Thursday, June 3, 2010

பூக்காரி - பைத்தியகாரத்தனமான பாலிடிக்ஸ்



நர்சிம் - இன் கேவலமான ஒரு பதிவு; அதைத் தொடர்ந்து நடந்த களேபரங்கள் - இது வரையிலும் வெளிவந்துள்ள பதிவரசியல் காய் நகர்த்தல்கள் என இந்த வாரத்தில் அதகளப் பட்டன தமிழின் முன்ணணி திரட்டிகள்....

இறுதியில் மலிவாக நீர்க்கச்செய்யப்பட்ட விடயத்தின் ஒரு டிரைலர்...


நர்சிம் மன்னிப்பு கேட்டு போட்ட பதிவப் பாக்கணுமே யப்பா! இங்கே பதினஞ்சு நாள் ஆகலாம் படிச்சு முடிக்க! ”எல்லாத்துக்கும் வணக்கம் பந்தி பின்னாடி நடக்குது சாப்புட்டு போங்க”ங்கற ரேஞ்சுல ஒரு நாலு வரி... அடுத்த பக்கம் அண்ணன் உண்மைத் தமிழன்; மேட்டருக்கு யாரு வேணா பஞ்சாயத்து பண்ணலாம் ஆனா என்னோட எதிரிக மட்டும் பண்ண உடக் கூடாது... அல்லாரும் வினவ எதிர்த்து போராடுவோம்னு லூசுத்தனமா சொல்லிட்டு இருக்காரு... அது போக ரெண்டு பேரையும் பேச வைக்கறதா ஒரு அண்ணா மறுமலர்ச்சித் திட்டமும் சொல்லி இருக்காரு.இங்கே

இன்னொரு சைடு ஷோபா ஷக்தி இங்கே இன்னைக்கி நல்ல நாட்டியம் பேசும் வினவு லீனா மணிமேகலையை அன்னைக்கி வன்புணர்ச்சி செய்தது நியாயம்னா இதுவும் நியாயம் தான்ங்கற தொனியில அவர் ஒரு கோல போட்டு இருக்காரு....

பைத்தியக் காரன்இங்கே பிரச்சனைக்குரிய வினவு பதிவை எழுதியதே அவர்தான் என்ற ஊகங்கள் நிழலாடும் நிலையில் ஆதரிப்போம் வாருங்கள் வினவை ! என பதிவிட்டு இருக்கிறார்.

அடுத்து சுகுணா திவாகர் ! எப்பிடி நைனா இப்பிடி நடிக்கற என பைய்த்தியக்காரனை வினவி இட்ட பதிவில்
இங்கேபைத்தியக்காரன் எழுதிய ரஃப் டிராப்ட் என டிங்கரிங் செய்யப்படாத கட்டுரையை பிரசுரித்திருக்கிறார்.

நெக்ஸ்டு மங்களூர் சிவா!இங்கே பெண் பதிவர்களிடம் ‘ஜொள்ளு’ விடுவதில் யார் முதன்மையானவர் என்று போட்டி வைத்தால் மங்களூர் சிவா உட்பட பலருக்குள் அடிதடியே நிகழும். // மேற்படி லிஸ்டில் தன்னை லாஸ்டாக சேர்த்ததன் காரணத்தை வினவு கண்டிப்பாக சொல்ல வேண்டுமென்று கேட்டு பதிவிட்டு இருக்கிறார். அதில் அவரது கடுங்கோபம் எரிமலையாகக் கொப்பளிக்கிறது. வினவு இதற்கு பதிலளிக்க கடமைப் பட்டிருப்பதாக வால் பையன் வேறு பரிந்துரை செய்திருக்கிறார். அவரும் தன் பங்கிற்கு நசுங்கும் சொம்புகள் என்ற தலைப்பில்இங்கே குமுறித் தள்ளியாகிவிட்டது.

