முஸ்லிம்களில் பலரும் தாடி வைத்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அவர்களுள் சிலர் தாடிக்கு கலரிங் செய்திருப்பதையும் பார்த்திருப்பீர்கள். அவர்களது வேறு சில நடைமுறைகளையும் பார்த்து, எதற்கு என வினவியிருப்பீர்கள்? தாடி சம்பந்தமான ஹதீஸ் ஒன்றினைதான் இப்பதிவில் பார்க்கப்போகின்றோம்.
ஹதீஸ் என்றவுடனே அலறி, "அய்யயோ! ஹதீஸா? இது பலமான ஹதீஸா? பலவீனமான ஹதீஸா?" என்றெல்லாம் நீங்கள் கேட்பீர்கள் என்று தெரியும். அதனால்தான், இன்றைய தமிழக முஸ்லிம்களின் அவுலியாக்களில் ஒருவரான பீஜேயின் தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஹதீஸை இங்கே பதிப்பித்துள்ளோம். ஹதீஸின் நம்பகத்தன்மை குறித்து உங்களுக்கு ஐயம் இருந்தால், பீஜேயின் தளத்தில் கேளுங்கள். பதில் கிடைக்கக்கூடும்.
இந்த ஹதீஸ் இடம்பெற்றுள்ள பீஜேயின் பக்கத்திற்கான சுட்டி. குறிப்பிட்டுள்ள வலைப்பக்கத்தில் இருக்கும் ஹதீஸ் இங்கேயும்.
- அபூ உமாமா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முதிர்ந்த வயதுடைய அன்சாரிகள் சிலரைக் கடந்து சென்றார்கள். அவர்களின் தாடிகள் வெண்மையாக இருந்தன. அப்போது நபி (ஸல்) அவர்கள் அன்சாரிக் கூட்டத்தாரே (உங்கள் தாடிகளை) சிவப்பு நிறத்தில் அல்லது மஞ்சள் நிறத்தில் வைத்துக் கொள்ளுங்கள். வேதமுடையவர்களுக்கு மாறு செய்யுங்கள் என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே வேதமுடையவர்கள் முழுக்கால் சட்டை அணிகிறார்கள். வேட்டி அணிவதில்லை என்று நான் கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நீங்கள் முழுக்கால் சட்டையும் வேட்டியும் அணியுங்கள். வேதமுடையவர்களுக்கு மாறு செய்யுங்கள் என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே வேதமுடையவர்கள் காலுறை அணிகிறார்கள். காலணி அணிவதில்லை என்று நான் கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீங்கள் காலுறையும் காலணியும் அணியுங்கள். வேதமுடையவர்களுக்கு மாறு செய்யுங்கள் என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே வேதமுடையவர்கள் தங்களது தாடிகளை (ஒட்ட) கத்தரித்துக் கொள்கிறார்கள் மீசையை வளர விடுகிறார்கள் என்று நாங்கள் கூறினோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் உங்களது மீசைகளை நீங்கள் (ஒட்ட) கத்தரியுங்கள். தாடிகளை வளர விடுங்கள். வேதமுடையவர்களுக்கு மாறு செய்யுங்கள் என்று கூறினார்கள்
- நூல் : அஹ்மது 21252
இவ்வளவும் படித்துவிட்டு கீழே இருக்கும் படத்திலிருப்பவர் ஏன் தாடிக்கு கலர் அடித்திருக்கிறார் என்று கேட்டால் அதற்கு கம்பெனி பொறுப்பாகாது.

பிறை பார்த்தல், தாடி வைத்தல், குறிப்பிட்ட வகை உடை அணிதல் என்பவையெல்லாம் குறிப்பிட்ட நிலப்பகுதியில் வாழ்ந்த மக்களுக்காக, யூத கிருத்துவ நடைமுறைகளுக்கு மாற்றமாக கொண்டுவரப்பட்டவை என்றுதான் இவ்வகை ஹதீஸ்கள் கூறுகின்றன. இஸ்லாமிய நடைமுறைகள் அல்லாஹ்வால் முன்மொழியப்பட்டவையா? அல்லது யூத, கிருத்துவ நடைமுறைகளுக்கு மாற்றமாகக் கொண்டு வரப்பட்டவையா?
சிந்திக்கத் தெரிந்தவர்களுக்கு பல சான்றுகள் உள்ளன. எங்கேயோ படிச்ச மாதிரி இருக்கா? ஹி ஹி ...
டிஸ்கி: நான் தற்பொழுது வைத்திருக்கும் தாடிக்கும் இந்த ஹதீஸுக்கும் எவ்விதத் தொடர்புமில்லை என்பதை எனது தாடி மீது சத்தியம் செய்து தெரிவித்துக் கொள்கின்றேன்.
54 comments:
முதல் ஸ்மைலியை நான் போட்டுக்குறேன்.
