Friday, May 17, 2013

நீயா நானா - வாய்க்கெட்டாத பழம்

சில வாரங்களுக்கு முன்பு...

தமிழினத்தலைவர் தோட்டா அவர்கள் போன் பண்ணி,
‘மாப்பி நீயா நானால பிரபல(!) டிவிட்டர்கள எல்லாம் ஒரு ஷோவுக்கு கூப்புட்றாங்க... இப்போதைக்கி நீ,நான்,கார்க்கி, திருமாறன்,டேவிட்,பாலா,பரிசல் எல்லாம் ரெடியா இருப்போம்’னாரு.
நானும் ’என்னது கோட்டு கோபி சார நேர்ல பாக்கப்போறமா!? வாவ் வாட்டே ஸ்டன்னிங் சர்ப்ரைஸ்’ என்றுவிட்டு டாபிக்கைக் கேட்டேன்.

‘டாபிக் என்னானு தெரில இங்கிலீஸ்ல பீட்டர் உடற ஆளுகளப் பத்தி ஓட்டணுமாம்’

’அதுக்கென்ன சிர்ர்ர்ர்றப்பா செஞ்சுருவோம்’

இப்படியாக முடிந்தது அந்த உரையாடல்.  அப்பறம் கோளாறுகிட்ட பேசினப்போ, அந்த டைம் ரெம்ப டெலிகேட் பொசிசன். இன்னும் ஒன் மந்த் நான் டூர்ல தான் இருப்பேன் சோ வரமுடியலைன்னுட்டாரு. அப்பறம்  கெஞ்சிக்கூத்தாடி ஓகே சொல்ல வெச்சேன்.

அடுத்த சில நாட்களில் நமது இடையறாத எழுத்துப்பணிகளுக்கிடையில் கிட்டத்தட்ட இந்த மேட்டர் மறந்தே போய்விட்டதென்று தான் சொல்லவேண்டும்.

இந்நிலையில் மூன்று நாட்களுக்கு முன் அதாவது 14ம் தேதி மதியம் தோட்டா மீண்டும் அழைத்து 
‘கெட் ரெடி ஃபோக்ஸ்... 16ம் தேதி ஈவினிங் 7.30க்கு ஷூட்டிங்.. எல்லாருக்கும் சொல்லீரு.. மொக்கையா பேசுற பொண்ணுக ரெண்டு பேர் வேணும்...மத்ததெல்லாம் மெயில்ல பேசிக்கலாம்’னுட்டு வெச்சுட்டாரு.

டாபிக் என்ன எப்ப கெளம்பறது எப்பிடி போறது ஒண்ணும் புரில! சரி மொதல்ல ஆட்கள ரெடி பண்ணுவோம்னுட்டு பாலா,டேவிட்,கார்க்கில்லாம் கூப்பிட்டு கன்ஃபார்ம் பண்ணினேன். 

அதுக்கப்பறம் அந்த பெண்கள் தேடல். திருப்பதில மொட்டையனுகளுக்கா பஞ்சம் அது போல மொக்கை பெண்கள் இரண்டு பேரை போனில் அழைத்தேன்.

இரண்டு பேருக்குமே ஆளுக்கொரு நிபந்தனையின் பேரில் வர விருப்பம் தான்னு சொன்னாங்க.

சிண்டெக்ஸ் அவர்கள் கேட்டது நைட்டுக்கு டிப்பன் போடுவாங்களான்றது தான்! அதுக்கென்னமா அவனுக போடலைன்னாலும் நான் அம்மா உணவகத்துல அஞ்சு ரூவா கலவ சோறு ரெண்டு பொட்டலம் வாங்கித்தர்றேன் உறுதியளிச்சேன். 