இங்கு இந்த பிரச்சனையை வைத்து பெருந்தலைகள் பல இங்கு தத்தம் வலையுலக எதிரிகள் மீதான பழய பகையுணர்வைக் கொட்டி பகடை ஆடியது தான் மிச்சம். ஒருவன் மாட்டிக் கொண்டால் வறுத்தெடுப்பது என்பது இங்கு இயல்பான ஒன்று தான் ஆனால் அதை வைத்து டைமிங்காக அரசியல் செய்திருக்கும் ஒவ்வொருவரையும் பார்க்கையில் பிரமிப்பாகவே உள்ளது.

இது பதிவுலகில் ஜென்மப் பகைகளை தீர்த்துக்கொள்ளும் சிலரின் நாடக வசன கதையாக இருக்கும் பட்சத்தில் பலிகடாவானது நர்சிம்மோ , முல்லையோ என்பதை விட ஏதுமறியாமல் தமிழில் டைப்ப கூட தெரியாமல் திரட்டிகள் மூலம் வாசிக்கும் எண்ணற்ற வாசகர்களே.


இது நர்சிம் மீதான பகை தீர்க்கும் முயற்சி என பைத்தியக்காரன் சொல்லக்கூடின் அங்கு அனாவசியமாக மங்களூ சிவா, குசும்பன் என கலந்து கட்டி வன்மம் தீர்க்க வேண்டிய அவசியமென்ன?

இவை உண்மையாகின் நர்சிம்மின் புனைவுக்கும் இவரது பகடைக்கும் யாதொரு வித்யாசமும் காண இயலவில்லை என்னால்.

சில வருடங்களுக்கு முன்பு வரை ஆசைக்கு பேப்பரில் எழுதி பொட்டிக்குள் வைத்துக்கொண்டிருந்த எழுத்துக்களை இன்றைய வலையுலகில் சில நூறு பேர் படிக்கிறார்கள் என்பதால் உச்சத்தில் ஏறி அமர்ந்த கொழுப்பின் விளைவே இது! அன்று மலம் துடைக்க மட்டும் பயன் பட்டிருக்கக் கூடிய காகிதத்தை இன்று மகோன்னத படைப்பாய் கருதும் பதிவர்களின் தோற்ற மாயை படிப்பவர்களை வாசகனாகவும் தன்னை மாபெரும் எழுத்தாளனாகவும் கற்பிதம் செய்யக் கற்றுக் கொடுத்திருக்கிறது.

கால் நிலத்தில் பட நடக்க மறந்து விட்டனர் இன்று பாவம்... சும்மா இருக்கும் போதே இந்தக் கூத்தெனில் இனி சங்கம் கழகமெல்லாம் வந்தால் எப்படி இருக்கும்? இன்றைய நாளிலேயே பல பதிவர்களுக்கு பதிவர் என்ற பதமே பிடிப்பதில்லை பெயருக்குமுன் எழுத்தாளர் என சேர்த்திக் கொண்டால்தான் சோறே இறங்குகிறது போல.

முன்பொருமுறை சாரு நிவேதிதா என்பவன் “வலைப் பதிவர்கள் எழுத்தாளர்கள் அல்ல என சொன்னதை மெய்ப்பிக்கவோ; அல்லது எழுத்தாளர்களுக்கு கொஞ்சமும் சளைத்தவர்களல்ல என பாலிடிக்ஸ் செய்யவோதான் இவ்வளவும் நடந்தேறு கின்றன போலும்! 

ஒரு சில நாட்கள் சென்ற நிலையில் இன்றைக்கு பூக்காரி மேட்டர் அடைந்திருக்கும் பரிணாம மாற்றம் அபரிமிதமானது. அடிச்ச காத்துல துணி உலர்த்திய பதிவர்கள் மத்தியில் காத்தாடி வெச்சு கரண்ட் எடுக்கும் கில்லாடிகளிடமிருந்து வலையுலகம் இனி கற்க வேண்டியவை ஏராளம் ஏராளம்.