:-)
இந்த தளம்னு தெரியாம வந்துட்டேங்க.
மன்னிச்சிகுங்க.
மன்னிச்சிகுங்க.
மன்னிச்சிகுங்க.
(உங்க பங்காளியோட போன பதிவ படிச்சதுக்கப்புறம் கூவத்துல குளிச்ச மாதிரியே ஒரு பீலிங். அதான்)
//நான் தற்பொழுது வைத்திருக்கும் தாடிக்கும் இந்த ஹதீஸுக்கும் எவ்விதத் தொடர்புமில்லை என்பதை எனது தாடி மீது சத்தியம் செய்து தெரிவித்துக் கொள்கின்றேன்//
நம்பிட்டேன் ....
மருதாணியை கொண்டு கலர் அடிப்பதில் பிரச்னை இல்லை, கருப்பு கலர் தன் அடிக்க கூடாது
abdoul razack said...
//மருதாணியை கொண்டு கலர் அடிப்பதில் பிரச்னை இல்லை, கருப்பு கலர் தன் அடிக்க கூடாது//
ஒருவர் தனது தாடிக்குக் கலர் அடிக்கலாமா, வேண்டாமா என்பதையும் அப்படி அடிப்பதாக இருந்தால் என்ன கலர் அடிக்கலாம் என்பதையும் அவர் முடிவு செய்யட்டுமே. யாரோ ஒருவரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கு ஏற்பவே உடை அணிவதும், தாடி வைப்பதும் பார்ப்பதற்கு நகைப்புக்குறியதாகவே இருக்கின்றது. அதிலும் அவருக்குப் பிடிக்காத ஒரு கூட்டத்தார் செய்வதற்கு மாற்றமாக செய்யுங்கள் என்று கூறுவது, என்ன வகை என்று நீங்களே உணர்ந்துகொள்ளுங்கள்.
//நம்பிட்டேன் ....//
:-)
டிஸ்கி போடுறதே நம்புறதுக்காகதானே!
இந்தப் பதிவையும் பாருங்க. எப்படியெல்லாம் சப்பைக்கட்டு கட்டுறாங்கன்னு.
தெரியாத விசயங்களை அறிந்தேன் மிக்க நன்றி..
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
யாழ்ப்பாணத்தில் உருவாகும் திரைப்படமும் அதன் பின்னணியும்.
அல்லாவுக்கு தாடி இல்லாத மூஞ்சிய்க் கண்டா பிடிக்காது.அதனால் தான் ஆண்கள் தாடி வைக்கிறார்கள்.பெண்களுக்கு தாடி வளராது.அதனால் மூஞ்சியை மூடி விடுகிறார்கள்.
//அல்லாவுக்கு தாடி இல்லாத மூஞ்சிய்க் கண்டா பிடிக்காது.அதனால் தான் ஆண்கள் தாடி வைக்கிறார்கள்.பெண்களுக்கு தாடி வளராது.அதனால் மூஞ்சியை மூடி விடுகிறார்கள்.//
இதெல்லாம் அல்லாஹ் சொல்லலே. யூதர்களும், கிருத்துவர்களும் செய்யுறதுக்கு நேர்மாறா செய்யனும்ன்னு வந்த நடைமுறை....
அப்படின்னு அந்த ஹதீஸ் சொல்லுது. உங்களுக்கு சந்தேகம் இருந்தா பீஜேகிட்ட கேளுங்க.
//முஸ்லிம்களில் பலரும் தாடி வைத்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.//
அவுங்க எங்கங்க தாடி வெச்சுருக்காங்க! தாடிதான் அவுங்கள வெச்சுருக்கு!
கடசில ஈரோட்டு ராமசாமியையும் முஸ்லீம்தான்னு சொல்லாம இருந்தா சரி!
//அவர்களுள் சிலர் தாடிக்கு கலரிங் செய்திருப்பதையும் பார்த்திருப்பீர்கள். //
பழைய படம் ஒன்றில் செந்தில் தலைக்கி பீளீச் செய்ததாக சொல்லுவார்! அந்த மாதிரி இருக்கும் அது!
//அவுலியாக்களில் ஒருவரான பீஜேயின்//
அவுலுயான்னா என்னங்க! வின் டீவீல புரோகிராம் பண்றவங்க பேரா!?
//பீஜேயின் தளத்தில் கேளுங்கள். பதில் கிடைக்கக்கூடும்.//
ஆமா! இழுத்து மூடிட்டு பரதேசம் போயிருவாங்க மாசக்கணக்குல
//அன்சாரிக் கூட்டத்தாரே (உங்கள் தாடிகளை) சிவப்பு நிறத்தில் அல்லது மஞ்சள் நிறத்தில் வைத்துக் கொள்ளுங்கள். //
சிவப்பு நிறத்துல வெக்கணும்னா ஈஸி கட்டைய எடுத்து தாவக்கட்டையோட சேத்தி நங்குன்னு ஒரு போடு போட்டா எல்லாம் செவப்பாயிடும்!
