Wednesday, February 24, 2010

மதங்கள் மடிந்து மனிதம் துளிர்க்கட்டும் ...


முதுகெலும்பு நிமிர்ந்து நடக்கத் துவங்கிய மனிதன் நாடோடி வாழ்வை விடுத்து ஆற்றங்கரை களிலும் , மலைக் குகைகளிலும் வசிக்கத் துவங்கியிருந்த நாட்களில் சூரியன்,மழை,மின்னல், இடி போன்றவை குறித்த ஆச்சர்யங்களும் தன் வலிமைக்கு மீறிய இயற்கை சக்திகளைக் கண்டு ஒருவித மிரட்சியும் ஏற்பட்டன . நெருப்பின் மீதும் மேற்சொன்ன அச்சம் நிலவியபோதும் தொட்டு ,சுடுபட்டு பின் மீண்டும் நெருங்கி பலவித பரீட்சார்த்தங்களுக்குப் பின்னர் நெருப்பின் உச்ச பட்ச வலிமையையும் அதனை அடிமையாக்கும் வித்தையையும் கண்டு கொண்டான் .
நெருங்க வியாலாத அதீத சக்தியுடைய இயற்கையை கண்டு அஞ்சிய மனிதன் தனது பயம் குறித்து சக மனிதர்களிடம் பகிர்ந்த விடயம் பரவி நீண்டதில் எதோ ஒரு முடிச்சில் தமக்கான கட்டுப் பாட்டு இயக்கத்தின் செயல் இவை என அவனுக்கு கற்பிக்கப் பட்டிருக்க வேண்டும்.
பிந்தைய நூற்றாண்டுகளில் உலகம் முழுமையும் இருந்த பழங்குடியினத்தவர்கள் தத்தம் இனக்குழுக்களுக்கென பிரத்யேக இறை அடையாளம் கொண்டிருந்தனர். பல்கிப் பெருகிய மனிதப் பெருக்கம் நிலப் பகுதியின் பெரும்பான்மையை அடைத்து வாழத் துவங்கிய காலத்தில் இன்றைய பெரு மதங்களின் தோற்றம் துவங்கின .

கம்பீரமாக உலா வரும் காளையினை ஏரில் பூட்டி உழவு செய்யப் பணிக்கக் கூடுமா ? கற்பனை செய்து பாருங்கள் ! - அதன் இயல்பான குணமே மேய்ச்சலும் ,புணர்ச்சியும் தான் ; அதனைக் காயடிக்கும் செயல் மூலமாக காளையினது இயல்பினைத் திரித்து ஏர் பூட்டி அதனை அடிமை செய்யும் நிகழ்வை மத நஞ்சு புகட்டப் பட்ட மனிதனுக்கு ஒப்பிடலாம் .

அவனை எது குறித்தும் ஆய்ந்தறிய முடியாத படிக்கு , காயடித்து ஆண்டவன் மீது வினா எழுப்பாது மண்டியிடப் பணித்து , நாளடைவில் மதம் ,இறைவன் குறித்து கேள்வியெழுப்பும் குணமே அற்றுப் போகும்படியாய் தகவமையச் செய்துவிட்டனர் . மத போதனாவாதிகளால் அது முழுமையும் கைக் கூடவில்லை. என்ற போதும் பெரும்பான்மை மனிதன் அவர்கட்கு இரையானான் . போதித்தவன் மறைமுகமாய் இறையானான்!

புதிதாய் ஜனித்த பிள்ளை தாயின் மார் தேடித் புசிக்கும் நிகழ்வைக் கூட இறைவன் திருவருளால் எனப் பெயரிட்டழைக்கும் முட்டாள் தனத்தை என்னென்று விளிப்பது? காணும் எதனையும் ஆய்ந்தறியும் இயற்கை குணத்திற்கும் , ஏதுமற்ற பெருவெளியில் இறைவனைக் கற்பனை செய்யும் மூடத் தனத்திற்கும் இடையில் துருவ வேறுபாடுகள் .

யார் சொல்லியும் ஆய்ந்தறியும் குணம் மனிதனுக்கு வந்ததில்லை , இங்கு எவர்க்கேனும் கடவுள் குறித்த பிரக்ஞை சுயமாய் வந்ததுண்டா? இதற்கும் ஆம் ! உண்டு என பதில் சொல்பவர்கள் இருப்பின் அஃதொன்றே சாட்சியம் கூறும் மூடத் தனத்தின் முத்தாய்ப்பே கடவுள் கோட்பாடு என்பதற்கு !

இன்றைய அறிவியல் யுகத்திலும் மர்மம் விலகாத, விடை காணப் படாத கேள்வ்கள் ஏராளம் விரவியுள்ளன . அவை போன்றே இறைவனும் என்றொரு வாதம் (விதண்டா) முன் வைக்கப் படுகிறது . புலப் படாதவற்றின் முன்பு பணிந்து விழுவது பகுத்தறிவுடைய மனிதர்க்கு அழகல்ல . எவனோருவனும் அடிமைஎனத் தனை நிலை நிறுத்துவதால் மனிதம் ஒரு போதும் வளர்வதில்லை . இயற்கையின் சூழலில் கோடிக் கணக்கான் உயிரினங்கள் சற்றேனும் கவளுய் கொள்ளாத இறை எனும் கோட்பாட்டின் மீது , தனித் தன்மை வாய்ந்த பகுத்தறியும் திறன் பெற்ற விலங்கான மனிதன் மட்டும் வணங்கிப் பணிவதும் அதன் பெயரால் சக மனிதரிடையே பகைமை பாராட்டுவதும் போரிட்டு மடிவதும் மனிதம் என்ற பதத்தினை பதம் பார்க்கும் கூர்முனை வாளன்றி வேறிலை !

இறை நம்பிக்கையினை மதம் என்ற பெயரால் ஊன்றச் செய்து பிரிவினை வாதத்தின் உயிர் நாடியாய் இதனை மாற்றியிருக்கும் ஒருவித வலையினை துரதிர்ஷ்ட வசமாக வலைக்குள் அடைபட்ட எவரும் உணர்வதில்லை !


தொடர்வோம் ...

அன்புடனும், கருணையுடனும் , கண்ணியத்துடனும்

இராஜன் இராதாமணாளன்

Tuesday, February 23, 2010

இந்து மத காவலர்கள் பர்தா போட்ட பரிதாபம் !