49 comments:

ராஜன் said...

கெழவனுக்கு இங்க வந்து ஆராச்சும் பொறந்த நாள் வாழ்த்து சொல்லிகிட்டு இருந்தா நல்லா இருக்காது ஆமா!

இராஜ ப்ரியன் said...

//இன்றைய நாளிலேயே பல பதிவர்களுக்கு பதிவர் என்ற பதமே பிடிப்பதில்லை பெயருக்குமுன் எழுத்தாளர் என சேர்த்திக் கொண்டால்தான் சோறே இறங்குகிறது போல.//
இன்னாயா இப்புடி பொசுக்கின்னு நெசத்த சொல்லிப்புட்ட :P

இராஜ ப்ரியன் said...

//சில வருடங்களுக்கு முன்பு வரை ஆசைக்கு பேப்பரில் எழுதி பொட்டிக்குள் வைத்துக்கொண்டிருந்த எழுத்துக்களை இன்றைய வலையுலகில் சில நூறு பேர் படிக்கிறார்கள் என்பதால் உச்சத்தில் ஏறி அமர்ந்த கொழுப்பின் விளைவே இது!//

மைக் ஒன்
மைக் டூ
இது என்ன சொல்லலன்னு நெனைக்கறேன்.

ராஜன் said...

//இன்னாயா இப்புடி பொசுக்கின்னு நெசத்த சொல்லிப்புட்ட :P //


தெரியாம சொல்லிட்டேன் தல !

இராஜ ப்ரியன் said...

போடோவில் இருப்பது யாரு?

ராஜன் said...

//போடோவில் இருப்பது யாரு? //

யோவ் அனுப்புனதே நீதானயா!

கும்மி said...

பேட்ஜ்ல சந்திப்பிழை இருக்கு தல!

கும்மி said...

ஒட்டகக் கதை பற்றிய பதிவுக்கு லிங்க் குடுக்கலையே!

//அடிச்ச காத்துல துணி உலர்த்திய பதிவர்கள் மத்தியில் காத்தாடி வெச்சு கரண்ட் எடுக்கும் கில்லாடிகளிடமிருந்து வலையுலகம் இனி கற்க வேண்டியவை ஏராளம் ஏராளம்//

ஒட்டகமும் இதுல சேர்த்தி

ராஜன் said...

//ஒட்டகக் கதை பற்றிய பதிவுக்கு லிங்க் குடுக்கலையே!//

இப்பிடி நாலு பேரு லின்க்கு குடுப்பாங்கங்கறதுதான் அதோட ஐடியாவே!

ராஜன் said...

//பேட்ஜ்ல சந்திப்பிழை இருக்கு தல!//


எவ்வளவு பிழையோ அதுக்கு தகுந்தாற்போல் கும்மியை குறைத்து கொட்டுங்கள் தல ~!

சூரியன் said...

happy birthday kalaingar ayya

:)

சூரியன் said...

ராஜன், இன்னும் எவ்ளோ நாளைக்கு இந்த அதிரடி திருப்பங்களுடன் கூடிய தொடர் போகும் ?

யாரோ பின்னாடி (ஆத்தாடி உங்க NO vukana பின்னூட்டஙக்ள பாத்துட்டு இத சொல்றதுக்கே பயமா இருக்கு) சீரியல் இயக்குனார் இருப்பார் போல..

பட்டாபட்டி.. said...

ரைட்..

ராஜன் said...

//happy birthday kalaingar ayya
//

குஷுபு அம்மாவுக்கும் சொல்லிடுங்க வாழ்த்து!

ராஜன் said...

//ராஜன், இன்னும் எவ்ளோ நாளைக்கு இந்த அதிரடி திருப்பங்களுடன் கூடிய தொடர் போகும் ? //



தெனம் ஒருத்தன் டவுசர் அவுந்துட்டு இருந்தா எப்பிடி நிக்கும் தல!