மஞ்சளுக்கு தான்! ஆங்! அதுக்கும் ஒரு வழி இருக்கு! ஆனா சொன்னா கவுச்சியாயிடுமே!
//அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நீங்கள் முழுக்கால் சட்டையும் வேட்டியும் அணியுங்கள். //
ஏன்! ராமராஜ் காட்டன்ஸ்ல கமிஷன் வாங்கிட்டாரா!
//நீங்கள் காலுறையும் காலணியும் அணியுங்கள்.//
அட! மொதல்ல உறை போட வேண்டிய எடத்துக்கு ஒழுங்கா போடுங்கப்பா
//உங்களது மீசைகளை நீங்கள் (ஒட்ட) கத்தரியுங்கள். தாடிகளை வளர விடுங்கள். //
அடடா! இதுவல்லவா புரட்சி! ஆமா! கிரிஸ்டியன்ஸ்லாம் வாய்ல சாப்பிடறாங்களாம்! இதுக்கு என்ன பண்றது!?
//இவ்வளவும் படித்துவிட்டு கீழே இருக்கும் படத்திலிருப்பவர் ஏன் தாடிக்கு கலர் அடித்திருக்கிறார் என்று கேட்டால் அதற்கு கம்பெனி பொறுப்பாகாது.//
அது குளிக்காம இருந்ததால அப்பிடி ஆயிருக்கும் தல!
//எனது தாடி மீது சத்தியம் செய்து தெரிவித்துக் கொள்கின்றேன்.//
ஏய் டண்டனக்கா! ஏய் ஏய் டணக்குனக்கா!
//கடசில ஈரோட்டு ராமசாமியையும் முஸ்லீம்தான்னு சொல்லாம இருந்தா சரி//
அந்தக் கதை தெரியாதா? அவரு முஸ்லிமா மாறியிருப்பாறு, ஆனா அதுக்குள்ளே இறந்துட்டாரு அப்படின்னு ஒரு அல்லக்கை சொன்னிச்சு. லிங்க் தேடி தர்றேன்.
//அவுலுயான்னா என்னங்க! வின் டீவீல புரோகிராம் பண்றவங்க பேரா!//
அவுலியான்னா லோக்கல் இறை தூதர் மாதிரின்னு வச்சிக்கிங்களேன்.
விண் டிவி அக்கப்போர்தான் ஆறு மாச ஆய்வுல நாறுதே. இன்னுமா?
//ஆமா! இழுத்து மூடிட்டு பரதேசம் போயிருவாங்க மாசக்கணக்குல//
முன்னாடி அவங்களா வந்து லிங்க் கொடுப்பாங்க. இப்ப நம்ம கொடுத்தாலும் இந்தப் பக்கமே வர்றதில்லே.
//அது குளிக்காம இருந்ததால அப்பிடி ஆயிருக்கும் தல//
பீஜே ஓய்வுக்குப் போனதுக்குக் காரணமே இவர்தான் தல. இவர் பேரு ஜமாலி. அல்லாஹ்வுக்கு உருவம் இல்லை அப்படிங்குற க்ரூப் இவர். இவர்கூட விவாதம் பண்ணினதுக்கு அப்புறம்தான் பீஜே ஓய்வுக்குப் போறேன்னு அறிவிச்சாரு.
அய்யய்யோ. தப்பா டைப் பண்ணிட்டேன். ஓய்வு அப்படிங்குற எடத்துல எல்லாம், ஆய்வு அப்படின்னு போட்டு படிச்சிக்குங்க.
இப்படி குண்டக்க மண்டக்க எழுதினா ஒரு மனுசன் எப்படித்தான் விமர்சனம் எழுதுறது?
ராஜன் ரொம்ப புத்துணர்ச்சியோடு இருப்பார் போலிருக்கு?
.
அமெரிக்கா அனைத்தையும் இங்கிலாந்திற்கு எதிராக திட்டமிட்டே செய்ததாக ஒரு பேச்சு உண்டு.
1. இங்கிலாந்து கார்களில் வலப்புறம் இரைவர் சீட் என்றால் அமெரிக்காவில் இடப்புறம். அதற்கு ஏற்ப ரோடுகளும்.
2. மின்சாரட்ந்தின் வோல்டேஜ்
3. மின்சார ப்ளக் பாயிண்டுகள்
4. பூட்டு சாவி (சாவியைத் தலிகீழாகப் போடவேண்டும்)
5. பிரதமர் என்றால் இஙே பிரசிடெண்ட்
இப்படி பல தியரிகள் உண்டு.
