>இதற்கான எதிர் பதிவு இங்கே !(முன்கூட்டியே போட்டுவிட்டால் நேர்பதிவு ஆகிவிடாது என்பதை சொல்லிக் கொள்ள கடமைப் பட்டிருக்கிறேன் )
நெஞ்சில் முடி முளைத்த அம்மா ஆதி பரா சக்தி அவதாரத் திருநாளான இன்று நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம் (ஒரிஜினல்) பதிவை வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
சிலர் உழைத்து சம்பாதித்து இருக்கிறார்கள் என்று நண்பர் வால் பையன் சொல்கிறார். அதற்கெல்லாம் ரொம்ப கஷ்டப்பட்டு உழைக்கணும் ! காலம் போன கடைசில கோடி ரூபாய வெச்சு கிட்டு என்னத்த பண்றது ! கல்லக் கண்டா நாயக் காணோம்னு சொல்வாங்களே அந்த மாதிரி இருக்கக் கூடாது !
நீங்கள் கோடீஸ்வரர் ஆகலாம் கோனை வழியிலேயே , பொறுமையாக ஒரு வருடத்தில் ! அதற்க்கு ஒவ்வொரு நாளும் உங்களது பித்தலாட்ட வேலைகள் இரட்டிப்பாக வேண்டும் ! நீங்கள் எந்த கடவுள் வேஷம் வேணாலும் கட்டிக் கொள்ளுங்கள் ஆனால் பக்தர் கூட்டம் பெருகினால் ஒரே வருடத்தில் நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்! ஆனால் கோல்மால் சாமியார் நடிப்பில் கொஞ்சம் கவனமும் திருட்டுத் தனமும் இருத்தல் நலம் !
உங்களுடய முதலீடு பத்தாயிரம் ருபாய் மட்டுமே!
10,000 உங்கள் முதலீடு
20,000 முதல் மாதம்
40,000 இரண்டாம் மாதம்
80,000 மூன்றாம் மாதம்
1,60,000 நான்காம் மாதம்
3,20,000 ஐந்தாம் மாதம்
6,40,000 ஆறாம் மாதம்
12,80,000 ஏழாம் மாதம்
25,60,000 எட்டாம் மாதம்
51,20,000 ஒன்பதாம் மாதம்
1,02,40,000 பத்தாம் மாதம்
ஒரு கோடியே ரெண்டு லட்சத்து நாற்பதாயிரம் பத்தாம் மாத இறுதியில் உங்கள் கையில்!
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒரு 10 *20 ஒரு ரூம் வாடகைக்கு எடுத்து ஒரு பித்தளை அம்மன் செலைக்கு மாலை எல்லாம் போட்டு கோவில் செட் போடவேண்டியது தான் !
அஞ்சாறு பொம்பளைங்கள செட் பண்ணி ஊருக்குள்ள உங்களோட மகிமைகள் பத்தி புருடாக்களை அள்ளி விட வெக்கணும் . உங்க பேர கங்காரு அம்மான்னு வெச்சுக்கணும் !
அப்பறம் நீங்க ஆம்பளையா இருந்தா அம்மன் வேஷம் போடணும் பொம்பளையா இருந்தா சிவன் வேஷம் கட்டணும் . அப்பத்தான் ஒரு விளம்பரம் கெடைக்கும். அந்த ஊர்ல இருக்கற ஒரு லோக்கல் சேனல்ல நீங்க பூச பண்ணற காட்சிகள் போட சொல்லி அமவுண்ட் குடுத்து வாரா வாரம் சக்தி யாகம் நடத்தப் போறேன்னு அறிவிப்பு குடுங்க! எப்பிடியும்மொதல் வாரமே அக்கம் பக்கத்துப் பொம்பளைங்க ஒரு பத்து பேர் வந்து உக்காந்துடுவாங்க ! அவங்களுக்கு எல்லாம் ஒரு கேவலமான கலர்ல பிளைன் சேல எடுத்து குடுக்கணும் ! அதப் போட்டுட்டுதான் வரணும்னு கண்டிப்பா சொல்லிடுங்க ! மொதல்ல காசு எதுவும் கேக்க வேணாம்.
