லு போடுவான் இந்த பூனா! .. ஸாரி பூவை!


//ஜோதிடர் முத்துகுமார்: காளஹஸ்தி ஆந்திராவில் இருந்தாலும், அங்கு பூஜை நடைமுறைகள் தமிழகத்தில் பின்பற்றப்படும் ஆகம விதிகளை பின்பற்றியே நடந்து வருகிறது. அங்கு பூஜை செய்பவர்களும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தான். காளஹஸ்தி ராஜகோபுரம் பழமையானதாக இருந்தாலும், அது இடிந்து விழுந்து தரை மட்டமாகியுள்ளதால் தமிழக அரசியல் தலைவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதற்கு பரிகாரம் அந்த கோவிலிலேயே செய்யப்படும். பொதுவாக இது போன்ற சம்பவங்களின் போது 90 நாட்களுக்குள் விளைவுகள் தெரிந்து விடும். அதற்குள் தெரியாவிட்டால் பாதிப்பு ஏதும் இல்லை என்று அர்த்தம். வெகு விரைவில் சூரிய கிரகணம் ஏற்பட உள்ளது. இது தமிழகத்தில் தெரியாவிட்டாலும், அது அரசு ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, அதற்குள் பரிகார பூஜையை செய்ய வேண்டும்.//


ஆந்திராவுல இருக்குற கோவிலுக்கு எப்படிடா தமிழகத்தில் பாதிப்பு ஏற்படும், ஆகம விதிகளாம் அது தமிழ்நாட்டிலும் பின்பற்றப்படுதாம், மொதல்ல தமிழ்நாட்டுக்கும் ஆகம விதிக்கும் என்ன சம்பந்தமும்ன்னு சொல்லு முட்டாகுமாரு... ஸாரி முத்துகுமாரு!


//தமிழக அறநிலையத்துறை தலைமை ஸ்தபதி முத்தையா: காளஹஸ்தி கோவில் கோபுரத்தில், கடந்த 88ம் ஆண்டே விரிசல் ஏற்பட்டு விட்டது. இதை அப்போது சரியான முறையில் சரிசெய்யவில்லை. ஆற்றை ஒட்டி கோவில் அமைந்திருப்பதால், மண்ணில் நெகிழ்வு தன்மை ஏற்பட்டு, மணல் சரிந்து, கோபுர சுவர்களுக்குள் சுண்ணக் கலவை விடுபட்டு இந்த நிலை ஏற்பட்டிருக்கலாம். பூமி தளத்தில் ஏற்பட்ட மாற்றங் களால் இந்நிலை ஏற்பட்டிருக்கலாம். அந்த காலத்தில் கோபுரங்கள் எல்லாம் ஒரு கல்லின் மீது மற்ற கல்லை அடுக்கி மலைகளை அடுக்குவது போல் தான் உருவாக்கப்படும். அப்படி இருக்கும் போது ஆரம்பத்திலேயே கோபுர விரிசலை சரியான முறையில் சரி செய்திருக்க வேண்டும். ஐநூறு ஆண்டுகள் ஆன இந்த கோபுரத்தில், முதலில் விரிசல் ஏற்பட்ட போதே கோபுர அஸ்திவாரத்தை, "ரேப்ட்' போட்டு வலுப் படுத்தியிருந்தால், இந்நிலை ஏற்பட்டிருக்காது. கோவில் கோபுரம் இடிந்து விழுந்ததில் தெய்வக் குற்றம் இருப்பதாக தெரியவில்லை.//


கோவில் காசை ஆட்டைய போடக்கூடாதுன்னு கொடுத்த பதவியை தலை சரியா செஞ்சிருக்காரு,
சரியான இயற்பியல் காரணங்கள் அலசப்பட்டிருக்கு, முக்கியமா!

//ஆரம்பத்திலேயே கோபுர விரிசலை சரியான முறையில் சரி செய்திருக்க வேண்டும். ஐநூறு ஆண்டுகள் ஆன இந்த கோபுரத்தில், முதலில் விரிசல் ஏற்பட்ட போதே கோபுர அஸ்திவாரத்தை, "ரேப்ட்' போட்டு வலுப் படுத்தியிருந்தால்,//

இந்த பாயிண்ட்!