***
ஆன்மீக வியாபாரத்திலும் ஒவ்வொரு குரூப்பிற்கும் தனி அடையாளம் வேண்டும். அது அவசியம் எதிர் அணியில் இருந்து மாற்றாய் இருக்க வேண்டும். குழப்பம் வந்திவிடக்கூடாது அல்லவா? களத்தில் விளையாடும் இரண்டு புட்பால் அணிகளிம் பச்சை டவுசரும் மஞ்சள் சட்டையும் போட்டால் குழப்பம் வரும் அல்லவா? அது போலத்தான் இந்த அடையாளங்களும்.
***
நல்ல வேளை மதங்களுக்குள் மனிதன் எப்படிச் சாப்பிடவேண்டும் என்றவிசயத்தில் ஒற்றுமை உள்ளது. இல்லை என்றால் பாவம் மதவாதிகள்.
**
"கும்மி" - க்கான கேள்வி.
அன்புள்ள கும்மி (அன்புள்ள அல்லி என்ற ராணி வார இதழ் கேள்வி பதில் போல படிக்கவும்)
இந்தியாவில் (தமிழகத்தில்) இஸ்லாமியர் அணியும் பின்னப்பட்ட தொப்பி எப்படி வந்தது? அரபிக்கள் அப்படி அணிவது இல்லையே? அவர்கள் தலையைப் போர்த்தி ஒருவிதமான துணியல்லவா அணிகிறார்கள்? இந்தியாவுக்கு என்று தனி ஹதீஸ் உள்ளதா?
**
//இப்படி குண்டக்க மண்டக்க எழுதினா ஒரு மனுசன் எப்படித்தான் விமர்சனம் எழுதுறது?//
ஓ. அதுனாலதான் எல்லோரும் பின்னூட்டம் போடாம போயிட்டாங்களா?
//களத்தில் விளையாடும் இரண்டு புட்பால் அணிகளிம் பச்சை டவுசரும் மஞ்சள் சட்டையும் போட்டால் குழப்பம் வரும் அல்லவா? அது போலத்தான் இந்த அடையாளங்களும்//
இவை வெறும் அடையாளங்கள் என்னும் அளவில் இருந்தால் யாரும் எதையும் பொருட்படுத்தப்போவதில்லை. ஆனால், இத்தகைய அடையாளங்களே சிறந்தவை; மற்ற அடையாளங்கள் எல்லாம் கீழ்த்தரமானவை என்னும் ரீதியில் பேசும்போது, அவை எப்படித் தோன்றின என்று சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
இதே பதிவில் நான் இட்ட பின்னூட்டம் ஒன்றில், அவர்கள் தாடி வைப்பதற்கு கூறும் காரணங்களின் லிங்கினைக் கொடுத்துள்ளேன். தாடி வைத்தால்தான் அவன் முழுமையான ஆணாம். இல்லாவிட்டால், ஆணுக்குரிய சிலவற்றை இழந்துவிடுகின்றானாம்.
இங்கே இன்னொன்றும் நினைவுக்கு வருகின்றது. சிறுவயதில் சலாம் கூறுவதன் சிறப்பைப் பற்றி விளக்கும்போது, 'வணக்கம்' என்னும் சொல் இஸ்லாமியர்கள் உபயோகிக்கவே கூடாது என்னும் ரீதியில் போதித்தனர்.
.
//அன்புள்ள கும்மி//
இது வேறையா?
:-)
.
இந்தியாவிற்கு என்று தனி ஹதீஸ் கிடையாது. தொப்பி அணிவது பற்றியே ஒவ்வொரு அமைப்புக்கும் தனித்தனி கருத்துகள் உள்ளன. சில அமைப்புகள் தொப்பி அணிவதை கட்டாயப்படுத்துகின்றன. சில அமைப்புகள் தொப்பி அணியக்கூடாது என்று கட்டாயப்படுத்துகின்றன.
ஆனால், பின்னப்பட்ட தொப்பி குறித்து நீங்கள் கூறிய விஷயத்தை நான் இப்பொழுதுதான் யோசித்துப் பார்க்கின்றேன். (எங்கள் பகுதியில்) என் தாத்தா காலத்து நபர்கள் எல்லாம், இப்பொழுது உள்ளது போன்ற பின்னப்பட்ட தொப்பி அணிவதில்லை. வெல்வெட்டாலான துணியின் உள்ளே அட்டை வைத்து தைக்கப்பட்ட வட்டவடிவ தொப்பிதான் அணிந்து வந்தனர். அதிலும் தொப்பியின் உச்சியில், ஒரு தொங்கட்டான் போன்ற ஒன்று இருக்கும். அடுத்தத் தலைமுறையினரில் பெரும்பாலானவர்கள் அணிந்த தொப்பி, வட்ட வடிவத்தை இழந்து தொங்கட்டானும் இன்றி இருந்தது. அப்பொழுது இருந்த ஹஜ்ரத்களும் அது போன்ற தொப்பியே அணிந்து வந்தனர். இப்பொழுது பரவலாக வெள்ளை நிற பின்னப்பட்ட தொப்பி உபயோகிக்கப்படுகின்றது.