Anonymous said...

ஃபோட்டோவில இருக்கிற மூஞ்சியைப் பார்த்தால், அசப்பில், தாடியை ஷேவ் செய்து விட்ட கிழட்டு வில்லன் மாதிரி இருக்குதே.

ராஜன் said...

//ரைட்.. //

உம்ம தானய்யா தேடிட்டு இருந்தேன் ! ஏன் எதாவது மவுன விரதமா கெழடு பொறந்த நாளுக்காக

சூரியன் said...

மறுமலர்ச்சித் திட்டம்

நல்ல நாட்டியம்

நாடக வசன கதையாக

என கலந்து கட்டி

இப்பிடி நடிக்கற

நசுங்கும் சொம்புகளை

ஆதரிப்போம் வாருங்கள்

வணக்கம் பந்தி பின்னாடி நடக்குது சாப்புட்டு போங்க


(கட் பண்ணி எடிட் பண்ணா இப்படி வருது-உங்களுக்கு பின்னூட்டம் இடவே பயமா இருக்குங்க).. இதோடா அப்பீட்டு

ராஜன் said...

//போட்டோவில இருக்கிற மூஞ்சியைப் பார்த்தால், அசப்பில், தாடியை ஷேவ் செய்து விட்ட கிழட்டு வில்லன் மாதிரி இருக்குதே.//

இப்ப வந்து சொந்தப்பேர்ல சொல்லுங்க ! இங்க பதிவுலகில் வயசுப் பசங்கன்னு ஒரு நாலஞ்சு பேர்தான் இருக்கோம்!

சூரியன் said...

பயபுள்ள அனானி அப்பன் வச்ச பேரு தெரியாம இருக்கும் போல எங்க போனாலும் இவனுக தொல்லை..

சொல்றதுனு ஆச்சுனா அவன் ஆத்தா அப்பன் வச்ச பேர சொல்லிட்டு சொல்ல வேண்டிதானே?

ராஜன் said...

//(கட் பண்ணி எடிட் பண்ணா இப்படி வருது-உங்களுக்கு பின்னூட்டம் இடவே பயமா இருக்குங்க).. இதோடா அப்பீட்டு//

அவ்வளவு அசிங்கமாவாஆஆஆஆ வருதூஊஊஊ!

ராஜன் said...

//சொல்றதுனு ஆச்சுனா அவன் ஆத்தா அப்பன் வச்ச பேர சொல்லிட்டு சொல்ல வேண்டிதானே? //


அதுக்கு எல்லாம் வக்கில்லாத ............ க தல அவனுக !

பட்டாபட்டி.. said...

உம்ம தானய்யா தேடிட்டு இருந்தேன் ! ஏன் எதாவது மவுன விரதமா கெழடு பொறந்த நாளுக்காக //

நீங்க வேற..எப்படா தேர்தல் வருனு எதிர்பார்த்துட்டு இருக்கும் என்னைப் பார்த்து இப்படி கேட்டுக்புட்டீங்களே...ஈஸ்வரா...

சூரியன் said...

//அடிச்ச காத்துல துணி உலர்த்திய பதிவர்கள் மத்தியில் காத்தாடி வெச்சு கரண்ட் எடுக்கும் கில்லாடிகள்//


சூப்பர்ப்பூ, இன்னும் சிரிச்சிட்டே இருக்கேன்.

Jeyakumar.G said...

//பலிகடாவானது நர்சிம்மோ , முல்லையோ என்பதை விட ஏதுமறியாமல் தமிழில் டைப்ப கூட தெரியாமல் திரட்டிகள் மூலம் வாசிக்கும் எண்ணற்ற வாசகர்களே//

உண்மை.

Jeyakumar.G said...

ஆமா, இந்த வருசம் 2 தீபாவளி வருமா?.

ராஜன் said...