//ஜோதிடர் சிவஅண்ணாமலைதேசிகன்: காளஹஸ்தி ராகு, கேது பரிகார தலம். இந்தியாவின் லக்னம் ரிஷபம், அமெரிக்காவின் லக்னம் தனசு. இந்த இரு லக்னங்களுக்கும் தற்போது ராகு, கேது நிலை சரியில்லை. ரிஷிப லக்னத்திற்கு எட்டாம் இடமான தனுசு லக்னத்திலும் தற்போது ராகு உள்ளது. மிதுனத்தில் கேது உள்ளது. இந்நிலையில், ராகு, கேது பரிகார தலமான காளஹஸ்தி கோவிலின் கோபுரம் இடிந்து விழுந்துள்ளதால், இரு நாடுகளுக்கும் பயங்கரவாத அச்சுறுத்தல் ஏற்படும். போர் கூட வரலாம். பதினெட்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த இரு கிரகங்களும் இதே நிலையில் இருந்த போது தான் ராஜிவ் படுகொலை நடந்தது. அதன் விளைவாக தற்போது இலங் கையில் பேரழிவு ஏற்பட்டுள்ளது. காளஹஸ்தி கோவில் கோபுரம் இடிந்து விழுந்ததற்கு வேறு பரிகாரம் கிடையாது. மக்கள், தலைவர்கள் மத்தியில் தர்ம சிந்தனை வளர்ந்தால் மட்டுமே, ராகு, கேது கிரகங்களின் பாதகமான சூழலை மாற்ற முடியும்.//


ங்கொய்யால, கொடுத்த காசுக்கு மேல கூவுறாண்டா!
அமெரிக்காவுக்கும், நமக்கும் சண்டை வருமாம் அல்லது தனி தனியாக சண்டை வருமாம்!(என்ன எழவ சொல்லியிருக்கான்னே தெரியல), ஏற்கனவே ஹெட்லைட்தலையன் அரசு, பொட்டி பொட்டியா வாங்கி அணு உலைய வைய்க உத்தரவு கொடுத்துட்டானுங்க, அதில் அணுகுண்டு செய்யுறமான்னு பார்க்க அவனுங்க ராணுவம் வேற இங்க வந்து டேரா போடுமாம், அங்கே விபத்து நடந்தா செல்லாது செல்லாதுன்னு போயிருவானுங்களாமாம்! ஏற்கனவே இந்தியாவை அழிக்க அவனுங்க முடிவு பண்ணிட்டானுங்க, அப்பவெல்லாம் இடியாத கோபுரம் இப்ப இடிஞ்சி சண்டை மூட்டி விட்ருமாக்கும்! சோனியா டீ பார்ட்டி வச்சாவது இந்தியாவை காப்பாத்திற மாட்டாங்க!

Wednesday, May 26, 2010

சிலுவைக் கதையின் சில்மிஷங்கள்! - 1

ஆபிரஹாம மதத்தின் (அண்டர்) வேரே அதன் வேத புத்தகம் தான்! ஆபிரஹாம மதத்தின் வழி தோன்றலாக யூதர், கிறிஸ்தவர், இஸ்லாமியர் என பல பிரிவுகளாக இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் வேத புத்தகம் இல்லாமல் ஒன்றும் பண்ணமுடியாது!, வந்தவன் போனவனெல்லாம் வாய்க்கு வந்ததை ஏற்படுத்திக் கொண்டபடியால் அதில் பழசு புதுசு என இரண்டு ஏற்பாடுகள்! உருவவழிபாட்டை கிண்டல் செய்யும் ஆபிரஹாம மதத்தினர் வேதபுத்தகத்தை மட்டும் மண்டையில் வைத்து ஆடுவீர்களா என்றால் ”அப்பாலே போ சாத்தானே” என்பார்கள்! இவர்கள் மட்டும் பேப்பருக்கு இம்புட்டு மரியாதை கொடுப்பார்களாம், மற்றவர்கள் கொடுத்தால் அவர்கள் காஃபீர்களாம்!, இருக்கட்டும், நாம் எல்லா மதத்தையும் கடவுள்களையும் எதிர்ப்பதால் அவர்களை இம்மதத்தினர் என்று குற்றம் சாட்டாமல் அவர்களது வேதத்தையே கேள்விக்கு உள்ளாக்குவோம்!