நகரின் முக்கிய பள்ளிவாசல்களில், இருக்கும் தற்காலிக தொப்பிகள் பிளாஸ்டிக்கில் (பின்னப்பட்ட தொப்பி போன்றே) வந்துள்ளன.
.
// கும்மி...
ஆனால், பின்னப்பட்ட தொப்பி குறித்து நீங்கள் கூறிய விஷயத்தை நான் இப்பொழுதுதான் யோசித்துப் பார்க்கின்றேன். (எங்கள் பகுதியில்) என் தாத்தா காலத்து நபர்கள் எல்லாம், இப்பொழுது உள்ளது போன்ற பின்னப்பட்ட தொப்பி அணிவதில்லை. //
அதே.. மற்ற நாடுகளில் நான் பர்த்தது இல்லை.
// வெல்வெட்டாலான துணியின் உள்ளே அட்டை வைத்து தைக்கப்பட்ட வட்டவடிவ தொப்பி..தொப்பியின் உச்சியில், ஒரு தொங்கட்டான் போன்ற ஒன்று இருக்கும். //
இது காஸ்மீர் பண்டிட்டுகளின் வழக்கமும் கூட. நேபாளில் கூட உண்டு என்று நினைக்கிறேன். வெல்வெட்டாலான துணி தொப்பி....-> மண் சார்ந்தது ..மதம் சார்ந்தது அல்ல.
**
பின்னப்பட்ட தொப்பு இன்னும் புரியாத புதிர்தான் எனக்கு.
.
.
//கும்மி....
இங்கே இன்னொன்றும் நினைவுக்கு வருகின்றது. சிறுவயதில் சலாம் கூறுவதன் சிறப்பைப் பற்றி விளக்கும்போது, 'வணக்கம்' என்னும் சொல் இஸ்லாமியர்கள் உபயோகிக்கவே கூடாது என்னும் ரீதியில் போதித்தனர். //
:-((((((
மதம் என்பது ஒரு கட்டுமானம்.
கடவுள் மற்றும் தூதர்கள் தாண்டி அவர்கள் இருந்த மண்ணின் பழக்கங்களையும் வலிந்து திணித்துக்கொள்வது அந்த கட்டுமானத்தின் ஒரு கூறு.
சலாம் அலைக்கும் / அலைக்கும் சலாம் எனது அதன் அர்த்தம் தாண்டி ஒரு மதக் குறியீடாகப் போய்விட்டது.
அலைக்கும் சாலாம் / சலாம் அலைக்கும் என்ற இந்த அரபி வார்த்தையை எந்த மத்தினவரும் பயன்படுத்தாலம். அதன் உண்மையான அர்த்தம் தெரிந்தால்.
அது போல அல்லா என்பது அரபியில் கடவுள் என்பதே.
"எனது அல்லா முருகன்" என்று சனாதன வர்ணாசிரம மதத்தினரும்,
"எனது அல்லா இயேசு" என்று கிறித்துவரும்
"எனது அல்லாவிற்கு உருவம் இல்லை பெயரும் இல்லை"
என்று இஸ்லாமியரும் பயன்படுத்தலாம்.
ஆனால் நடைமுறையில் "அல்லா" என்ற அரபி வார்த்தை இஸ்லாம் என்ற ஒரு மதத்திற்கு மட்டும் உரியதாகப் போய்விட்டது. :-(((
தமிழில் இருக்கும் அதே "கடவுள்" என்ற வார்த்தையோ அல்லது ஆங்கிலத்தில் இருக்கும் "God" என்ற வார்ததையோ எல்லா மததினருக்கும் பொதுவாய் இருக்கும்போது, அரபி அல்லா வார்த்தை மட்டும் இஸ்லாமிற்கு மட்டும் என்றாகிவிட்டது. இது கட்டமைக்கபட்ட அடையாளம் மொழிக்கு இழப்புதான். :-(((
ஏன் என்றால் , அந்த அரபி மொழி இஸ்லாத்திற்கும் நபிக்கும் முன்னரே இருந்த தொன்மையான ஒன்று.
***
எனது பெயரை அரபியில் எழுதி வைத்தாலே என்னை முஸ்லீமாகப் பார்க்கிறார்கள். ஆனால் ஆங்கிலத்தில் எழுதினால் கிறிஸ்டியனாகப் பார்ப்பது இல்லை. இதன் அரசியல் புரிந்தால் எல்லாம் புரியும்.
.
@கல்வெட்டு
வழக்கம்போல் சிறப்பான கருத்துக்களை கூறியுள்ளீர்கள்.