//நீங்க வேற..எப்படா தேர்தல் வருனு எதிர்பார்த்துட்டு இருக்கும் என்னைப் பார்த்து இப்படி கேட்டுக்புட்டீங்களே...ஈஸ்வரா...//

அதானே பாத்தேன்! நெருப்பு மாதிரி வேல செய்யணும் குமாரு! தியாகம்தான் உன்னை உயர்த்தும்!

ராஜன் said...

//நீங்க வேற..எப்படா தேர்தல் வருனு எதிர்பார்த்துட்டு இருக்கும் என்னைப் பார்த்து இப்படி கேட்டுக்புட்டீங்களே...ஈஸ்வரா...//

அதானே பாத்தேன்! நெருப்பு மாதிரி வேல செய்யணும் குமாரு! தியாகம்தான் உன்னை உயர்த்தும்!

ராஜன் said...

//ஆமா, இந்த வருசம் 2 தீபாவளி வருமா?.//



அய்யன் மண்டையப் போட்டா அஞ்சு தீவாளி கூட வரும்

pillaival said...

ATM சென்டர்ல அடிக்குற லூட்டி நல்லா இருக்குபா!!!!!!

mythees said...

//அடிச்ச காத்துல துணி உலர்த்திய பதிவர்கள் மத்தியில் காத்தாடி வெச்சு கரண்ட் எடுக்கும் கில்லாடிகள்//


Super tala...

mythees said...

//அடிச்ச காத்துல துணி உலர்த்திய பதிவர்கள் மத்தியில் காத்தாடி வெச்சு கரண்ட் எடுக்கும் கில்லாடிகள்//


Super tala...

கும்மி said...

சந்தனமுல்லையின் கணவர் முகில் எழுதிய பதிவு.
http://tvpravi.blogspot.com/2010/06/blog-post.html
அவருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் வணக்கமும், வாழ்த்துகளும்.

smart said...

ஹலோ அண்ணே முக்கியமான விஷயத்தை விட்டேங்களே!
வால்லாலிய நானும் பிரச்னையை வேண்டிய அளவு ஊத 'கார்பரேட் தேவிடியாத்தானம்' என நானும் பகையைத் தீர்த்துக்கொண்டேன். என்றும் வினாவுக்கு மிகவும் உதவி செய்தேன் என்றும். குட்டு உடைந்த உடன் இப்படி பதிவைப் போட்டு சிம்பத்தி ஏற்படுத்துகிறேன் என்றும் சொல்லியிருக்கலாம்.

anyway
//பலிகடாவானது நர்சிம்மோ , முல்லையோ என்பதை விட ஏதுமறியாமல் தமிழில் டைப்ப கூட தெரியாமல் திரட்டிகள் மூலம் வாசிக்கும் எண்ணற்ற வாசகர்களே//
This is true

so, Please boycott these communist bloggers from thiratti

nellai அண்ணாச்சி said...

இதெல்லாம் படிச்சவன் செய்ற காரியம் இல்லடே

வெப் தமிழன் said...

நல்லா இருங்கப்பா...

வால்பையன் said...

நேத்து ஒரு கல்யானத்துக்கு போயிருந்தேன்!, இதோ வந்துடுறேன்!

ராஜன் said...

//நேத்து ஒரு கல்யானத்துக்கு போயிருந்தேன்!, இதோ வந்துடுறேன்!

//


இங்க நான் காது குத்து வெச்சிருந்தேன் !

பட்டாபட்டி.. said...

இங்க நான் காது குத்து வெச்சிருந்தேன் !
//

அட்டா.. பிரியாணி போச்சே...

Veliyoorkaran said...