கடவுள் நம்பிக்கை இருக்கா இல்லையான்னே தெரியாம பல பேரு சுத்திட்டு இருக்காங்க ! அவங்க பெரும்பான்மைன்னு கூட சொல்லலாம் ! கேட்டா " தெரியல ! ஆனா நமக்கு மேல ஒன்னு இருக்குங்கறது மட்டும் நெஜம்" அப்பிடின்னு பிலாசபி பேசுவாங்க ... மேல ஒன்னு இருக்கறது கீழ ஒன்னு இருக்கறது எல்லாம் எல்லாத்துக்கும் தெரியும் கடவுள்னா என்ன ? பாத்தயான்னு கேட்டா , " அணுவைப் பார்த்திருக்கிறாயா மூலக் கூறைப் பாத்திருக்கிறாயா" ? "அது போல்தான் கடவுளும் " என்று லூசுத் தனமாக உளறுவதைக் கேட்டிருக்கிறோம் . சரி அணுவை என்ன கோயில் கட்டியா கும்பிடறோம்.? நுண்நோக்கில பாத்தா தெரியுமே! என்றால், "சுத்தமான மனசுங்கர நுண்நோக்கில பாத்தா கடவுளும் தெரிவார் " ங்கறானுங்க . என்னத்த சொல்ல சர்ப் எக்ஸ்செல்ல போட வேண்டியது தான் !

சிவ பெருமான் என்ற பாத்திரத்தை அந்தக் காலத்துல ஆக்க்ஷன் கதைகள் எழுத பயன் படுத்தினாங்க , நான் எதோ காமெடி கதை எழுதினேன் . அதுக்கு போயி சிவனின் பக்த ....... மணிகள் இப்பிடி பண்ணுவாங்கன்னு நான் கொஞ்சமும் எதிர் பாக்கவே இல்ல! ரெண்டு நாளா மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு சிவ பானம் தான் ஒரே தீர்வு !

அட கோவம் வந்திருந்தா நீங்க பண்ணிருக்க வேண்டிய காரியங்கள் பின் வருமாறு :

*கோவத்துல என்ன பண்றதுன்னு தெரியாம கொசு மருந்த குடிச்சு செத்துருக்கலாம்

* என்னோட குடும்பத்துக்கே சூனியம் வெக்க சாமியார் ஏற்பாடு பண்ணலாம்

* சிவன் பாம்ப ( கழுத்துல தொங்கறது ) என் மேல ஏவி விடலாம்

* பார்வதியின் புலியை ( வேணாம் அதுவும் செத்து போச்சுனா 1410 ஆயிடும் அந்த பாவம் வேற !) அக்கா வேற எதுனா வாகனம் வெச்சு இருக்கா ? பக்தர்களின் பதில் எதிர் நோக்கப் படுகிறது (ஸ்கூட்டி பெப் !)

* முருகனின் கோவணத்தால் என்னை மூர்ச்சை அடையச் செய்திருக்கலாம் ! (பயமா தான் இருக்கு !)

* புள்ளயாரின் எலியை விட்டு பிளேக் நோய் வர வைத்து இருக்கலாம்

இத எதுவுமே பண்ணாம தங்கள் கொள்கைப் பிடிப்பு (வாயுக் கோளாறு இல்ல !) க்கு குந்தகம் விலை விக்கும் வகையில் இஸ்லாம் மதத்தின் அடையாளமான பர்தாவை அணிந்து கொண்டு அனானியாக வந்து காமெடி செய்து விட்டார்கள் .

கருத்து சுதந்திரம் , சமயப் பொறை , சக மனிதர்களின் நம்பிக்கை குறித்த விமர்சனத்தின் போது கைக் கொள்ள வேண்டிய வரை முறைகள், வாதத்தின் போது என் பதில் / கேள்வியின் தொனி , தீவிர இறை மறுப்புக் கொள்கையால் எனக்கென்ன இலாபம், எதிர் கருத்து கொண்டோரின் பார்வையில் இறை மறுப்பு சித்தாந்தம் இவை குறித்து பலவிதமான வினாக்கள் எனக்குள் எழத் துவங்கின . இந்த வலை பூவின் கடைசி சில பதிவுகள் கடவுளை அடுத்த தெரு எதிரி ரேஞ்சில் கேவலப் படுத்தி எழுதப் படுவதால் அவரது இருப்பை நாமே உறுதி செய்வதாக ஆகிவிடாதா ! இவற்றை ஒத்த சந்தேகங்கள் தினம் தினம் உதித்த வண்ணம் உள்ளன.
இதுவரை வெளியிட்ட கருத்துக் களுக்கு பதில் அளிக்க முயன்ற நண்பர்கள் கூறுவதை மனதில் கொள்ளாமல் நான் செய்வதே சரி என்று உரைக்க மனம் ஒப்பவில்லை ! அப்படி செய்யும் பட்சத்தில் கடவுள் இல்லை என முழங்கும் இறை மறுப்பாளர்களின் வாதங்களை சேணம் மூடிய குதிரைபோல் மறுக்கும் ஆத்திகர் களுக்கும் நமக்கும் வேறுபாடின்றி போய்விடக் கூடும். இனி இது போல ஓட்ட வேணாம்னு நெனச்சுட்டு இருந்த சமயத்துல வழில போற ஆசாரிய கூப்பிட்டு எனக்கு ஒரு ஆப்பு வைன்னு சொன்ன கதையா பர்தா போட்டுட்டு வந்து அவனுங்க கடவுள் பக்தியோட புனிதத் தன்மைய வெட்ட வெளிச்சமாக்கிட்டானுங்க !வலிக்காமல் போட நான் என்ன கோழி றெக்கையிலா ஊசி போட முடியும். அது முடியாது, இந்த அளவுக்கு பதில் சொல்ல திராணியும் தெம்பும் இருக்கற பசங்கள நாம எதுக்கு பாவம்னு விடனும் ! என்ன ஒன்னு ... இப்பவும் அனானியா வரானுங்க ! எதிர் காலத்துல எப்பவாவது சூடு சொரணை வந்து எங்க மேல பயம் போச்சுனா நெசப் பேர சொல்லுவானுங்கங்கர நம்பிக்கைல புத்துணர்ச்சியோட ரெண்டாவது இன்னிங்க்ச ஆரமிக்கறோம் !

ஊக்கமளித்த அனானிச் செல்லக் குழந்தைகளுக்கு இந்தப் பதிவு சிவார்ப்பணம் !

அச்சில இருக்கற அடுத்த ஐட்டங்கள் !

* "பெருமாள் " லேடி கெட்டப் - சிவனின் செட்டப்

* புள்ளையாரப்பா புள்ளையாரப்பா ! உங்கொப்பன் பேரு என்னப்பா ?

* சிலுக் சிவனின் சபதம் ( தி ஜட்ஜ் மென்ட் டே!)


டோண்டு ஒர்ரி ! பீ ஹேப்பி !