//கடவுள் மற்றும் தூதர்கள் தாண்டி அவர்கள் இருந்த மண்ணின் பழக்கங்களையும் வலிந்து திணித்துக்கொள்வது அந்த கட்டுமானத்தின் ஒரு கூறு.//
அவை அந்த மண்ணுக்குரிய பழக்க வழக்கங்கள் என்பதை விடுத்து உலகம் முழுமைக்குமே என்று கூறுவதும், அந்த பழக்க வழக்கங்கள் மட்டுமே உயர்ந்தவை என்றும் கூறும்போதுதான் மனிதர்களிடையே துவேஷம் வளர்கின்றது.
ஹதீச படிச்சதுல்ல மீசை வச்சுக்கலாமுன்னு தெரியுது. (என் புரிதல் சரியா) பின் ஏன் சிலர் தாடியை வைக்கறப்போ மீசையை மழித்து விடுகிறார்கள். ஈராக்காரனுக்கு மீசைன்னா உசிராமே.
ஏண்டா தாடி & முடி செம்மட்டை கலர்ல இருக்குதுன்னு பலமுறை நினைச்சதுண்டு. எல்லாம் ஹதீசால தான் என்பது இப்போ புரியுது. புரிய வைத்ததிற்கு நன்றி.
//ஹதீச படிச்சதுல்ல மீசை வச்சுக்கலாமுன்னு தெரியுது. (என் புரிதல் சரியா) பின் ஏன் சிலர் தாடியை வைக்கறப்போ மீசையை மழித்து விடுகிறார்கள்//
உங்கள் மீசைகளை கத்திரியுங்கள் என்னும் வாசகத்தின் புரிதலைப் பொறுத்து. ஒரு சிலர் முழுமையாக கத்திரிக்க வேண்டும் என்று எண்ணிக்கொள்வார்கள். ஒரு சிலர் சிறிதளவு கத்திரிக்கவேண்டும் என்று எண்ணிக்கொள்வார்கள்.,
//எல்லாம் ஹதீசால தான் என்பது இப்போ புரியுது.//
:-)
.
.
மயிரும் மயிர்பராமரிப்பு சார்ந்த நம்பிக்கைகளும் ஏறக்குறைய எல்லா மதத்திலும் ஒரு அடையாளமாக உள்ளது.
1.சனாதன வர்ணாசிரமக் குடுமி.
2.இஸ்லாம் தாடி மீசை வழித்தல் .பெண்கள் தலை மயிரை மூடி மறைத்தல்.
3. யூதர்களின் தாடி மற்றும் ஒருவகையான தொப்பி.
4. பெளத்தத்தின் மொட்டை
5. சீக்கியர்களின் நம்பிக்கை கடவுளின் கொடையான மயிரை வெட்டக்கூடாது.
சீக்கியர்களின் நம்பிக்கை
Five_Ks ல் ஒன்றான Kesh
http://en.wikipedia.org/wiki/Five_Ks
Kesh – uncut hair. Sikhs believe that hair, like everything else, is a gift from God, therefore it remains uncut.
.
பெண்களுக்கும் இது பொதுவான விதி. மத அடிப்படைவாத சீக்கியப் பெண்கள் கால் , அக்குள் முடி நீக்கம் செய்வது இல்லை.
http://www.topix.com/forum/religion/sikh/T4MNAED010D056G0P
(எல்லாமே கடவுளின் கொடை என்றால் ஏன் நகத்தை மட்டும் வெட்டிக் கொள்கிறார்கள் என்று தெரியவில்லை - செலக்டிவ் கொடை??)
-----------
மயிர்: - வசைச் சொல் அல்ல . "சோறு" என்று சொல்வது கேவலம் "சாதம்" என்று சொல்வது அந்தஸ்தது என்பது போல சில மொள்ளமாறிகள் தமிழகத்தில் இதை வசைச் சொல்லாக மாற்றி விட்டார்கள். :-((
..
http://www.vinavu.com/2010/12/21/chennai-book-fair/
கீழைக்காற்று: வினவு-புதிய கலாச்சாரம் நூல் வெளியீட்டு விழா!
நூல் வெளியிடுவோர்:
ஓவியர் மருது
மருத்துவர் ருத்ரன்
சிறப்புரை: “படித்து முடித்த பின்…”
தோழர் மருதையன், பொதுச் செயலர், மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு
நாள்: 26.12.2010
நேரம்: மாலை 5 மணி
இடம்: செ.தெ. நாயகம் தியாகராய நகர் மேல்நிலைப்பள்ளி, வெங்கட் நாராயணா சாலை, தியாகராய நகர், சென்னை
அனைவரும் வருக !
"இந்தப் பதிவையும் பாருங்க. எப்படியெல்லாம் சப்பைக்கட்டு கட்டுறாங்கன்னு."
உங்க ராஜன் கல்யாண சப்ப கட்டை விட இது ஒன்றும் பெரிய விசயமில்லை. கும்மி எனக்கு தெரியாம தான் கேக்குறேன் வடிவேலு மாதிரி அடி வாங்கி விட்டு வலிக்காத மாதிரியே நடிக்க முடியுது.?