*அப்பறம் என்ன ? யாகம்ன்ற பேர்ல செங்கல்ல கட்டம் கட்டி மண்ணு குமிச்சு சுள்ளிகளைப் போட்டு டால்டா ஊத்த வேண்டியது தான் ! பித்தளத் தகடு ரெடி பண்ணி ஆளாளுக்கு ஒன்னு குடுங்க ! புருஷன் இடுப்புல கட்டு ! பாத்ரூம் கதவுல சொருகுன்னு வாரம் ஒரு மாந்த்ரீக ஐட்டத்த கைல திணிச்சா நம்பிருவாங்க !
*வீதி வீதியா உங்க புகழ் பரவும் ! ரசிகர் மன்றம் மாதிரி அங்கங்க பிரான்ச் ஆரமிக்க வேண்டியதுதான் ! மகளிர் சுய உதவிக் குழுக்களை வளைச்சுப் போட்டா ஈசியா பிரபல சாமியாராகிடலாம் !
* ஆசிரமம் ,கோவில்னு பிட்டப் போட்டு உண்டியல் குலுக்க ஆரமிக்க வேண்டியது தான் பாக்கி . நீங்க நேர்ல பிச்சைக்குப் போவக் கூடாது ! உங்க போட்டோ போட்ட பிளெக்ஸ் போர்ட தூக்கிட்டு தெருத் தெருவா பக்தர்களை சுத்த விடுங்க !
* லம்பா ஒரு அமவுண்ட தேத்தி ஊருக்கு ஒதுக்கு புறமா ஆசரமத்தப் போடுங்க . என்னடா ஊருக்கு வெளியவான்னு யோசிக்காதீங்க கொஞ்ச நாள்ல எடத்துக்கு தண்டவாளத்த சுத்தி ரயில்வே ஸ்டேஷனே கட்டிக்கலாம் .
* மாசம் ஒரு தடவை ஊர்வலம் வரணும் வெள்ளித் தட்டுல கால நீங்க வெச்சா பக்தைகள் பன்னீர் ஊத்தி கழுவி விடுவாங்க ( குளு குளுன்னு இருக்கும் )
* கருமாத்தூர் ஆதி பரா சக்தி டிரஸ்ட் - போர்டைப் போட்டு ஸ்கூல் ஆரமிங்க அப்பறம் பாருங்க deemed யுனிவர்சிட்டி வரைக்கும் போய்கிட்டே இருக்கலாம் !
*நீங்க சாமியாக நெறைய பேச தெரியனும்னு கூட அவசியம் இல்ல ! இப்ப நம்ம மேல் மருவத்தூர் அம்மா இருக்காங்களே அவங்க எதுவுமே பேசமாட்டாங்க மாண்புமிகு முன்னாள் பாரதப் பிரதமர் நரசிம்மராவ் கூட பட்ஜெட் கூட்டத் தொடர்ல நாலு வார்த்தை பேசுவார் ! ஆனா நம்ம அம்மா ஒருநாளும் பேசாது ! ஊமை சாமின்னு சொல்லி பில்ட் அப் ஏத்திக்கலாம்.
* சாமி காலை கழுவுனா புண்ணியம் , ஜட்டிய தொவச்சா கண்ணியம்னு கெளப்பி விடனும் தெனைக்கும் ஒரு கதைய .....
அப்பறம் என்னங்க உங்களோட சொந்த புத்தியையும் பயன் படுத்தி பீல்டுல நெலச்சு நிக்க வேண்டியது தான் .