ஆபிரஹாம மதத்தின் மூலம் பழைய ஏற்பாடு, உள்ளது சிறத்தல் என்னும் பரிணாம பாணியில் 3000 வருடங்களுக்கு முன் தோன்றிய ஆபிரஹாம மதத்தின் வேதங்கள் கடைசியாக வந்த இஸ்லாம் மத்ததில் அப்போதிருந்த கால கட்டத்திற்கு ஏற்றவாறு மாற்றம் கண்டது! அதிலும் ஆயிரதெட்டு நொட்டைகள், இருந்தாலும் தற்பொழுது பழைய ஏற்பாட்டில் இருந்து ஆரம்பிப்பதே உத்தமம், காரணம் எல்லா ஆபிரஹாம மதமும், ஆதியில் தேவன் வானத்தையும், பூமியையும் படைத்தார், ஆறாம் நாள்(!?) மனிதனை படைத்தார் என்ற படைப்புவாத கொள்கையை தான் நம்புகிறது!, ஆக, ஆதியில் இருந்து கிழித்து வந்தால் தான் டவுசர் மீண்டும் தைக்க முடியாமல் கிழியும்!


*******************

முதல் பஞ்ச்சே ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் படைத்தார் என்பது தான்!, ஆதி என்றால் எது?(விஜய் படமா?) அதற்கு முன் தேவனே இல்லையா அல்லது காலம் இல்லையா!? ஆதியில் தேவன் படைக்கும் முன்னர் என்ன பண்ணிகிட்டு இருந்தார்?(கோரஸா யாருப்பா செரச்சுக்கிட்டு இருந்தார்னு சொல்றது?) , எல்லாவற்றிற்கும் காரணம் சொன்ன வேதம் அதற்கு முன் தேவன் என்ன செய்தார் என்று ஏன் சொல்லவில்லை!, மேலும் வானத்தையும் பூமியையும் படைத்தார் என்றால் பூமி மட்டுமே இருந்தது என்று தானே அர்த்தம், வானம் என்று எதனை குறிப்பிடுகிறது வேதம்? வானம் என்ற வெற்றிடம் படைக்கபட்டது என்றால் அதற்கு முன் என்ன இருந்தது!?


3. தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று.

இது மூன்றாம் வசனம், வெளிச்சம் உண்டாயிற்று என்றால் சூரியனை சொல்கிறது என்று நினைக்கிறேன்! அப்போ அதுக்கு கடவுள் பேரு வைக்கல போல!, ஐந்தாம் வசனத்தில் வெளிச்சத்திற்கு பகல் என்று பெயரிடுகிறார்! அப்பக்கூட சூரியன் என்று பெயரிடவில்லை! வேதத்தின் கூற்றுபடி தூங்காநகரம் எல்லாம் பகல் என்று தான் இரவையும் குறிப்பிட வேண்டும் போல, சரி துருவ பகதிகளில் வெப்பமில்லாமல் வெளிச்சம் மட்டும் இருக்குமே, அங்கே இரவு பொழுது மிக குறைவானதாயிற்றே, ஏன் துருவம் வரைக்கும் நார்வே தெரியுமா, அங்கே பகல் பொழுது எவ்வளவு நேரம் தெரியுமா!? அதையெல்லாம் யார் படைத்தது?



7. தேவன் ஆகாய விரிவை உண்டு பண்ணி, ஆகாயவிரிவுக்குக் கீழே இருக்கிற ஜலத்திற்கும் ஆகாயவிரிவுக்கு மேலே இருக்கிற ஜலத்திற்கும் பிரிவுண்டாக்கினார்; அது அப்படியே ஆயிற்று.

இது ஏழாவது வசனம், இங்கே வேதம் சொல்லவருவது வானத்திலிருந்து வரும் மழையை, அப்போதெல்லாம் நீர் ஆவியாகுதல் பற்றி தெரியாது, ஆனால் பரிசுத்த ஆவி மட்டும் தெரியும்!, ஆதியிலேயே வானத்தில் நீர் இருந்தது போலவும், அவை தேவைகேற்ப அப்பப்ப மழையாக பொழிவது போலவும் அன்றிருக்கும் அறிவுக்கு ஏற்ப அந்த வசனம் எழுதப்பட்டிருக்கிறது! சரி அன்னைக்கு தான் புத்தியில்ல, இன்று வரைக்குமா அறுந்த டவுசரையே இழுத்து புடிச்சுட்டு திரியறது!


16. தேவன், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார்.