@Raajan..//
ராஜன் யாராச்சும் நல்லா ராவா சண்டைக்கு இழுயா..வக்காளி உள்ள வெச்சு குமுற குமுற அடிச்சு ரொம்ப நாள் ஆகுது...எங்களோட ஹோம் க்ரவுன்ட்லையும் ( பட்டாப்பட்டி) எவனும் சண்டைக்கு வரமாட்டேங்கறான்...ரெட்டைவால்சும் இப்பல்லாம் யாரையும் சண்டைக்கு இழுக்கமாட்றான்...! பார்த்து செய்ங்க பங்காளி...! நல்ல பீஸ் எவனையாச்சும் செவுட் லாக் பண்ணி பதிவுலகத்த விட்டு வெரட்டுவோம்...!

shankar said...

ராஜன் ,
நீங்களும் வால்பையனும் எழுதும் பதிவை ,தொடர்ந்து வாசிக்கும் வாசகன் நான் ,நீங்கள் பார்பனியத்தை சாடும் போதெல்லாம் ஏதோ ஒரு காழ்புனன்ற்சியோடு அவர்களை சாடுகீர்கள் என்று நினைத்து விடுவேன் ,இந்த காலத்திலெல்லாம் யார் பார்பனியத்தை பார்கிறார்கள் என்று நினைத்து கடந்து சென்று விடுவேன் ...., ஆனால் போன பதிவில் pillaival என்ற ஒருவர் ஆம் நான் உயர் சாதிக்காரன் என்று சொன்னபோது அதிர்ச்சி அடைந்தேன் ...,அவர்கள் மனதில் அது புரையோடிவிட்டது என்பதை அறிந்து வருத்தம் அடைந்தேன் ...,உங்கள் பணி தொடரட்டும் ,சம்பத்தப்பட்டவர்கள் திருந்தட்டும் ...,

கும்மி said...

இன்னொரு சொம்பின் ஆணாதிக்க வெறி அம்பலப்படுத்தப்பட்டுள்ளது

chinnathambi said...

முன்பொருமுறை சாரு நிவேதிதா என்பவன் “வலைப் பதிவர்கள் எழுத்தாளர்கள் அல்ல என சொன்னதை மெய்ப்பிக்கவோ; அல்லது எழுத்தாளர்களுக்கு கொஞ்சமும் சளைத்தவர்களல்ல என பாலிடிக்ஸ் செய்யவோதான் இவ்வளவும் நடந்தேறு கின்றன போலும்!
((((((

அருமையா சொன்ன ராசா?

chinnathambi said...

கூடிய விரைவில் cyclekadai எண்ற பதிவு வரும். அதில் கடைகாரர் மாமா வேலை பாக்குரார் , கடைல பன்சர் பொட சொன்னா பூக்காரி கூட லோலாயி பன்னுரார் அப்படி கூட எழுத போறாஙக.. பாத்து சூதனமா இருஙக அப்பு

கலாநேசன் said...

//பதிவர்களின் தோற்ற மாயை படிப்பவர்களை வாசகனாகவும் தன்னை மாபெரும் எழுத்தாளனாகவும் கற்பிதம் செய்யக் கற்றுக் கொடுத்திருக்கிறது.//
மிகச்சரி

..:: Mãstän ::.. said...

:)

கலக்கல் ராஜன்...


<<<
தமிழில் டைப்ப கூட தெரியாமல் திரட்டிகள் மூலம் வாசிக்கும் எண்ணற்ற வாசகர்களே.
>>>
படுச்சதுலே ரெம்ப புடிச்சது இதுதான். :), உங்க நேர்மை புடுச்சுருக்கு :D

தமிழ் வெங்கட் said...

பதிவுலகில் கோக்ஷ்டி இருப்பது சமீபத்தில் நடந்த நிகழ்வுகள் மூலம்தான்
எனக்கு தெரிந்தது

shankar said...

ஏம்ம்பா ,
இன்னிக்கி தேதி என்னா என்னா ???

ஜோதிஜி said...

ராஜன் நீங்க பக்கத்தில் இருந்தால் ஒரு முத்தம் கொடுத்து இருப்பேன். காரணம் கும்மியாரிடம் கேட்கவும்.