எவனுக்கும் பயப் படத் தேவை இல்ல லோகல் அரசியல் வாதி சம்சாரத்த பக்தையாக்கிட்டா பொலிடிகல் சப்போட்டும் கெடச்சா மாதிரி . காசுக்கு கொறைவே இல்லாம உண்டியல் களை கட்டும் ! மெடிகல் காலேஜு ,ஆஸ்பத்திரின்னு அடிச்சு ஆடலாம் . என்ன ஒன்னு ஊருக்குள்ள கொஞ்சம் பேரு
மேடை போட்டு நம்ம பொழப்ப நாரடிப்பானுங்க ! கண்டுக்கவே கூடாது ! அவனுங்களுக்கு பதில் சொல்ல ஆரமிச்சா டவுசர் கழண்டு ரோட்டுல ஓட வேண்டியது தான் ! பிஞ்ச செருப்புல சானிய தடவி அடிச்சாலும் சடங்கான பொண்ணுக்கு சந்தானம் தேச்சு விட்டா மாதிரி சிரிச்சுட்டே இருக்கணும். வயசானப்பறம் நம்ம புள்ளைங்களுக்கும் வேஷம் கட்டி பட்டய கெளப்ப வேண்டியது தான் .
http://www.sakthipeedam.org>உங்களுக்கு நம்பிக்கை ஏற்ப்பட இங்கு போயி பாருங்க ! நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம் ( நெசமாத்தான் சொல்றேன் )



61 comments:
அட.., இது ரொம்ப ஈசியா இருக்கே
நல்லதா போச்சு
ஈசியான வ்ழி கொஞ்சம் பொறுமை அவசியம் கொஞ்ச நாட்களுக்கு.......
ஏன்யா.. ஒரு சூத்திரன் முன்னேறினா உமக்கு கோபம் வருது... செயந்திரன் சொத்து மதிப்பு எம்புட்டுன்னு தெரியுமா... அந்தாளப் பத்தி எளத வேண்டியதுதான...
ஒரு நீண்ட ஏக்கப் பெருமூச்சு மட்டும் விட்டுக்கொள்ளலாம்..,
//ஏன்யா.. ஒரு சூத்திரன் முன்னேறினா உமக்கு கோபம் வருது... செயந்திரன் சொத்து மதிப்பு எம்புட்டுன்னு தெரியுமா... அந்தாளப் பத்தி எளத வேண்டியதுதான...// எனக்கு எந்த நாயப் பத்தி எழுதரதுளையும் ஆட்சேபம் இல்ல ! சூத்திரன்னா பிராட் பண்ணலாமா ?
At present he is No.1 fraud and a businessman in the name of religion.
ம்ம் ... சான்ஸ் கெடச்சவன் சர்பத் சாப்பிடுறான் !!
மாட்டுனா பெண்டெடுது விடுவாங்க தல. அதுக்கு எதாவது (மாட்டாம தப்பிக்க) வழி இருக்கா
பல வருடங்களுக்கு முன்பு இந்த பங்கரை அடிக்கு மதுராந்தகம் போலீஸ் ஸ்டேசனில் கள்ள நோட்டு கேஸ் ஒன்னு இருக்கு ஆறு மாசம் களி தின்னுரிக்கன் ரெகார்ட் உள்ளது மமோஒய்
--
சூப்பர் தல
நானும் கங்காரு சாமியார்ன்னு பேர மாத்தி, குதிச்சு குதிச்சு அருள்வாக்கு சொல்லி பொருள் சம்பாதிக்கலாம்ன்னு இருக்கேன்.
boss onu vittutenga oorla ulla poramboku nilam yellam binami perala mathelam
appram college vechu rowdy thanam panalam
appram paganga peran pethi yellam training panni atha velai paka vekalam
" ALL IN ALL " அழகுராஜா கடை
பெட்ரோமாஸ் லைட்டுகள் வாடகைக்கு கிடைக்கும்//
ரைட்டு.
//பிஞ்ச செருப்புல சானிய தடவி அடிச்சாலும் சடங்கான பொண்ணுக்கு சந்தானம் தேச்சு விட்டா மாதிரி சிரிச்சுட்டே இருக்கணும். //
எல்லா சாமியார் கபோதிகளும் அப்படி தானே இருக்குதுங்க!