ரேணு சோத்துப் பண்டாரம் கிடையாது. அது சொன்ன காரணம் வேல்யுபுல் ஒன்!  அவங்க வீட்ல தனியால்லாம் வயசுப்பொண்ண அனுப்ப மாட்டாங்களாம். அதுவும் இன்னைக்கு நாடிருக்கற நெலமைல ரேணுவ மெட்ராஸ் வரைக்கும் அனுப்பறதெல்லாம் நெனச்சு கூட பாக்கமுடியாதுன்னுட்டாங்களாம்! அவங்க சொல்றதுலயும் நியாயம் இருந்துச்சு. 

‘என்னம்மா பண்றது நான் வேணா இசட் பிரிவு பாதுகாப்புக்கு மனுகுடுத்து பாக்கட்டுமா?’

‘இல்லைங்க அதெல்லாம் ரொம்ப ஜாஸ்தி ஒரு ரெண்டு விஐபி பேட்ரோல் ஜீப் வந்தா போதும் எங்கப்பா ஒத்துக்குவார்’

‘ஙேஙேஙேஙே’

‘சரி அது கஷ்டம்னா சொல்லுங்க ஒரு 407 மட்டும் ஏற்பாடு பண்ணுங்க எங்க பாட்டி தாத்தா பெரியப்பன் மக்க சித்தப்பன் மக்க எல்லாரும் கெளம்பி வந்துர்றோம் பிரச்சனை இருக்காது’

‘டன்’

‘இன்னொரு  சர்ப்ரைஸ் கேட்டா எல்லாரும் அசந்துருவீங்க’

‘சொல்லு மொதல்ல அப்பறம் அசர்றோம்’

‘என் கூட சுமால் ஏஞ்சலும் வரப்போறா... அதான் என் தங்கச்சி’

‘ரைட்டு’

இப்படியாக அன்றைய இரவு அய்யய்ய்ய்ய்யய்யோ ஆனந்தமேஏஏஏஏ என்று கழிந்தது. மறு நாள்  மதியம் கிளம்புவதாகப் ப்ளான்! கோவையிலிருந்து பாலாவின் காரில் நான், பாலா, ஷேக், பரிசல், கும்கி  ஆகியோர் திருச்சி சென்று அங்கே டேவிட்டையும் தோட்டாவையும் பிக்கப் செய்துகொண்டு சென்னைக்குப் பயணமாவது போல.

பரிசல் முதல் பிர்ர்ரேக்கைப் போட்டார்! நான் குடும்பத்துடன் இன்பச் சுற்றுலா செல்லவேண்டியிருப்பதால் ப்ளீஸ் க்ராண்ட் மீ லீவ் பார் 3 டேஸ் என்று. அவர் அடி தாங்கும் ஆள் அல்ல என்பதாலும் எங்களால் பலமுறை அவர் நிலத்திற்கு ரத்தம் குடுத்த நினைவுகள் வந்ததாலும் அவரை விட்டுவிட்டோம். 

அடுத்த பிர்ரேக்கு கலியுகக் கலைஞர் தோட்டா!    ஷிப் மெண்டு, கவர் மெண்டு என்றேதேதோ மெண்டுகளைச் சொல்லி தெறிச்சுட்டார். அப்பதான் எனக்கே மைல்டா டவுட்டு வந்துச்சு.. இந்த ஆடு ஆருவா, மனுசன் குடை இதுக்கெல்லாம் எதோ சம்பந்தம் இருக்கற மாதிரியே தோணுச்சு. 

சரி விடுன்னு நாங்கல்லாம் கெளம்பி போய்ட்டோம். மறு நாள் காலை மெட்ராஸ்ல ரூமப் போட்டு வெயிலுக்கு குளிர்பானங்கள் குடிக்க ஆரமிச்சாச்சு. 16.05.13. மாலை 7.30 பிரசாத் ஸ்டுடியோ. நீயா நானா அரங்கம்.


இண்டர்வியூவ ஆரமிச்சாங்க. லேடீஸ்க்கு ஒரு பக்கம் மிலிட்டரி செலக்சன்.
அதாவது எண்ணெய் மில்லுக்கு கவுண்டர் ஆளெடுப்பாரே அது மாதிரி!  பாலா, கார்க்கி, டேவிட், திருமாறன் ஆகிய நால்வரும் சிறப்பு விருந்தினர்கள். தலைப்பு,

 ’’அறிவாளிகளாகக் காட்டிக் கொள்வது எப்படி?’’

