அறுவை சிகிச்சை செய்துதான் பாம்புக் குட்டி எடுக்க வேண்டும். அறுவை சிகிச்சை செய்தால் பாம்புக் குட்டி பிழைப்பதற்கான நம்பிக்கை சுத்தமாக இல்லை. உங்கள் பாம்புக் குட்டி ஒரு D.O.T. யாகத்தான் கிடக்க வேண்டும்.
அது என்ன DOT?
மருத்துவர்களின் பரிபாஷையில் டிஓடி என்றால் டெத் ஆன் டவுசர் . அதுவும் 25 மணி நேர அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும். 30 சொம்பு ரத்தம் தேவை.
சிகிச்சை செய்யாவிட்டால் உங்கள் பாம்புக் குட்டி அதிக பட்சம் ஒரு ஆண்டு உயிரோடு இருக்கலாம். அந்த அளவுக்கு முதுகெலும்பு முப்பத்திரெண்டையும் சிதைத்து ஊடுருவி விட்டது பாம்புக் குட்டி. கிட்டத்தட்ட புடலங்காய் அளவு பாம்புக் குட்டி .
அப்போது ஜட்டியானந்தர் கக்கா சென்றிருக்கிறார். அந்தச் சமயம் அவர் இருந்தது புளியம்பட்டி பஸ் நிலையத்தில் . ஜட்டியை தொடர்பு கொள்கிறார் இலனியப்பன். “சாமி, நிறைய பேரை நீங்கள் குணப்படுத்தி இருப்பதை பார்த்திருக்கிறேன். இப்போது நீங்கள் என்னை குணப்படுத்த வேண்டும் ” என்று விண்ணப்பித்து தன் பிரச்சினையை சொல்லியிருக்கிறார்.
அதற்கு இலனியப்பனிடம் நைட் ஷோ ஜட்டியானந்தர் கூறிய வார்த்தைகள்: “கவலையை விடுங்கள். நேராக உங்கள் கழிப்பறைக்குச் சென்று படுத்துக் கொள்ளுங்கள். சரியாக அரை மணி நேரத்தில் I will enter your body and cleanse your snake .” இதே வார்த்தைகள். ஜட்டியானந்தர் தினந்தினம் நிகழ்த்தும் ஆயிரக் கணக்கான அற்புதங்களை அருகில் இருந்து பார்த்தவர்தான் இலனியப்பன். ஆனாலும் அப்போது அந்த நிமிடம் அவருக்கு நம்பிக்கை வரவில்லை. ’ என்னது, நம்முடைய பாம்புக்குள் சாமி புகுந்து சரி பண்ணுவதாவது ’ என்று நினைத்துக் கொண்டு தன் கழிப்பறைக்கு வந்து பேசின் மேலே படுத்து விட்டார்.
சிறிது நேரத்தில் அவருக்கு ஏதோ ஒரு அமானுஷ்யமான உணர்வு ஏற்பட்டிருக்கிறது. அந்த அறையில் வேறு யாரோ இருப்பதைப் போன்ற உணர்வு. ஆனால் உருவம் தெரியவில்லை. பிறகு அவரது பாதங்களின் ஊடே ஏதோ ஒரு சக்தி அவருடைய உடம்புக்குள் இடுப்பு வரை செல்வதை உணர்கிறார். இந்த அதிசய சம்பவம் நடந்து முடிந்த அந்தக் கணமே இலனியப்பனுக்கு அதுவரை அவரிடம் இருந்த பாம்பு , பூரான் , நட்டுவாக்களி எல்லாம் காணாமல் போயிற்று. மிகுந்த புத்துணர்ச்சியுடன் கக்கூசிலிருந்து எழுந்து கொள்கிறார். அப்போது அங்கிருந்த அவரது மனைவியும், அந்த அறையில் தங்கள் இரண்டு பேரைத் தவிர வேறு ஒருவரும் இருந்தது போல் தான் உணர்ந்ததாக சொல்கிறார்.