உங்க பதிவு படிச்சா எனக்கு சிரிச்சி சிரிச்சி வயிறு வலி வந்துருது! எதாவது லேகியம் சிபாரிசு பண்ணுங்க தல!
// kantha said...
ஏன்யா.. ஒரு சூத்திரன் முன்னேறினா உமக்கு கோபம் வருது... செயந்திரன் சொத்து மதிப்பு எம்புட்டுன்னு தெரியுமா... அந்தாளப் பத்தி எளத வேண்டியதுதான...//
ஒரு பதிவ மட்டும் படிச்சிட்டு வந்து கத்தக்கூடாது! எங்களுக்கு எல்லா கபோதிகளும் ஒண்ணு தான்!
தல, இந்த ஐடியாவையும் நான் ஏற்கனவே இங்க சொல்லிட்டேன்! :)
:-)) இன்னும் நிறைய சாமியார்கள் ப(க்)த்தி வருமா ?
//உங்க பதிவு படிச்சா எனக்கு சிரிச்சி சிரிச்சி வயிறு வலி வந்துருது! எதாவது லேகியம் சிபாரிசு பண்ணுங்க தல!//
ராட்சச ரணகல்லி வேர் இருக்கு தல !
அட அட அட...
கலக்கல் தான் போங்க....
காவில இன்னும் கறை இருக்கு தல,
நல்லா கும்முங்க தல
//காவில இன்னும் கறை இருக்கு தல,
நல்லா கும்முங்க தல//
உஜாலா போட்டுடலாம் !
உங்களுக்கு சான்ஸ் கிடைச்சா நீங்க சாமியார் ஆக மாட்டீங்களா. இந்த இடுகை ஏதோ உங்களுக்கு சான்ஸ் கிடைக்கலியேன்னு பொறாமைல எழுதற மாதிரி இருக்குது
//உங்களுக்கு சான்ஸ் கிடைச்சா நீங்க சாமியார் ஆக மாட்டீங்களா. இந்த இடுகை ஏதோ உங்களுக்கு சான்ஸ் கிடைக்கலியேன்னு பொறாமைல எழுதற மாதிரி இருக்குது//
அவருக்கு என்ன சான்ஸ் கெடைச்சதுன்னு கொஞ்சம் சொல்லுங்களேன் !
//அவருக்கு என்ன சான்ஸ் கெடைச்சதுன்னு கொஞ்சம் சொல்லுங்களேன் !
//
ஒரு யுனிவர்சிட்டி ,பண்ம் அப்புறம் எல்லாமே
//ஒரு யுனிவர்சிட்டி ,பண்ம் அப்புறம் எல்லாமே//
மொதல் மொதல்ல சாமியாராக என்ன சான்ஸ் கெடச்சுது ? நீங்க சொல்றதெல்லாம் கொள்ளை அடிச்சது
பிராடு பண்றதுக்கு ரிஸ்கே எடுக்காத பயலுக இவனுங்க தான் ! அப்ப முட்டி தேய ஒடி ஒடி திருடர கொள்ளைக் காரர்கள் எல்லாம் எவ்ளோ பாவம்
//அப்ப முட்டி தேய ஒடி ஒடி திருடர கொள்ளைக் காரர்கள் எல்லாம் எவ்ளோ பாவம்
//
அவங்கள நினைச்சா பரிதாபமா இருக்கு. டெக்னிக் தெரியாத பசங்க.
//
//காவில இன்னும் கறை இருக்கு தல,
நல்லா கும்முங்க தல//
உஜாலா போட்டுடலாம் !
//
உஜாலா போட்டால் வெளுத்திடாது?