Wednesday, February 17, 2010

நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம் (ஒரிஜினல்)

>இதற்கான  எதிர் பதிவு இங்கே !(முன்கூட்டியே  போட்டுவிட்டால் நேர்பதிவு ஆகிவிடாது  என்பதை சொல்லிக் கொள்ள  கடமைப் பட்டிருக்கிறேன் )

நெஞ்சில் முடி முளைத்த அம்மா ஆதி பரா சக்தி  அவதாரத் திருநாளான இன்று நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம் (ஒரிஜினல்) பதிவை  வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
சிலர் உழைத்து சம்பாதித்து இருக்கிறார்கள் என்று  நண்பர் வால் பையன் சொல்கிறார். அதற்கெல்லாம்  ரொம்ப கஷ்டப்பட்டு உழைக்கணும் ! காலம் போன கடைசில  கோடி ரூபாய வெச்சு கிட்டு  என்னத்த பண்றது ! கல்லக் கண்டா நாயக் காணோம்னு சொல்வாங்களே அந்த மாதிரி இருக்கக் கூடாது !







நீங்கள் கோடீஸ்வரர் ஆகலாம்  கோனை வழியிலேயே , பொறுமையாக ஒரு வருடத்தில் ! அதற்க்கு ஒவ்வொரு நாளும் உங்களது பித்தலாட்ட வேலைகள் இரட்டிப்பாக வேண்டும் !  நீங்கள் எந்த  கடவுள் வேஷம் வேணாலும் கட்டிக் கொள்ளுங்கள்  ஆனால்  பக்தர் கூட்டம் பெருகினால்  ஒரே வருடத்தில் நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்! ஆனால்  கோல்மால் சாமியார்  நடிப்பில்  கொஞ்சம் கவனமும் திருட்டுத் தனமும்  இருத்தல் நலம் !

உங்களுடய முதலீடு பத்தாயிரம் ருபாய் மட்டுமே!

10,000 உங்கள் முதலீடு
20,000 முதல் மாதம்
40,000 இரண்டாம் மாதம்
80,000 மூன்றாம் மாதம்
1,60,000 நான்காம் மாதம்
3,20,000 ஐந்தாம் மாதம்
6,40,000 ஆறாம் மாதம்
12,80,000 ஏழாம் மாதம்
25,60,000 எட்டாம் மாதம்
51,20,000 ஒன்பதாம் மாதம்
1,02,40,000 பத்தாம் மாதம்

ஒரு கோடியே ரெண்டு லட்சத்து நாற்பதாயிரம் பத்தாம் மாத  இறுதியில் உங்கள் கையில்!



நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம்  ஒரு  10 *20  ஒரு ரூம் வாடகைக்கு எடுத்து  ஒரு பித்தளை  அம்மன் செலைக்கு  மாலை எல்லாம் போட்டு  கோவில் செட் போடவேண்டியது தான் !
அஞ்சாறு பொம்பளைங்கள செட் பண்ணி ஊருக்குள்ள  உங்களோட மகிமைகள் பத்தி புருடாக்களை அள்ளி விட  வெக்கணும் . உங்க பேர கங்காரு  அம்மான்னு  வெச்சுக்கணும் !


அப்பறம் நீங்க  ஆம்பளையா  இருந்தா  அம்மன் வேஷம் போடணும் பொம்பளையா இருந்தா  சிவன்  வேஷம்  கட்டணும் . அப்பத்தான் ஒரு   விளம்பரம் கெடைக்கும். அந்த ஊர்ல இருக்கற ஒரு லோக்கல் சேனல்ல  நீங்க பூச பண்ணற  காட்சிகள் போட சொல்லி  அமவுண்ட் குடுத்து  வாரா வாரம்  சக்தி யாகம் நடத்தப் போறேன்னு  அறிவிப்பு குடுங்க! எப்பிடியும்மொதல் வாரமே  அக்கம் பக்கத்துப் பொம்பளைங்க  ஒரு பத்து பேர்  வந்து உக்காந்துடுவாங்க ! அவங்களுக்கு எல்லாம்  ஒரு கேவலமான  கலர்ல  பிளைன் சேல எடுத்து குடுக்கணும் ! அதப் போட்டுட்டுதான் வரணும்னு  கண்டிப்பா சொல்லிடுங்க ! மொதல்ல  காசு எதுவும் கேக்க வேணாம்.

*அப்பறம் என்ன ? யாகம்ன்ற பேர்ல செங்கல்ல  கட்டம் கட்டி மண்ணு குமிச்சு   சுள்ளிகளைப் போட்டு  டால்டா  ஊத்த வேண்டியது தான் ! பித்தளத் தகடு ரெடி பண்ணி  ஆளாளுக்கு ஒன்னு குடுங்க !  புருஷன் இடுப்புல கட்டு ! பாத்ரூம் கதவுல சொருகுன்னு  வாரம் ஒரு மாந்த்ரீக ஐட்டத்த  கைல திணிச்சா  நம்பிருவாங்க !

*வீதி வீதியா உங்க புகழ்  பரவும் ! ரசிகர் மன்றம் மாதிரி  அங்கங்க  பிரான்ச் ஆரமிக்க வேண்டியதுதான் ! மகளிர் சுய உதவிக் குழுக்களை வளைச்சுப் போட்டா   ஈசியா பிரபல  சாமியாராகிடலாம் !

* ஆசிரமம் ,கோவில்னு பிட்டப் போட்டு  உண்டியல் குலுக்க ஆரமிக்க வேண்டியது தான் பாக்கி . நீங்க நேர்ல பிச்சைக்குப் போவக் கூடாது ! உங்க போட்டோ போட்ட பிளெக்ஸ்  போர்ட தூக்கிட்டு தெருத் தெருவா  பக்தர்களை சுத்த விடுங்க !

* லம்பா ஒரு அமவுண்ட தேத்தி  ஊருக்கு ஒதுக்கு புறமா  ஆசரமத்தப் போடுங்க . என்னடா  ஊருக்கு வெளியவான்னு யோசிக்காதீங்க  கொஞ்ச நாள்ல  எடத்துக்கு  தண்டவாளத்த சுத்தி  ரயில்வே ஸ்டேஷனே கட்டிக்கலாம் .

* மாசம் ஒரு தடவை ஊர்வலம் வரணும்  வெள்ளித் தட்டுல கால நீங்க வெச்சா  பக்தைகள்  பன்னீர் ஊத்தி கழுவி விடுவாங்க ( குளு குளுன்னு இருக்கும் )

* கருமாத்தூர்  ஆதி பரா சக்தி  டிரஸ்ட் - போர்டைப் போட்டு  ஸ்கூல் ஆரமிங்க  அப்பறம் பாருங்க  deemed  யுனிவர்சிட்டி வரைக்கும் போய்கிட்டே இருக்கலாம் !