இசைய முடிச்சுட்டு நமக்குல்லாம் பொது அறிவு டெஸ்ட்டு வெச்சாய்ங்க. அதுல பெயில் ஆகிட்டதால ஆடியன்ஸ் வரிசைல உக்காரச் சொல்லிட்டாய்ங்க! நானு ,கோளாறு, சீத்தா, சேட்டை, ரகுசி, வேதாளம்லாம் கம்மானு உக்காந்து வேடிக்கை மட்டும் பார்த்தோம்.  சீப் கெஸ்டு கூட வேணாம் சைடுலயாச்சும் உக்கார உடுங்கய்யானு எவ்வளவோ கெஞ்சுனோம் ஆனா கோட்டு கோபி  அவ்வளவு ஸ்டிட் ஆபிசரா இருப்பார்னு நெனச்சு கூட பாக்கல.

அடுத்த ப்ரொக்ராம் விடியக்காலைல ஷூட் பண்றாங்கன்னாங்க. அதுலயாச்சும் எடம் கெடைக்குமானு  நானும் கோளாறும் கேக்கப் போனோம். 

‘உங்க ரெண்டு பேருக்கும் பைக் கார்லாம் ஓட்டத்தெரியுமா’

’அதுக்கென்னங்க ஒத்தைக்கைல ஓட்டுவோம்’னு நெஞ்ச நிமுத்தி வெரப்பா கோரஸ் போட்டோம். கூட வெச்சிருக்கவனுக்கெல்லாம் லைட்டு இல்லைன்னுட்டாங்க.

டாபிக் எதோ பைக் ஓட்டத்தெரியாத ஆண்கள் வெர்ஸஸ் ஓட்டத்தெரிந்த பெண்களாம்.

நமக்கு வாய்ச்சது அவ்ளோதான்னு நெனச்சுகிட்டோம்.

படு பயங்கரமான வாத பிரதி வாதங்கள், பிளிறல் பாலாவின் பொதுப்புத்தியைத் தகர்க்கும் பஞ்ச்சுகள், கார்க்கியின் கேள்விக்கணைகள், திருமாறனின் தீர்ப்புகள், டேவிடின் கண்ணீர்க்கதைகள், சிண்டெக்ஸின் மேதாவிலாசங்கள், ரேணுவின் ர்ர்ர்ர்ர்ர்ரவுண்டப்புகள் என ஷோ முழுவதுமே டிவிட்டர்களின் ராஜ்யம் தான் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

என்ன ஒன்று நம்மால் இதில் பங்கேற்க முடியவில்லையே என்ற குறை இருந்தாலும் பிரபல டிவிட்டர்கள் பங்கேற்ற இந்த மாபெரும் நிகழ்ச்சி மனநிறைவாகவே இருந்தது.

குறிப்பாக நம்முடைய ஃப்ரியா உடு மாமேவின் சரமாரி தாக்குதலில்  எதிரணி மட்டுமின்றி கோபிநாத்தே சற்று நிலைகுலைந்துதான் போய் விட்டார்.

கதை முழுவதையும் சொல்லி சுவாரசியத்தைக் குறைத்துவிட விரும்பவில்லை. மற்றவை சின்னத்திரையில்!

ஆக, நம்ம பிரபல டிவிட்டர்ஸ் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்த ‘நீயா நானா’ இந்த மாதத்திற்குள்ளாகவே எதேனுமொரு ஞாயிறு ராத்திரி ஒளிபரப்பப்படலாம்! 

ஹோப் யூ ஆல் எஞ்சாய் த ப்ரொகிராம்! பை ஃபார் நவ்.!

வாசித்த உங்களுக்கு ராஜனின் நெஞ்சார்ந்த நன்றிகள்.