//ஏன்யா.. ஒரு சூத்திரன் முன்னேறினா உமக்கு கோபம் வருது... செயந்திரன் சொத்து மதிப்பு எம்புட்டுன்னு தெரியுமா... அந்தாளப் பத்தி எளத வேண்டியதுதான..//
பாப்பார பயலுகளைத் திட்டினாலும் சரி, சூத்திர பயலுகள திட்டினாலும் சரி, அந்த நொட்டைப் பயல எதாவது சொல்லுன்றீங்க
கம்முனாட்டி பயலுகள திட்டினாலும் அந்தப் பொட்டை பயல எதாவது சொல்லுன்றீங்க
யாரைச் சொன்னாலும் எதாவது சொல்றீங்களேயா, நீங்க யாரையாவது சொல்லுங்களேன்யா, எளுதுங்களேன்யா
சாமி உங்க கண்ணை குத்தாம விடாது பாருங்க..
sirichisirichi vayiruvali vandhudacham valpayyanaukku. Kadavulnu oruthar illainalum, aduthavanga manadhai punpaduthum verithanathukku, ungal iruvarukkume( Arun,Rajan) sariyana Thandanai kathukondirukkirathu.Petru kollungal.
//sirichisirichi vayiruvali vandhudacham valpayyanaukku. Kadavulnu oruthar illainalum, aduthavanga manadhai punpaduthum verithanathukku, ungal iruvarukkume( Arun,Rajan) sariyana Thandanai kathukondirukkirathu.Petru kollungal.//
என் வீட்டுக் கண்ணுக் குட்டி என்னோட மல்லுக் கட்டி என் மார்பில் முட்டுதடி கண்மணி என் கண்மணி
Aanmigathai pathi ezhudha,pesa ungal iruvarukkum vayasu pathathuda podi pasangala.
//Aanmigathai pathi ezhudha,pesa ungal iruvarukkum vayasu pathathuda podi pasangala.//
உங்க அப்பண்டா நாங்க (!) எல்லாம் பத்தும் வந்து பாரு
nee enakku mattumillai yarukkume appa aaga mudiyathuda rasa!!
மீண்டும் ஒரு சிறந்த பதிவு. ஒரு வேண்டுகோள். நேரம் இருக்கும் சமயம் - ஜக்கி, நித்தி, ரவி (ரவிசங்கர்) மற்றும் பரட்டை (பாபா) பற்றியும் எழுதவும். ஆவலோடு காத்திருக்கிறேன்
ayyo appa nee antha avanaa ?
Arumaiyana Post...
//அப்பறம் என்னங்க உங்களோட சொந்த புத்தியையும் பயன் படுத்தி பீல்டுல நெலச்சு நிக்க வேண்டியது தான் .//
இதுலாம் சாமியார் பிசினஸ் பீல்டுக்கு சரிவராது. அதான் எம்.எல்.எம் சிஸ்டம் இருக்கே. எதுக்காக சிரமப்பட்டு புத்திய யூஸ் பண்ணி கலைச்சி போகனும். நோகாம நொங்கு திங்கனும் அதான் தொழில் தர்மம்(பிசினஸ் எதிக்ஸ்)...
இதுலாம் சாமியார் பிசினஸ் பீல்டுக்கு சரிவராது. அதான் எம்.எல்.எம் சிஸ்டம் இருக்கே. எதுக்காக சிரமப்பட்டு புத்திய யூஸ் பண்ணி கலைச்சி போகனும். நோகாம நொங்கு திங்கனும் அதான் தொழில் தர்மம்(பிசினஸ் எதிக்ஸ்)...
//இதுலாம் சாமியார் பிசினஸ் பீல்டுக்கு சரிவராது. அதான் எம்.எல்.எம் சிஸ்டம் இருக்கே. எதுக்காக சிரமப்பட்டு புத்திய யூஸ் பண்ணி கலைச்சி போகனும். நோகாம நொங்கு திங்கனும் அதான் தொழில் தர்மம்(பிசினஸ் எதிக்ஸ்)...//
உங்களுக்கு புரியல தல ! ஊரை ஏமாத்த ஆயரம் வழி இருந்தாலும் சாமியார் வேசமே தனி சொகம் !