*நீங்க சாமியாக  நெறைய பேச தெரியனும்னு கூட அவசியம் இல்ல ! இப்ப நம்ம மேல் மருவத்தூர்  அம்மா இருக்காங்களே  அவங்க எதுவுமே பேசமாட்டாங்க  மாண்புமிகு முன்னாள் பாரதப் பிரதமர் நரசிம்மராவ் கூட  பட்ஜெட் கூட்டத் தொடர்ல நாலு வார்த்தை பேசுவார் ! ஆனா  நம்ம  அம்மா ஒருநாளும் பேசாது ! ஊமை சாமின்னு  சொல்லி பில்ட் அப்  ஏத்திக்கலாம்.

* சாமி காலை கழுவுனா  புண்ணியம் , ஜட்டிய தொவச்சா  கண்ணியம்னு  கெளப்பி விடனும் தெனைக்கும் ஒரு கதைய .....




அப்பறம் என்னங்க  உங்களோட சொந்த புத்தியையும் பயன் படுத்தி  பீல்டுல நெலச்சு நிக்க வேண்டியது தான் .
எவனுக்கும் பயப் படத் தேவை இல்ல  லோகல் அரசியல் வாதி சம்சாரத்த  பக்தையாக்கிட்டா  பொலிடிகல்  சப்போட்டும்  கெடச்சா மாதிரி . காசுக்கு கொறைவே இல்லாம  உண்டியல்  களை கட்டும் ! மெடிகல் காலேஜு ,ஆஸ்பத்திரின்னு  அடிச்சு ஆடலாம் . என்ன ஒன்னு  ஊருக்குள்ள கொஞ்சம் பேரு
மேடை போட்டு நம்ம பொழப்ப  நாரடிப்பானுங்க ! கண்டுக்கவே கூடாது  ! அவனுங்களுக்கு பதில் சொல்ல ஆரமிச்சா  டவுசர் கழண்டு ரோட்டுல ஓட வேண்டியது  தான் ! பிஞ்ச செருப்புல சானிய தடவி அடிச்சாலும் சடங்கான பொண்ணுக்கு சந்தானம் தேச்சு விட்டா மாதிரி சிரிச்சுட்டே இருக்கணும். வயசானப்பறம்  நம்ம புள்ளைங்களுக்கும் வேஷம் கட்டி  பட்டய கெளப்ப வேண்டியது தான் .






http://www.sakthipeedam.org>உங்களுக்கு நம்பிக்கை ஏற்ப்பட  இங்கு போயி பாருங்க ! நீங்களும்  கோடீஸ்வரர் ஆகலாம் ( நெசமாத்தான் சொல்றேன் )

Tuesday, February 16, 2010

" சில்க் " சிவ பெருமான் ! திருவிளையாடல் ரிட்டன்ஸ்

நாலு மண்டை பிரம்மனின் மகனான நாரைவாய் நாரதருக்கு ஆளுங்கட்சி மாநாட்டுக்கு சென்றபோது ரெண்டு குவார்டர் ஒத்தைக் கண்ணன் (ஓல்ட் காஸ்க்) சரக்கு கிடைத்தது ! ஒன்றை விழாப் பந்தலிலேயே பிரியாணி சகிதமாக குடித்த நாரதர் உபரியாக இருந்த சரக்கை நைசாக பட்டாப் பட்டியில் ஒளித்துக் கொண்டார் ! யார் குடியைக் கெடுக்கலாம் என்று யோசித்தவாறே மேல் லோகத்தை சுற்றி ஒரு ரவுண்ட் வந்தார் ! வைகுண்டத்தில் ஜலக் கிரீடை போரடித்து சர்ப்ப கிரீடை நடந்தேறிக் கொண்டிருந்தது. இதற்க கிடையில் புகுந்தால் நாராயணன் மெர்சிலாகி நாகப் பாம்பை தூக்கி தன் மீது ஏவிவிட்டால் என்னாவது என்று பயந்த நாரதர் முன்னும் பின்னும் மூடிக் கொண்டு அடுத்த தெருவுக்குள் நுழைந்தார் . அங்கு வீட்டில் தன் தந்தை நாலு தலையன் சரசுவை கிதார் வாசிக்கவிட்டு ஜாக்சனின் "மூன் வால்க்" நடனத்தை பயிற்சி செய்து கொண்டிருந்ததைக் கண்டு குமட்டலும் , வாந்தியும் ஏற்பட்டதால் குடும்பமே குதூகலமாய் சிரித்து கும்மாளமிட்டுக் கொண்டிருந்த கைலாசத்துக்குள் காலடி எடுத்து வைத்தார் .


அங்கு மானாட மயிலாட பார்ட் 9 ன் பிரமாண்டமான இறுதிப் போட்டி சிவா பெருமான் தலையில் சாரி தலைமையில் நடந்து கொண்டிருந்தது . தொடர்ந்து ஆறாவது பாட்டுக்கும் போட்டியாளர்களை ஆடவிடாமல் தானே கலா (மாஸ்டர் ) ஆடிக் கொடிருக்க சிவ பெருமான் மைக்கில் சந்தியா தாண்டவத்தையும் ஊர்த்தவ தாண்டவத்தையும் சேர்த்து ஒரு குத்து போடுமாறு கோரிக்கை வைத்துக் கொண்டிருந்தார். குஷ்பூ ஆடுவதைப் பார்க்க ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த முருகனும் புள்ளையாரும் கடுப்பின் உச்சத்துக்கே சென்றனர் ! ஒரு கட்டத்தில் பொறுமைஇழந்த புள்ளையார் அந்த நடனக்குழுவை ஆட்ட மேடையுடன் அலேக்காக தூக்கி பூலோகத்தில் வீசி எறிந்துவிட்டார் !

சிவ பெருமான் மூனாங்கண்ணில் பூவிழுந்து பார்வை மங்கலாகிவிட்ட படியால் , நெருப்பெல்லாம் வருவதில்லை எனவே தன் கோவத்தை அடக்கிக் கொண்டு நின்றார்.

சூழ்நிலையை உணர்ந்த நாரதர் நல்லா ஊதிவிட்டா குடும்பத்துல கும்மி கொட்டிட்டு ஓடிடலாம்னு பிளான் பண்ணினாரு !


சிவ பெருமான் : டேய் மாப்ள என்னடா இந்த பக்கம் ? லைட்டா மப்புல இருப்ப போல !

நாரதர் : மகா தேவா ! நீர் நாயினும் கூரிய மூக்கினர் !

சிவ பெருமான் : நான்லாம் மூடிய ஓடைக்காமலே மொத்த சரக்கையும் மூக்குல உறிஞ்சற பய ! எனக்கேவா ? ஹா ஹா ஹா

பார்வதி : யோவ் ! அந்தாளு உன்ன நாய் மாரின்னு சொல்றான் , நீ இன்னாடான்னா கெத்தா இளிச்சுகினு கீற ! த்த்த் த் த் த் தூ .......