ராஜன் கலியாணத்துக்கு அப்புறம் உங்களுக்கு எந்த மதத்தை பற்றியும் குறை பேசும் அருகதை கிடையாது.
வால்பையன் ஹோட்டல் ல மாவு அட்டுரதுக்கு ஆள் இல்லையம்.போய் அந்த வேலையாவது உருப்படியா செய்ங்க
@ஜே
இஸ்லாமிய நடைமுறைகள் யூத, கிறித்துவ நடைமுறைகளுக்கு மாற்றமாகவே வந்தன என்பதை ஒத்துக்கொள்கின்றீர்களா?
முந்தைய பதிவுகளில் நாங்கள் முன்வைத்த கேள்விகள் ஏதேனும் ஒன்றிற்காவது நீங்கள் உருப்படியாக பதிலளித்துள்ளீர்கள் என்று ஒரு பின்னூட்டத்தை காட்டுங்களேன்.
--
பாவம் இப்படி போலி ப்ரோபைல்ல வர்ற அளவுக்கு ஆயிருச்சே உங்க நிலைமை?
" பாவம் இப்படி போலி ப்ரோபைல்ல வர்ற அளவுக்கு ஆயிருச்சே உங்க நிலைமை?"
அரண்டவன் கண்ணனுக்கு இருண்டதெல்லாம் பேய் போல தெரியுமாம், அதுபோல் யார் இங்கு என்ன கமன்ட் எழுதினாலும் அவன இருக்குமோ இல்லை இவன இருக்குமோ என்று நினைக்கத்தான் தோன்றும். உங்களுக்கு மண்டையில் மசாலா இருந்தால் என்னுடைய i p அட்ரஸ்ஸை வைத்து " அவான நீ " என்பதை கண்டு அறிந்து கொள்ளுங்கள்.
யாரை பார்த்தாலும் " அவனா நீ" என்று கேட்கும் அளவிற்கு உங்களை இந்த பரிதப நிலைக்கு ஆக்கிய அந்த நபர் யார் என்பதை தங்கள் தெரிய படித்தினால் மிகவும் வசதியாக இருக்கும்.
@ஜே
உங்களைப் பற்றிய எந்த தகவலுமின்றி வந்தால் அது போலி ப்ரோபைல் என்றுதான் தெரியும்.
இன்னும், பதிவில் பேசியிருக்கும் விஷயத்திற்குள் நீங்கள் செல்லவேயில்லையே? உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்த்து.
//மயிர்: - வசைச் சொல் அல்ல . "சோறு" என்று சொல்வது கேவலம் "சாதம்" என்று சொல்வது அந்தஸ்தது என்பது போல சில மொள்ளமாறிகள் தமிழகத்தில் இதை வசைச் சொல்லாக மாற்றி விட்டார்கள். :-((//
முடி, உடம்பில் இருந்து தனியாக வந்துவிட்டால்/வெட்டப்பட்டால்/உதிர்ந்தால் அதன் பெயர் 'மயிர்' என்று எங்கோ படித்த நினைவு. உண்மையா என்று தெரியவில்லை.
//முடி, உடம்பில் இருந்து தனியாக வந்துவிட்டால்/வெட்டப்பட்டால்/உதிர்ந்தால் அதன் பெயர் 'மயிர்' என்று எங்கோ படித்த நினைவு.//
மயிர் என்பதை வசைச்சொல்லாக்குபவர்களின் வேலையாக இருக்கக்கூடும். "அஞ்சாறு மீசைமயிர்" என்று ஒரு பழந்தமிழ் பாடலில் (திரைப்பாடல் அல்ல) படித்திருக்கின்றேன். முகத்தில் இருக்கும்போதும் அது மயிர் என்றே அழைக்கப்பட்டுள்ளது; உதிர்ந்தபின்பு அல்ல.
(பாடல் பற்றி தகவல் தெரிந்தவர்கள் உதவவும்)
\\ உங்களைப் பற்றிய எந்த தகவலுமின்றி வந்தால் அது போலி ப்ரோபைல் என்றுதான் தெரியும்.//
மக்களே ஆல் இன் ஆல் அழுக்கு ராஜா" கடைக்கு வரும் அனைவரும் மறக்காமல் கீழே கொடுக்க பட்ட எதாவது ஒன்றை காட்டி விட்டு வர வேண்டும் என்று கேட்டு கொள்ள படுகிறார்கள்.
1 வாக்களர் அடையாள அட்டை
2 . ஓட்டுனர் உரிமம்
3 ரேஷன் அட்டை
4 . வங்கி கணக்கு அட்டை
5 தாசில்தார், கிராம அலுவலர் ஒப்புகை சீட்டு.