அடடா நான் முழுசா சொல்லலையா... சாமியார் தெழிலில் எம்.எல்.எம் சிஸ்டம் வந்திடுச்சு. ஒருவர் முதலி சேர்ந்து அவருக்கு கீழ ஒரு நாலு பேர சேர்க்கனும். அப்படி சேர்த்துட்டா ஆப்லைன் ஆசாமிக்கு சாமிய தரிசிக்க பிரியா பாக்கியம் கிடைக்குமாம் இந்த சுன் ச்செ... சும்மா பகவானு சொல்லிக்கிறவனுங்க இப்படி தானே பண்ணிட்டு இருக்கானுங்க...
//சும்மா பகவானு சொல்லிக்கிறவனுங்க இப்படி தானே பண்ணிட்டு இருக்கானுங்க...//
அவனுங்களுக்கு ஒரு நாள் இருக்குது !
OOps! No Comments
munnadi rasa family total damage. ippa valu+rasa character total damage.ethu senjalum PPlan pannithan seyyanum.illenna
ippadithan seruppadi vizhum.
Vittudunga anony, ivanukku comment ezhuthi ivani peri manushan aakidatheenga. Kadavulai pathi thappa ezhutharavan orunal kadharikittu poi aandavan kalil vizhuvan. sinnapayyan,pizhaichu pogattum.
ஆப்பு ரெடியான விசயம் தெரிந்து விட்டதா!?
அனைத்தும் சாட்சிகளப்பா!
தல, கள்ள நோட்டு புழங்க விடுறது, சினிமா நடிகைங்கள சுத்தி வச்சிக்கிறதெல்லாம் விட்டுட்டிங்களே! முக்கியமா குறைஞ்சது ரெண்டு ஆம்பளப்புள்ளைங்களையாவது பெத்துக்கணும். வயசாகுற வரைக்குமெல்லாம் வெயிட் பண்ண வேண்டாம், அவங்கள சித்தி ச்சீ சின்ன அம்மா ஆக்கிடலாம் ;-)
உங்கள் இருவரையும் பற்றிய அவதூறுகளை இரண்டு நாள் கூட தங்க முடியவில்லையே,மற்றவர்களை ஆதாரம் இன்றி தவறாக பேசுவது மட்டும் இனிக்கிறதோ?
//உங்கள் இருவரையும் பற்றிய அவதூறுகளை இரண்டு நாள் கூட தங்க முடியவில்லையே,மற்றவர்களை ஆதாரம் இன்றி தவறாக பேசுவது மட்டும் இனிக்கிறதோ? //
சுவாமீ ! நாங்கள் உங்களைப் பேசவில்லையே ? பேசினால் கேளுங்கள் ! பன்னியை கல்லில் அடிக்கையில் சொறிநாய் குறைத்துக் கொண்டு குறுக்கே வந்தால் அதற்கும் ஈடுவிழுந்த்தது
//
உங்கள் இருவரையும் பற்றிய அவதூறுகளை இரண்டு நாள் கூட தங்க முடியவில்லையே,மற்றவர்களை ஆதாரம் இன்றி தவறாக பேசுவது மட்டும் இனிக்கிறதோ? //
ச்ச்சுவாமி!
நாங்க அதை கண்டுக்கவேயில்லை! அது எங்களை பற்றி சொன்னதுன்னு நினைச்சா தானே எங்களுக்கு கவலை! சைபர்கிரைமில் தொடர்பு கொண்டதால் தான் சில மாற்று ஏற்ப்பாடுகள்!
சில html code எங்கள் ப்ளாக்கில் இணைக்க சொன்னார்கள், இணைத்திருக்கிறோம், எதோ எங்களால ஆனா சேவைன்னு வச்சுகோங்களேன்! நீங்க காஞ்சிபுரத்துல செஞ்ச சேவை இந்த கணக்கில் வராது!
கடவுளை அதீதமாக
நேசிப்பவன் ஆத்திகன்.மனிதனை அதிகம் நேசிப்பவன் நாத்திகன்.நான் பங்காரு வின் ஆதரவாளன் அல்ல. கண்ணியமாய் எழுதுவதை விரும்புகிறேன். காஞ்சீபுரம் சேவைஎல்லாம் எனக்கு தெரியாது. இடியாப்ப சேவை மட்டும் தான் தெரியும் நண்பா.