புள்ளையார் : மே ! துப்பரதுன்னா அந்தாளு மேல மட்டும் துப்பு . இப்ப இன்னாத்துக்கு எம்மூஞ்சில சாரலடிக்கற ?

முருகன் : டேய் ! அதுக்குதாண்டா அளவா வளரணும்னு சொல்றது ! ஆனா மண்டையா ! ஊடு உம்மூஞ்சிதாண்டா நெறஞ்சு இருக்குது .

நாரதர் : சரி சரி சண்டை போடாதீர்கள் குழந்தைகளே !

முருகன் : டேய் ! இன்னாது இவனப் பாத்தா உனுக்கு கொளந்த மாரீ தெர்தா . தட்னன்னா தாராந்துருவ ! கோழிக்கண்ணா ஓடிப் போயிரு !

நாரதர் : போங்கடா ................... ளா , பாவம் புள்ளைகன்னு சரக்கு வாங்கியாந்தா என்னையே ஓட்டறீங்களா ? சரக்குமில்ல ஒரு மயிருமில்ல போங்கடான்னு,

வாசல் பக்கம் எஸ்கேப் ஆக டிரை பண்ணினாரு . ஒடனே தும்பிக்கைய நீட்டி நாரதரின் டவுசரோடு பாட்டிலைப் பிடுங்கி எடுத்தார் புள்ளையார் . டவுசர் கிழிஞ்ச கடுப்பில் நாரதர் வண்டை வண்டையாய் திட்டிவிட்டு ஓடி விட்டார் .
அதை பற்றி கவலை படாமல் புழுதில் பிரண்டு சண்டையிட்டனர் மகேசன் மகன்கள்.

பார்வதி : யோவ் ! புள்ளைங்க ரெண்டும் அடிச்சுகினு சாவுது . சும்மா உக்காந்து பீடி வழிக்கரையே உன்னையெல்லாம் கம்முனாட்டின்னு சொல்லாத வேற இன்னா சொல்றது

கடுப்பேறிய சிவன் குறுக்கே பூந்து பாட்டிலை பிடுங்கினார்

சிவ பெருமான் : டேய் ! அடங்குங்கடா ! உங்க ரெண்டு பேருக்கும் ஒரு போட்டி வெக்கப் போறேன் அதுல எவன் ஜெயிக்கறானோ அவனுக்குதான் சரக்கு ~!

முருகன் : இன்னா போட்டி நைனா !

சிவ பெருமான் : ரெண்டு பேத்துல போயி எவன் நல்ல பிகர் மடிச்சுட்டு வரானோ அவன்தான் கில்லி ! அவனுக்குதான் மில்லி !

ஒடனே பூலோகத்துக்கு கெளம்பினான் முருகன் ! கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஆடிகிட்டு இருந்த குண்டு அக்காவ கூட்டியாந்தா ஜொள்ளு விட்டுக்கினே சரக்க குடுத்துருவாருன்னு கால்குலேசன் போட்டான் !

புள்ளையாருக்கு தொந்திய தூக்கிகினு எங்கயும் போக முடியல ஒடனே தும்பிச்சாங்கைய கொண்டு போயி சிவனோட கொண்டைல தடவினாரு ! மவன் எதோ பாசத்துல நெரவரான்னு கண்டுக்காத விட்டாரு சிவ பெருமான் .

ஆனா இவுரு தடவின தடவுல சிவன் கொண்டைல இருந்த கங்கை மயங்கி எறங்கி வந்து கட்டி புடிச்சு உம்மா குடுக்க ஆரமிச்சிருச்சு !

சிவ பெருமான் : டேய் ஆழ வாயா ! உங்கொப்பன் சின்ன வூடு ஒனக்கு சித்தி மாதிரி இல்ல ! அதப் போயி கரெக்ட் பண்ண பாக்கறையேடா"ன்னு சூலத்த எடுத்து புள்ளையாரு வாய்க்குள்ள சொருவிட்டாரு!


வலி பொறுக்காத புள்ளையாரு வந்த கடுப்புல சிவன சிலுக்கா மாத்தி சாபம் குடுத்துட்டாரு !

திரும்பி வந்த முருகன் சிவனைப் பாத்து ஷாக் ஆயிட்டாரு !

அப்பறம் பஞ்சாயத்து பேசி சிலுக்க நாரதருக்கு கட்டி வெச்சுட்டாங்க ! கலாக்காவ முருகன் மூனாவதா கட்டிகிட்டாரு !

புள்ளையாரு கண்ணாலமே வேணாம்னு சொல்லிட்டாரு !


கதையின் நீதி : ஓசி சரக்குக்காக உயிரையும் கொடுப்பவனே கடவுள் !

Saturday, February 13, 2010

சிவ ராத்திரி - தூக்கம் போச்சே

சாமியப் பத்தி  ஓட்டினா  யாருக்கு நல்லா கோவம் வருதுன்னு பாத்தா ! நம்ம எதிர்பார்ப்புகள பொய்யாக்கும் விதத்துல  இந்துக்களுக்கு கோவம் சுர்ருன்னு வருது  ( நான் அப்டியே ஷாக்  ஆயிட்டேன் ).

சிவன எப்பிடிடா  நீ கம்முனாட்டினு சொல்லலாம்னு  வரிஞ்சு கட்டிட்டு வந்துட்டாங்க ... அப்பறம் பஞ்சாயத்து பேசும்போது  " வேணும்னா  பரதேசின்னு சொல்லுங்க ஒத்துக்கறோம் " அப்பிடீங்கறாங்க !

ஏன்யா !  பரதேசின்னு  நாங்க எதுக்குய்யா சொல்லணும் ?
சடை விழுந்த மயிறு !

ஒடம்பு பூரா மண்ணு !

கிழிஞ்ச சாக்குல ஒரு அழுக்கு கோவணம் !

சினேக் பாபு மாதிரி  செத்த பாம்பு !

அடிக்கறதுக்கு உடுக்கை !

திங்கறது  புழுக்கைனு !  கெட்டப்ப பாத்தாலே  உக்காந்த எடத்துல உச்சா  போற  பாப்பா கூட சொல்லிடும் இவன் பரதேசின்னு !

அரசியல், பொருளாதார கொள்கைகள் எப்படி ஓட்டப் படுதோ அதே மாதிரிதான்  உங்க சாமி  நம்பிக்கைகளும் விமர்சனத்துக்கு உட்பட்டவை. சாமிகளைப்  புனிதப்படுத்தி ஓட்டக் கூடாதுன்னு சொல்லி அழுதா எல்லாம் உட முடியாது !