உலகமகா முரணான வசனம், முதல் அதிகாரம் 16 ஆம் வசனத்திலேயே வந்துவிட்டது!
வெளிச்சம் ஏற்கனவே இருக்கு என்றும், அதனை ஆள சூரியன் படைக்கப்பட்டது என்றும் இந்த வசனம் சொல்கிறது!, அதாவது வெளிச்சத்திற்கும் சூரியனுக்கும் சம்பந்தமில்லை, அது சும்மா வேடிக்கை பார்க்கவே படைக்கப்பட்டது, அதே போல் சந்திரனும் ”உல்லுல்லாயிக்கி” படைக்கப்பட்டது! அதாவது அது சின்ன சுடர், அதன் ஒளி இயற்கையிலேயே அதில் உண்டு!, அதே கேள்வி தான் இங்கும்!, அன்னைக்கு தான் புத்தியில்ல, இன்று வரைக்குமா அறுந்த டவுசரையே இழுத்து புடிச்சுட்டு திரியறது!


20 திலிருந்து 25 வரை வேதம் படைப்புவாத கொள்கையை பறைசாற்றுகிறது, அதை என்னுடய பரிணாமம் பதிவில் விளக்கி கொண்டிருப்பதால் அடுத்த கேலிகூத்துக்கு போவோம்!



*****

தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப் பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது.

இது மூன்றாம் அதிகாரம் முதல் வசனம்! தன்னால் உருவாக்கப்பட்டவைகளிலேயே தன் சாயலிலேயே மனிதனை உருவாக்கினார் என்ற வசனம் இருக்கிறது, இதன் மூலம் கடவுள் மனித சாயலில் இருப்பார் என்பது நிரூபணமாகிறது!, அத்தனை முக்கியத்துவம் வாய்ந்த மனிதனை விட சர்ப்பம் தந்திரம் வாய்ந்ததாக இருந்தது என்பது மிகப்பெரிய முரண்பாடு, அதாவது கடவுளுக்கே கடுக்கா கொடுக்கும் உயிர் அப்போது இருந்தது என்கிறது இந்த வசனம்! இதை எப்படி நம்ப முடிகிறது இன்றும், அன்னைக்கு தான் புத்தியில்ல, இன்று வரைக்குமா அறுந்த டவுசரையே இழுத்து புடிச்சுட்டு திரியறது!




14. அப்பொழுது தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப்பார்த்து: நீ இதைச் செய்தபடியால் சகல நாட்டு மிருகங்களிலும் சகல காட்டுமிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய்;

நன்றாக கவனியுங்கள் இந்த வசனத்தை, சபிக்கபட்ட பின்னே அது வயிற்றினால் நகர்கிறது, அப்படியானால் அதற்கு முன் கால் இருந்தது, சரி மண்னை தின்பாய் என்றால் என்ன அர்த்தம் பாம்பு இபொழுது என்ன மண்ணையா தின்கிறது!, என் நண்பன் ஒருவன் சொல்லுவான், அப்பொழுது சர்ப்பம் என்று குறிப்பிட பட்டது குரங்காம், அதனால் தான் மனிதனுக்கு அடுத்த வளர்ச்சியில் அது இருக்காம்!, பிறகு ஏண்டா அது காலில் நடக்கிறது என்றால் இளிப்பான்!

********************


பெருசா போச்சு!, இன்னும் நிறைய கிழிக்க வேண்டிருக்கும்படியால் இது தொடராக வரும்!, பின்னால் இவை மட்டுமில்லாமல் அனைத்து வேதங்களும் டவுசரவுக்கப் படும்!

Wednesday, May 12, 2010

டாக்குட்டர் விஜய் - பயோடேட்டா (கெடாவெட்டு)

பயோடேட்டா

இளய தளபதி டாக்குட்டர் விஜய் Email: killthepeople@suicide.com
Phone: +910000000000





கொள்கை : படம் பார்க்க வரும் ஆடியன்ஸை தியேட்டரை விட்டு ஓடச் செய்வதும் , இயல்பான இறப்பு விகிதத்தை குறைத்து தற்கொலைகளின் எண்ணிக்கையை கூட்டுவதும்.