யோசனை சூப்பரா இருக்கே .........நெஞ்சில் முடிமுலைத்த அம்மா, செருப்படி அவன கும்புட்ற பக்தர்க்கு
இதிலும் விவகாரம் வரும்,அதனால் சம்பாதித்தவற்றை இழக்கவும் வேண்டிவரும்,செருப்படிகூட கிடைக்கும்,இதை விட இலகுவான எல்லாவற்றையும் வெளிப்படையாக அனுபவிக்கக்கூடிய,சிறு பெண்களை சொத்தைக் காட்டி அதை பாதுகாக்க எனச்சொல்லி கல்யாணம் செய்யக்கூடிய(ஆணையும்),யார் ஆட்சிக்கு வந்தாலும் சம்பாதிக்கக்கூடிய,தமிழனை சூத்திரன்,காட்டுமிராண்டிஎனப்பெசியபடி அவனுக்கே தலைவனாகக்கூடிய,பெண்ணுரிமை பேசியபடி சொத்தைக்காட்டி பேத்தியை கூட அவளின் விருப்பமாக்கி கட்டக்கூடிய இதையெல்லாம் விரும்புபவரை கூட்டக்கூடிய ஏமாற்றினாலும் யார்க்குமே பயப்படாமல் ஏமாற்றக்கூடிய வழி ஒன்றை தெலுங்கு நாயக்கர் காட்டிச்சென்றும் அதை பின்பற்றாமல் கடினவழிகள் எதற்கு சூத்திரா உனக்கு??சொத்திருந்தால் கல்யாணம்,கட்சியின் பெயரில் சொத்து,கட்சியோ குடும்பச்சொத்து,சொத்தைக்காக்க கல்யாணம்,ஆஸ்தீக நண்பர்கள்,அசத்தலாமே!!காவியில் ஏமாற்றினால் கம்பி என்னவேண்டும்,கல்லாலும் அடிபடலாம்.நாஸ்தீ கமென்றால் பிறகு புத்தம்,இஸ்லாமேன்ரும் அசத்தலாம்,பெரியாரும் அப்படித்தானே உழைத்து வீரமணிக்கும் பெத்திபோன்ர மனைவிக்கும் கொடுத்தார்.பிரான்சில் குடியுரிமை,எக்கச்சக்க ரசிகர்,ஆமாம்சாமிகள்,நிர்வாண விளம்பரங்கள் அசத்தலாமே!!பயந்தபடி காவிபோட்டு உழைப்பதைவிட தூசனை பொழிந்தபடி காமம் புரிந்தபடி அமோக உழைப்புக்கு நாச்தீகமே சிறந்திருக்க காவி அம்மா,சாமி எல்லாம் முழு மூடர்களே!!
இவர்களுடைய கண்ணக்கை ஆண்டு தோறும் அரசாங்கத்திற்கு ஒப்படைக்க வேண்டும் என்று சட்டம் கொண்டுவரவேண்டும் மேலும் வரிவிலக்கு அளித்தால் கூட இந்த சட்டத்தை அமலுக்கு கொண்டு வர வேண்டும்.இதனை எல்லா செய்திதாழ்களிலும் நிதிநிலை அறிக்கை விளம்பரம் செய்ய வேண்டும்.
சொல்லவேஇல்ல........................................
விடு.. விடு.. சாமினா ஆட்டமாடறதும்.. சாமியார்னா ஆட்டய போடறதும் இந்தியாவில் சகஜமப்பா...
ஏமாறுகிறவன் இருக்கும் வரை ஏமாற்றுகிறவன் இருக்கத்தான் செய்வான். நூறு ரூபாய்க்கு ஓட்டை மாத்திப் போட்டு நாட்டை கெடுக்கும் மக்களை விட, வயிறுப் பிழைப்புக்காக மக்களை ஏமாற்றும் சாமியார்கள் மேல்.
Post a Comment