அப்பறம்  சிவன் குடும்பத்தையே  சந்திக்கு இழுத்து  நாற அடிச்ச ஒடனே  ஒரு அதி புத்திசாலி  அனானியாவந்து  முஸ்லீம் பேருல  வம்பிழுத்து  அவுங்கள திட்ட வெக்க டிரை பண்ணுது  ( அனானி களையெல்லாம் பெத்து உட்டதே நாமதான் - நமக்கே வா ?)

பரவால்ல  ! நல்லா முக்கிப் பாத்தீங்க  ஆனா என்ன  கோட்டை மேடு ! நாகூரு ! சுல்தான் பேட்டைன்னு போட்டுதான்   கொஞ்சம்  ஓவரா போயி மாட்டிக் கிட்டீங்க ! 

எப்பிடியோ  சிவனுக்கு வக்காலத்து வாங்கறேன் பேர்வழின்னு  எல்லாருமா சேந்து  அந்தாளு பொண்டாட்டிய பெருமாள்கிட்ட  அடமானம் வெச்சு  பேக்கரி வாங்குன விஷயம் வரைக்கும்   வீதிக்கு இழுத்திட்டீங்க !


ரைட்டு  நேத்து சிவராத்திரி  !  அவுரு விடிய விடிய  குத்து டேன்ஸ்  போடற நாளு! இந்த கூத்தால   குளிக்காம கொள்ளாம   .......சுண்ணாம்பு தடவிட்டு   உக்காந்துட்டு இருக்காராம்  பாவம் ! 


சிவ ராத்திரி  - தூக்கம் போச்சே!

Monday, February 8, 2010

சொம்பைத் தூக்கித்தா ! சோறு நீ வாங்கித் தா !

எங்கனம்  தொடங்க  எங்கு தொடங்க ....
என் பேனா மையூற்றியதால் நானிழந்தவை ஏராளம் ... ஆயினுமென்ன  ஊற்றாவிடில் மசி என்னுள் நிரம்பி என்  நிறம் மாற்றிடக் கூடும் !

மூன்றாம் யாமம்  முழித்திடும் விழிஎனக்கு  வாய்த்ததை  வரமென்று விளிப்பதா இல்லை ..... 


உறக்கம் பிடி படாது பலரும்  துடிப்பதாய்க் கேள்வி ! அடித்துப் போடும் உறக்க மருந்துண்டு என்னிடத்தில் கிறக்க மருந்துமுண்டு !

இருபத்தொரு  மணித்துளி  எண்ணையை  இழுப்பேன்!  இழுத்த பலனை கிஞ்சித்தும் கருதாது  சாக்கடைக் கரைசலை  சர்க்கரை சேர்த்துப் பருகுவேன் !
நுரை பொங்க கலங்க வேண்டும் ! அது போழ்து தான்  நிறைவாகும் மனம் ....

நாயுடன்  ஒரு ஊர்வலம்!
பேயுடனும்  போவதுண்டு - சமீபமாய் பேய் புதிதாய்  .....  தின்னப் பழகியிருக்கிறது !
ஆதலின் வெளியே  பேய் இல்லை நாய் மட்டும்  ஊர்வலம்

பேயோட்டிகள்  ஏவக் கேட்டனர் ! ஏவியவை  திரும்பிய கூத்து ஏராளமாய் பார்த்த துண்டு !
எத்தனையோ  செய்ததுண்டு இதுகாறும்  ஒரு புண்ணில்லை!
அத்தனைக்கும் காரணம் நித்தியத்தின் சூரணம் !

பந்துருட்டி  பேயுடன்  கலவி  பின் மாலை முழுதும்  நித்திய மைதுன தியானம் !

இந்நிலையில் நேற்றின் விடியல் !
எண்ணெய்  இழுக்கவில்லை
கரைசல் பருகவில்லை
நித்திய மைதுன தியானம் செய்யவில்லை - அனைத்திலும் மேலாய்  பேயுடன்  கலவியில்லை
நேற்றும் கலவாததை  எனக்கு அறிவிக்கும் நிமித்தம் முன்னங்கால் தூக்கி மன்றாடிக் கொண்டிருந்தது  என் பிரிய பைசாசம் .
உச்ச ஸ்தாயுடன் ஊளையிட்டேன் செவிடெடுத் தோடியது பேய் !
ஆணிகள்  உகுத்தெறியும் பணியது கொண்டேன் !
ஒன்பது  மூடை  ஆணிகள் !
ஆம் ! பிச்சை புகினும் இச்சை நன்றே !

நாய்க்கு சோறில்லை ! பேய்க்கு  நீரில்லை !
சோறை நானுண்டு  பேயை  பசியாற்றவா  அன்றி  நாய்க்கு சோறு ஊட்டவா!
நானறியேன் பராபரமே !
நாயை நாளை பார்ப்போம்  நாராயணா ! என்று கும்பிக்கு கூழூத்த  எத்தனித்தேன் !
படியளக்கும்  பெருமாள்கள்  ஒவ்வொருவராய்  உள்ளுக்குள் அணி வகுத்தனர்!
அதனூடே அளந்தபின்பு  அவர் செய்யும்  அட்டகாசங்கள்   கிலியடித்தன...

கதை வேண்டும் என்பான் ஒருவன் - கவி புனையச் சொல்வான் மற்றொருவன் !  புணரும் கனவுகளைக் கொன்று எழுப்பி ஏதேனும் பேசச் சொல்லிக் கேட்பான் பிறிதொருவன் !
ரசத்தில் ......., இறுத்தாற் போல் ஊத்து  என்பதாய்ப் போனதென் கதை !

வேறெதுவும்  கைக் கொள்ள மனமது  முன்செலவில்லை !  நித்ய தியானம்  செய்தேன் - "தன் கையே தனக்குதவி" மேதை தான்  சொன்னவன் !
கதவினை  முழுமையும்  அடைக்க மறந்திட்டேன் போலும் - எதோ ஒரு குரல்  பெயர் சொல்லி அழைத்தது !
சடுதியில் சென்று கதவடைத்து வந்து தியானத்தில் மூழ்கவும் - பகடி செய்தது  மீண்டும் அக்குரல் !
வந்ததே கோபம் ! -  நாயும் பேயும் கூட கூட்டாய்ப் பல்லிளித்தன !  ஆயிரம் வேசிகள் முன்  அம்மணமாய் உணர்ந்தேன்!