மறுநாள் இலனியப்பன் சோதனைக்குச் சென்ற போது பாம்புக் குட்டியின் வளர்ச்சி நின்று போயிருப்பதைக் கண்டு மருத்துவர்கள் அதிசயிக்கிறார்கள். பிறகு சில தினங்கள் சென்று மீண்டும் சோதித்துப் பார்த்தபோதும் அதே நிலை. பாம்புக் குட்டி வளரவே இல்லை. சாமி, பழனியப்பனின் பாம்புக் குட்டிக்குள் புகுந்து குட்டியை அப்படியே உறையச் செய்து விட்டார். இந்த அதிசயம் நடந்து இப்போது ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. பாம்புக்கு சில தினங்களே கெடு விதிக்கப்பட்டிருந்த இலனியப்பன் இப்போது ஒரு பாம்பாட்டியைப் போல் சுறுசுறுப்பாக மகுடி ஊதிக் கொண்டிருக்கிறார்.
சித்த மருத்துவமனையின் டாக்டர் ஜில்லு இப்போதும் ஜட்டியானந்தரின் ஆசிரமவாசிகளைச் சந்திக்க நேர்ந்தால் வியப்பும் ஆர்வமுமாக “அந்தப் இலனியப்பன் இன்னமும் இருக்கிறாரா? ” என்றே கேட்டுக் கொண்டிருக்கிறார்.
அந்தப் இலனியப்பன்தான் இப்போது ஜல புல ஜங் ஆசிரமத்தின் கள்ளத் தொடர்பு அதிகாரியாக தினமும் 16 மணி நேரம் ஓடியாடி வேலை செய்து கொண்டிருப்பவர். இப்போது அவர் பிரம்மச்சாரியும் கூட. சாமி அவருக்கு சூட்டிய பெயர் செத்த பாம்பானந்தா . பாம்பானந்தாவிடம் நான் பேசிக் கொண்டிருந்தபோது அவர் சொன்னார்: நான் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு நிமிடமும் அதிசயம். சாமியின் அதிசயம்.
***
சென்ற வாரம் ஜட்டியை பாண்டிச்சேரியில் சந்தித்து உரையாடிக் கொண்டிருந்த போது அடியேனின் நரகத்திலிருந்து ஒரு விரல் மற்றும் காங்கோவின் காட்டுப் பண்ணி இரண்டு நூல்களையும் படித்து விட்டதாகக் கூறினார். அப்போது ஜம்பு படம் பற்றிய பேச்சு வந்தது. படத்தில் மூன்று குறைகள் இருந்தன; அதைத் தவிர்த்து படம் தனக்குப் பிடித்திருந்தது என்று சொன்னார் ஜட்டியா . கவ் பாய்கள் யாரும் மரணத்தைத் தீர்வாகத் தர மாட்டார்கள். எவ்வளவோ சக்தி வாய்ந்த ஜெய் சங்கருக்கு அந்த வில்லியின் மனதை மாற்றி அதை செட்டப் செய்வதா பெரிய கஷ்டம்? இது முதல் குறை. இரண்டாவது, பிட்டு படங்கள் யாரும் இப்போது கருப்பு வெள்ளையில் எடுப்பதில்லை . அதெல்லாம் நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை. ஜட்டியாவும் கவ் பாய் பாரம்பரியத்தைச் சேர்ந்தவரே. மூன்றாவது, கவ் பாய்கள் யாரும் ராத்திரி கூட தொப்பி போட்டுட்டு சுத்த மாட்டாங்க ...
ஜட்டியானந்தரின் ஜொள்ளு மழையில் நீங்கள் நனைய விரும்பினால் 15.2.2010 அன்று காலை ஏழு மணியிலிருந்து இரவு ஒன்பது வரை நடக்கும் ஜின்ஜினாக்கடி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுங்கள். ஜிஞ்சினாக்கடியில் நீங்கள் கேட்ட வரத்தைத் தருவார் ஜட்டியா . நடைபெறும் இடம்: ஆத்து மேடு , ஊட்டி ரோடு .