6 கடவு சீட்டு
போன்றவற்றை கும்மி அவர்களிடம் காட்டி விட்டு மறு மொழி இடவும் இல்லை என்றல் உங்களை அவர் " அவனா நீ " என்று கேட்டுவிடுவார். என்பதை சைக்கில் கடை சார்பாக தெரிய படுத்தி கொள்கிறோம்.
\\இன்னும், பதிவில் பேசியிருக்கும் விஷயத்திற்குள் நீங்கள் செல்லவேயில்லையே? உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்த்து.//
சைக்கில் கடை ரொம்ப நாட்களாக காலியா இருக்கே என்று மயிர் பத்தி எழுதி ஹிட்ஸ் வாங்கலாம் என்று எதிர் பார்த்தல் இப்படி தான் இருக்கும்
@ஜே
இப்பொழுதும் கூட பதிவு பற்றி பேச முன்வராததற்கு நன்றி.
//சைக்கில் கடை ரொம்ப நாட்களாக காலியா இருக்கே என்று மயிர் பத்தி எழுதி ஹிட்ஸ் வாங்கலாம் என்று எதிர் பார்த்தல் இப்படி தான் இருக்கும்//
மத்தவங்க பாக்கறாங்களோ இல்லயோ; உங்கள மாதிரி ஆளுக தெனமும் எட்டிப் பாக்கற வரைக்கும் எங்களுக்கெதுக்கு கவலை!
raasaakkalaa namma kadai pakkamum vaangaiyyaa...
http://allinaall.blogspot.com/2010/12/all-in-all-counting-start.html
வீல் நிமித்த ! பெண்டெடுக்க ! நானும் ஒரு கடை திறந்திருக்கேன் ராசாக்களா, வந்து ஆசிர்வாதம் பண்ணிட்டு போங்க....ஏன் ராசா இவ்வளவு நாளா Comment moderation இல்லையே? இப்ப மட்டும் எதுக்கு ராசா அதெல்லாம்.
//raasaakkalaa namma kadai pakkamum vaangaiyyaa...//
கடைய தொறந்துட்டீங்க. அப்படியே கொஞ்சம் எங்க பதிவுகளுக்கு பதில் சொல்ல முயற்சி பண்ணுங்க.
@ராவணன்
வார்த்தைகளில் இருக்கும் சில வசவுகளுக்காக உங்கள் பின்னூட்டத்தை பதிப்பிக்கவில்லை. மன்னிக்கவும். தவறாக எண்ணாதீர்கள். (முதல் வார்த்தையை மட்டும் நீக்கிவிட்டு வேண்டுமானால் பதிப்பிக்கவா?)
\\ .ஏன் ராசா இவ்வளவு நாளா Comment moderation இல்லையே? இப்ப மட்டும் எதுக்கு ராசா அதெல்லாம்.//
இப்ப தான் அவங்க டவுசர் டர்ர்ர் னு கிழிஞ்சு தொங்குதே. அத கோணி ஊசி வச்சி தைக்க வேண்டாமா? அதுக்கு தான் இந்த Comment moderation
\\ இப்பொழுதும் கூட பதிவு பற்றி பேச முன்வராததற்கு நன்றி.//
சட்டில இருந்த தானே அகப்பையில் வரும். அங்க தான் ஒன்னுமே இல்லையே....அப்புறம் எதுக்கு இந்த அலப்பறை?
உங்க பதிவ படிச்சா வெறும் " மயிரும் மட்டையும்" தான் வருது (உ ம்- மேழ்மருவதூர் மயிரண்டிக்கு மஞ்ச தண்ணி, தாடி மயிர், பின்னுட்டங்களில் அனேக இடங்களில் etc etc )
\\மத்தவங்க பாக்கறாங்களோ இல்லயோ; உங்கள மாதிரி ஆளுக தெனமும் எட்டிப் பாக்கற வரைக்கும் எங்களுக்கெதுக்கு கவலை!//
இந்த நாற பொழப்பு பிளைக்குரதுகு பேசாம நீங்க மற்றும் உங்க குருப் போய் எவனாவது தாடி எடுக்க வந்தா அவனுக்கு தாடி எடுத்து காசாவது பாக்கலாம்.
//வால்பையன் ஹோட்டல் ல மாவு அட்டுரதுக்கு ஆள் இல்லையம்.போய் அந்த வேலையாவது உருப்படியா செய்ங்க//
மாவு ஆட்டுறதுக்கு ஆள் இருக்கு, என் **** ஆட்டுறதுக்கு தான் ஆள் இல்லை, உங்க கடவுள் சும்மா இருந்தா வரச்சொல்லுங்க ஜே!
பதிவு சம்பந்தமாக பேசுவதில்லை என்பதை கொள்கையாக வைத்திருக்கும் ஜேக்களுக்கு நன்றி.
//நான் தற்பொழுது வைத்திருக்கும் தாடிக்கும்//
:)
Post a Comment