அதனை  தொடர்ந்துதான் இதனை எழுது கிறேன் !
எதோ ஞாபகத்தில்  கதவடைக்க மறந்ததற்கா  இப்படியொரு தண்டனை !
அந்த நேரத்தில் பகடி செய்கிறீர்களே ! உமது  மனிதாபிமானம் குறித்து  யாது சொல்வது !
இவ்விதம்  சொன்னால் நான் ஒரு  கேனக்.........  என்று பட்டவர்த்தனமாக  மேடை போட்டு முழங்கத் துவங்கி விடுகிறார்கள் . அங்ஙனமே இருந்த போதும் , அத்தோடு நிறுத்தாமல்  குஞ்சு குளுவான்களும்  விழுந்து புரண்டு சிரிக்கும் நிலைக்கு எனைத் தள்ளிய  பெருமை  உம் போன்றோரையே  சாரும் !

இவ்வளவு கடுமை கொள்வதற்கு  மன்னிக்கவும் அசரீரியே ! ஏனெனில் எனக்கு  வேறேதும் தெரியாது ! நம்மிருவருக்கும் பொதுவான அவர் கூட பல தருணங்களில் எனை அவ்வாறு பார்த்திருந்தும் பரிகாசம் செய்ததில்லை ! அவருக்குத் தெரியும்  சென்ற பத்தியில்  சொன்னாற் போல் நானொரு ............................ என்று !


பின் குறிப்பு :
இவ்விதம் கொட்டி விட்டேனன்றோ ! படியளக்கும் சிலரும்  பதறித் தெறித்து ஓடிவிடக் கூடும் ! அதுவும் நித்ய தியானத்துக்கு  உதவக் கூடுமென்று  கருதலாவேன் - ஆத்திரப்படுவதில்லை

Wednesday, February 3, 2010

லட்சத்தில் ஒருவன்! (புனைவான புனைவு)

டிஸ்கி:இந்த கதை நடந்த காலம் த.மு 2000 வருடம் அதாவது தவக்களை பிறப்பதற்கு முன், அந்த தவக்களை பிறந்ததா இல்லையா என்றெல்லாம் எங்களுக்கு தெரியாது, கதை உண்மையா இல்லையான்னு தவக்களையை கேட்டு தெரிஞ்சிகோங்க!


*************************

பூசை இரும்பு வேலை செய்பவன், மாட்டுக்கு லாடம் அடிப்பது, மாட்டு வண்டி டயருக்கு லாடம் அடிக்கும் வேலை, கடுமையான உழைப்பாளி , அதனால் தினம் ஒரு குவாட்டர் அடிக்கும் பழக்கம் அவனுக்கு, வீட்டில் உள்ள பெருசுகள் சேர்ந்து அவனுக்கு மாரியை திருமணம் செய்து வைத்தார்கள், மாரி மிக அடக்கமானவள், பூசை எதை சொன்னாலும் செய்வாள்(பூசை ஒண்ணுமே சொன்னதில்லை ), பிறகு ஒருநாள் ஒரு பெரிய வேலை வந்தது பூசைக்கு, அந்த மகிழ்ச்சியில் ரெண்டு குவாட்டராக அடித்தவன், மனைவியை பெண்டு நிமிர்த்தி விட்டான்! பின்பு மூணு மாதம் வெளியூரில் வேலை!

வேலை முடிந்து திரும்பி வந்தவனுக்கு மனைவி லோடாகி இருப்பது கேட்டு அதிர்ச்சி, நாமதான் மூணு மாசமா ஊர்லயே இல்லையே, இவ எப்படி கர்ப்பமானான்னு, மாரியும் எவ்ளவோ சொல்லிபார்த்தா, இவனுக்கோ ஞாபகமே வரல, தினமும் சண்டை ஆரம்பித்தது, இதை ஒரு முடிவுக்கு கொண்டுவரனும்னு நினைச்ச மாரி, ஒருநாள் பூசைதூங்கிகிட்டு இருக்கும் போது, கிருஷ்ணாயில் புனலை எடுத்து வாயில வச்சிகிட்டு, “டேய், மாரி வயித்துல வளர்றது கடவுளோட குழந்தை, அவள எதாவது சொன்ன கண்ண குத்திபுடுவேன்னு மிரட்டிட்டா”, பயந்து போன பூசை பத்து வட்டிக்கு கடன் வாங்கி மாரியை கவனிக்க ஆரம்பித்தான், கடன் கழுத்தை பிடிக்கும் அளவுக்கு உயர்ந்தது, மாரிக்கும் டெலிவரி டைம் வந்துவிட்டது, ராவோடு ராவாக ஏரியாவை காலி செய்து எஸ்கேப் ஆனார்கள்!


சின்ன சேலம் ! கால் டாக்ஸிக்கு கூட காசில்லாததால், ஒரு மீன்பாடி வண்டியில் ஏற்றி தங்குவதற்கு இடம் தேடி அலைந்தான் பூசை, தூரத்தில் ஒரு கோழிப்பண்ணை தெரிந்தது, ஒரு கிழம் அங்கே அமர்ந்து கோழிகளை எண்ணி கொண்டிருந்தார், பூசை அவரிடம் போய் தன் மனைவி லோடாகி இருப்பதாகவும், தங்குவதற்கு இடம் கொடுங்கள் என்றும் கேட்டான், நல்ல மூடில் இருந்த தாத்தா, கோழியோட நீ படுத்துக்கோ ! குஞ்சோட (அட கோழிக் குஞ்சுங்க !) அவள படுத்துக்கச் சொல்லுன்னு சொல்லிட்டார்!

நாய்கள் ஊளையிட ,நட்சத்திரங்கள் பொழிய, வானம் வழிய, எல்லாத்துக்கும் டவுசர் அவுர அவர்களுக்கு ஒரு அழகான ஆண்குழந்தை பிறந்தது, அதற்கு அவர்கள் ”வாசு” என்று பெயரிட்டார்கள், வாசுவின் இளமை பருவம் இரும்படிப்பதிலேயே கழிந்தது, அவனது அப்பா பட்டறையில் தினமும் இரும்படிக்கும் வாசு, உருண்டு திரண்ட உடற்கட்டை பெற்றிருந்தான், அந்த வழியே செல்லும் பெண்கள் அவனை ஓரக்கண்ணால் பார்த்து கொண்டே செல்வார்கள், அவனுக்கோ சாந்தியின் மீது ஒரு கண்!

சாந்தி, ரெண்டு நமீதா, மூணு நயன்தாரா, நாலு சினேகா, அஞ்சு பாவனா இதுக்கு மேல விரிவா எப்படி அவளோட அழகை விவரிக்கிறதுன்னு தெரியல! சுருக்கமா சொல்லனும்னா பத்து ஷகிலா, அப்பேர்பட்ட அழகி சாதரணமாக மயங்கி விடுவாளா!? ஊரே அவள் பின்னாடி தான் சுற்றியது, பூசைக்கோ அது பிடிக்கவில்லை, எவ்வளவோ சொல்லியும் வாசு கேட்பதாக இல்லை, மணந்தால் சாந்தி இல்லையென்றால் சரக்கடித்து வாந்தி என்று ஒற்றை காலில் நின்றான்! ஊர் கூடி பேசி அவனுக்கு சாந்தியை திருமணம் செய்து வைத்தது!