தொழில் அனுபவம்

· 21 வருச இண்டஸ்டிரி சர்வீஸ்

· ஜூனியர் ஆர்டிஸ்ட் - 1988 (with 1 ஹிட், 9 ஃப்ளாப்)

· மாஸ் ரோல்ஸ்- 1989(4 ஃப்ளாப்)

· முக்கிய வேஷம் - 1996- till date( 4ஹிட், 46 ஃப்ளாப்)


நடிப்புத் திறமைகள்

· பெரிய பெரிய கட்டிடங்களுக்கு நடுவுல அலேக்கா பறந்து பறந்து தாவறது (குருவி)

· கடலுக்குள்ள கைய பப்பரப்பான்னு விரிச்சுகிட்டு பறக்கறது (சுறா)

· லிப்டுல நெலத்த பொளந்து பூமிக்குள்ள போயி புவியின் மறு பக்கத்துல கடல் வழியா வெளிய வர்றது (ஹாலிவுட்டே அண்டர்வேர் அவிழ மிரண்ட காட்சி).(குருவி)

· செமிக்கே போவாமல் ஃபைனலை அடைந்த கபடி டிரிக்ஸ்(கில்லி)


சம்பளம் (கேக்கறது): கொறஞ்சது 5 கோடி (ஒரு படத்துக்கு)


சாதனைகள்: ஒலக சாதனை,லிம்கா சாதனை ,டொரினோ சாதனை காளிமார்க் சாதனை ( அட்டு பிளாப்புகளில் )


ரோலு மாடல்: மொதல்ல நானு அப்பறம் அவுங்கப்பாரு,அப்பறம் அண்ணன் விஜயகாந்த் ( லைன் ஆஃப் சவுத்து! )


எதிர் காலத் திட்டங்கள்
1. பைக்கிலே துரத்தி சென்று பறக்கும் பிளைட்டின் ஃபுட் போர்டை பிடிப்பது மற்றும் வெறும் பாலிதீன் பேப்பர் உதவியுடன் பாகிஸ்தானுக்கு பறப்பது.

2.
மலை களுக்கு இடையில் ஆக்ஸலேட்டர் வயரை வாயில் கடித்து இழுத்தவாறு டிராக்டர் ஓட்டுவது


3.
வெஸ்டர்ன் டாய்லெட்டை வெடிக்கச் செய்து அந்த பவரில் மெலே பறந்து சீன ராக்கெட்டை பாய்ந்து பிடிப்பது



சிறப்பு ஆளுமைகள்

· பறக்கும் பிளைட்டின் டாப்பில் நின்று கத்திச்சண்டை போடுவது.(வில்லு)

கவர்ச்சித் திறன்கள்:

1.
ஸ்க்ரீனுக்கு உள்ளே மட்டுமல்லாமல் வெளியே இருப்பவர்களையும் தயவு தாட்சண்யமின்றி டார்ச்சர் முறையில் கொல்வது.

2. டெர்ரரான கண்கள்(ஆதி)

3. வெள்ளாடு புழுக்க போட்டா மாதிரி வாய்ல வந்தத மீட்டிங்ல பேசறது

4. தொடையத் தட்டாமல் வாயயும் தொறக்காமல் பஞ்ச் டயலாக் பேசும் அபாரத் திறமை

பிடித்த இயக்குநர்:

எஸ் சந்திர சேகர்- சங்கவியையும், சுவாதியையும் வெச்சு தனக்கு கபடி பிராக்டீஸ் கொடுத்த நாட்களை இன்னும் நினைவில் வைத்து இருக்கிறாராம்.

சொந்த கத:

பேரு: விஜய் ஜோஸப்பு

அப்பா(உறவில்)/மாமா(தொழிலில்)பேரு: எஸ் சந்திர சேகர்

Age : 21 வருசம் (இண்டஸ்டிரில !)

Weight:
சங்கவிய தூக்க முடியல 10 வருசம் முன்னாடியே!

Sex:
எதோ அப்பா புண்ணியத்துல ஓடிகிட்டு இருக்கு

Hobbies:
காது குடைவது, மூக்கு நோண்டுவது.

தான் 2011ல் சீ எம் கனவு காண்பதோடன்றி மவனை (வேட்டைகாரனில் கொஞ்சம் மயிரை வெட்டி நடிக்க வைத்திருக்கலாம்) 2025க்கு தயார்செய்கிறார்.

தனது அழகு வடியும் கன்னப் பிதுக்கங்களை ஆப்பரேஸன் மூலம் அகற்றிய பின்னர் டாம் க்ரூஸுக்கு சவால் விடும் வகையில் அழகில் மிளிர்ந்து வரும் டாக்குட்டர் விஜய் கூடிய விரைவிலேயே உலகின் கவர்ச்சியான ஆண் பட்டத்தையும் வெல்வார் என ரசிக குஞ்சாமணிகள் ஆவலுடன் எதிர் பார்க்கின்றனர்.