ஒரு விசயம் சொல்ல மறந்துட்டேன், தவக்களை சொன்ன இந்த செவி வழி கதையில் இந்த கல்யாண மேட்டர் மறைக்கப்பட்ட உண்மைகள் என்ற கதையில் வருமாம், கிட்டதட்ட ஆறு வருட வாழ்க்கை!


ஒரு வருசம் நல்லாதான் போய்கிட்டு இருந்தது, தீடிர்னு சாந்திக்கு என்ன ஆச்சோ தெரியல, சண்டை போட ஆரம்பிச்சா! சில சமயங்களில் வாசுவுக்கு அடியெல்லாம் கூட விழுந்தது, ஒரு இனிய மாலை பொழுதில் சாந்தி குல்பி ஐஸ் காரனோட ஓடிப்போன விசயம் வாசுவுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது, துக்கத்தில் தண்ணி அடித்தான்(ஒன்லி ஒயின் தான்) தாடி வளர்த்தான், பைத்தியம் போல் திரிந்தான்! சாதாரண மனநிலையில் இருப்பவர்களை விட பைத்தியநிலை மனிதர்கள் சில சமயங்களில் பெரிய தத்துவங்களை உதிர்ப்பார்கள், அவ்வாறு சில சமயம் நடக்கையில் ஊர் வாசுவை கவனிக்க ஆரம்பித்தது!


அந்த ஊர் எம்,எல்,ஏ.விலிருந்து, வார்டு கவுன்சிலர் வரை யாருக்கும் வாசுவை பிடிக்க வில்லை, எப்போ பார்த்தாலும் டொனேஷன் கேட்டு கொண்டிருந்ததால் மக்கள் அவர்களை வெறுத்தார்கள், அப்பொழுது அவர்களுக்கு இருந்த ஒரே பொழுது போக்கு வாசு மட்டுமே! வாசு கொஞ்சம் கொஞ்சமாக மாறி கொண்டு வந்தாலும் ஊர் மக்களுக்காக அப்படியே நடிக்க வேண்டியிருந்தது, தன்னை பாதுக்காக தன்னை சுற்றி பனிரெண்டு பேர் கொண்ட பாதுகாப்பு குழு ஒன்றையும் வாசு வைத்து கொண்டான்,(செம்மறி ஆட்டுப் படை தனி !) அவர்களுக்கு தினமும் சரக்கும் சப்ளையும் உண்டு! அமைதியாக போய் கொண்டிருந்த வாழ்க்கையில் ஒருநாள் புயல் வந்தது! தேவதாஸ்என்ற ஒரு அடியாளுக்கு ஒரு நாள் சரக்கு குறைவாக வந்ததால் நேராக போயி வாசுவிடம் முறையிட்டான் ... பெரிய புடுங்கி மாதிரி ஒரு பித்தள சொம்புல தண்ணி கொண்டு வர சொல்லி அதுல எச்சிய துப்பி குடுத்தான் வாசு ! '' இப்போ குடி ! தேவ போதை உள்ள எறங்கி இருக்குன்னு'' வாசு சொல்ல , பயங்கர கடுப்பானான் தேவதாஸ் !!

வாசுவுக்கு .... கொழுப்பு ஓவரா போச்சுன்னு நினைத்தவன், ஏரியா எம்.எல்.ஏ. கூட அன்கோ போடலானான், அவனுக்கு ஃபாரின் சரக்கு அங்கே சப்ளை செய்யப்பட்டது, சரக்கு போதையில் அவன் எல்லாவற்றையும் உளரி கொட்டினான், அவை அனைத்தும் பல்வேறு மனிதர்களின் வாயிலாக தொகுக்கப்பட்டு கொண்டிருக்கிறது, ஒருநாள் ஆடு திருடும் போது வாசு கையும் களவுமாக பிடிபட்ட வாசு கழுவில் ஏற்றி கொல்லப்பட்டான்! அவன் அங்கே திருட வருவான் என காட்டி கொடுத்தது தேவதாஸ்!

****************************
தொகுக்கப்படும் புத்தகத்தில் இருந்து ட்ரைலர்!

முண்டைகண்ணு முனுசாமியின் சேப்டர், மூன்றாம் அதிகாரம், நான்காம் வசனம்:
டெய்லி ஆட்டை தூக்கி கொஞ்சிகிட்டு இருக்கான்னு ரொம்ப நாளா நினைசோம்ங்க, அப்புறம் தான் தெரிஞ்சது தினம் ஒரு ஆட்டை திருடிகிட்டு போயிருகான்னு!


கத்திகுத்து கந்தன் சேப்டர், பதிமூன்றாம் அதிகாரம், ஆறாம் வசனம்:
ஒருக்கா ஆட்டைய போட போகும் போது மாட்டிகிட்டேன், பாடுபசங்க ஒருமணி நேரமா கட்டி வச்சு உதைச்சாங்க, அப்பாலிக்கா வாசு வந்து “ உங்களில் யாரு சின்ன வயசுல இருந்து திருடலையோ அவர் கந்தனை அடிக்கட்டும்னு சொன்னான்”, எல்லாரும் போன விசுக்கா சொன்னேன், ”மவனே நீ மட்டும் இன்னோரு பத்து நிமிசம் லேட்டா வந்திருந்த, நீயும் நானும் தான் திருட வந்தோம்னு உண்மைய சொல்லியிருப்பேன்!”


வேடிக்கை வேலுச்சாமியின் சேப்டர் ஒன்பதாம் அதிகாரம், பத்தாம் வசனம்:
நான், எங்க எது நடந்தாலும் வேடிக்கை பார்க்க போவேங்க, ஒருக்கா வாசுவ கழுவுல ஏத்தும் போதும் போயிருந்தேன், அப்போ அவன் சொன்ன வார்த்தை இன்னும் ஞாபகத்துல இருக்கு, அவன் வானத்தை பார்த்து என்ன சொன்னான்னா, “ங்கோத்தா பாடு கடவுளே, உன்னைய போய் நம்புனேன் பாரு, என்னை பிஞ்ச செருப்புல ....ய தடவி அடிக்கனும்னு சொன்னான்!



பிற்பாடு வாசுவின் அல்லக்கைகள் பதினோரு பேரும் ஊர் ஊராக சென்று அண்டா, குண்டா திருடியது எதிர்கால ஏற்பாட்டில் வரலாம்!